Categories
உலக செய்திகள்

“ஓமிக்ரான் வைரஸ் எதிரொலி!”… பிரிட்டனில் கட்டாய தனிமைப்படுத்துதல் விதி…. கடுமையாக எதிர்க்கும் அமைப்புகள்…!!

பிரிட்டனுக்கு செல்லும் அனைத்து பயணிகளையும் கட்டாயம் தனிமைப்படுத்தும் விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரிட்டன் அரசு ஓமிக்ரான் பரவல் காரணமாக நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறது. மேலும், நாட்டிற்கு வந்த 5-வது நாளிலும், 8-வது நாளிலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் தற்போது நடைமுறைப்படுத்தியிருக்கும் கட்டுப்பாடுகளின் படி, இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட அனைத்து பயணிகளுக்கும் முதல் இரண்டு நாட்கள் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அமைச்சர்கள் குழுவும், நாட்டின் நிபுணர்கள் குழுவும் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் ஐந்து தினங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற விதி  பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், பணி வாய்ப்பு மற்றும் பொருளாதாரம் கடும் பாதிப்படையும் என்று சில அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |