Categories
உலக செய்திகள்

“இந்தோனேசிய அதிபராக மீண்டும் ஜோகோ” பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து…!!

தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் இந்தோனேசிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோகோ விடோடோ_வுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தோனேசியாவில் அதிபர் பதவிக்கான காலம் முடிவடைந்ததையடுத்து  கடந்த மாதம் 17_ஆம் தேதி அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிபர் ஜோகோ விடோடா_ வை எதிர்த்து  ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஜெனரல் பிரபாவோ சுபியாந்தா வேட்பாளராக போட்டியிட்டார்.கடந்த 17_ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்தது.

இதையடுத்து வார கணக்கில் நீடித்து வந்த வாக்கு எண்ணும் பணி முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அதிபர் விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் இந்தோனோஷியா_வின் அதிபராக மீண்டும் ஜோகோ விடோடா தொடர்கிறார். அவருக்கு ஏராளமான மற்ற நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |