கிணற்றுக்குள் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பையனூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான நாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் நாராயணன் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாராயணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.