Categories
மாநில செய்திகள்

தொடர் மழை!…. தமிழகத்தின் முக்கிய அணைகளில் உபரி நீர் திறப்பு….. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் முக்கிய அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கு வினாடிக்கு 20,200 கன அடி தண்ணீர் வரும் நிலையில் வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாக இருக்கிறது. அதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேஆர்பி அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ‌இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 50:52 அடியாக இருக்கிறது.

இங்கு வினாடிக்கு 5,829 கன அடி தண்ணீர் வரும் நிலையில், 5,212 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 142 அடியாக இருக்கும் பட்சத்தில், தற்போது 137.05 அடி தண்ணீர் இருக்கிறது. இங்கு 1109 கன அடி தண்ணீர் வரும் பட்சத்தில், 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் வைகை அணையின் மொத்த அடி 71 அடியாக இருக்கும் பட்சத்தில் தற்போது 70.01 அடி நீர்மட்டம் இருக்கிறது. இதனால் அணைக்கு வரும் 4230 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 635 கன அடி தண்ணீர் வரும் பட்சத்தில், 1200 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 144 கன அடி தண்ணீர் வரும் பட்சத்தில், பாசனத்திற்காக 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடனா நதியின் நீர்மட்டம் 68 அடியாக இருப்பதால் அணைத்து வரும் 128 கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. சோலையார் அணைக்கு 830.41 கன அடி தண்ணீர் வரும் பட்சத்தில் 56.31 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பரம்பிக்குளம் அணைக்கு 1300 கன அடி தண்ணீர் வருவதால், 177 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பைக்காரா அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியாக இருக்கும் பட்சத்தில் தற்போது 88 அடியாகவும், சேர்வலார் அணையின் நீர்மட்டம் 156 அடியாக இருக்கும் பட்சத்தில் தற்போது 91.21 அடியாகவும் இருக்கிறது.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 387 கன அடி தண்ணீர் வரும் பட்சத்தில், 316 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 356 கன அடி தண்ணீர் வரும் பட்சத்தில், 450 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வரும் பட்சத்தில் 1400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் பெரும்பாலான பகுதிகளில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதோடு, வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து அப்பகுதிகளில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |