தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று புதிதாக 2,812 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,33,966-ஆக உள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து 11,154 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 33,48,419-ஆக உள்ளது. அதேபோல் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,904-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தற்போது 47,643 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று எந்த மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை. அதிகபட்சமாக சென்னையில் 546 பேரும், கோவையில் 523 பேரும், செங்கல்பட்டில் 238 பேரும், திருப்பூரில் 169 பேரும், ஈரோட்டில் 152 பேரும், சேலத்தில் 146 பேரும், திருவள்ளூரில் 123 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 5 பேரும், ராமநாதபுரத்தில் 10 பேரும், பெரம்பலூரில் 4 பேரும், தென்காசியில் 4 பேரும், மயிலாடுதுறையில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.