Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்களே தளபதி…!.. 4 பிரிவில் சிக்கிய 8,000 பேர்… கதறும் தோழமைகள் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக  திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக இந்த பேரணிக்கு முழுமையாக அனுமதி அளிக்கப்படவில்லை என்று எழும்பூர் போலீசார் பேரணியில் பங்கேற்ற 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , கூட்டணி கட்சி தலைவர்கள் என 8 ஆயிரம் பேர் மீது  4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய தண்டனை கீழ் சட்டவிரோதமாக கூடுதல் பிரிவு  143 , பிரிவு 188 அரசு உத்தரவை மதிக்காதது , பிரிவு  341 அத்துமீறி நடந்து கொள்ளுதல் என சென்னை பெரு நகர சட்டப்பிரிவுகளின் என 4 பிரிவுகளில் கீழ் திமுக உட்பட தோழமை கட்சி தலைவர்கள் என 8000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |