ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்திபனூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜ்(57) மற்றும் மன்சூர் அகமது(51) ஆகிய இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. மேலும் அவர்களை கைது செய்த போலீசார் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2,700 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.