Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகளை யாரு பார்த்துப்பா….? கோபத்தில் கண்டித்த மனைவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனைவி திட்டியதால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மலத்தான்குளம் கிராமத்தில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சௌந்தர்ராஜன் தினமும் மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அவரது மனைவி மது குடித்துவிட்டு உங்களுக்கு ஏதாவது ஆனால் குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று சௌந்தர்ராஜனை திட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சௌந்தரராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சௌந்தரராஜன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |