தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடப்பேரிக்குப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான சுரேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆகாஷ் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பானுமதி தனது மகனுடன் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.