Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? எப்போவுமே சோகம் தான்… கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கலர் பதி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழ்செல்வன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |