நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக கோலி தலைமையிலான இந்திய அணி ஆக்லாந்து சென்றடைந்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பின், கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி ஆக்லாந்து சென்றடைந்ததை அணியின் கேப்டன் கோலி, புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அவருடன் சக வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் ஆகியோர் உடனிருந்தனர்.