Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காலேஜுக்கு போறான்னு நினைச்சோம்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு நவீன் தனது வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து நவீன் தனது நண்பர்கள் 10 பேருடன் இணைந்து பல்லாவரம் பகுதியில் இருக்கும் ஒரு கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அதன் பின் அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நவீனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நவீனின் நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நவீன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |