மாநில மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரபரப்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் “கொரோனா பாதித்தவர்களை உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் வீட்டு தனிமைக்கு அனுமதிக்க கூடாது. கோவிட் கேர் சென்டர் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனாவின் அடுத்த அலையில் உயிரிழப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். அதேபோல் ஜி.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி யாரை பரிசோதிக்க வேண்டும் யாரை பரிசோதிக்க வேண்டாம் ( அறிகுறி இல்லை என்றால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் ) என்பதை முறையாக கடைபிடிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பில் இருந்த இடங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.