தமிழகத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை 25_ஆம் தேதியும் , புத்தாண்டு 1-ஆம் தேதியும் நடைபெறுகின்றது.மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில் தமிழக அரசு விடுமுறை நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் ஜனவரி 1_ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு , ஜனவரி 2-ஆம் தேதி மீண்டும் கல்லூரி , பல்கலைக்கழகம திறக்கப்படும் என்று பள்ளிகளைவித்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் 12 நாட்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது…