Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செடி, கொடிகளை வெட்டிப்போட்ட பெண்…. மோதிக்கொண்ட இருதரப்பினர் …. போலீஸ் நடவடிக்கை….!!

வேனை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் தேவராஜபுரம் என்ற பகுதியில் வேன் உரிமையாளரான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான வேனை அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பவரின் வீட்டருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் லட்சுமி அவ்விடத்தில் செடி மற்றும் கொடிகளை வெட்டி போட்டதன் காரணமாக பாபுவால் வேனை அங்கு நிறுத்த முடியவில்லை. இது தொடர்பாக பாபு லட்சுமியிடம் கேட்டபோது  இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து லட்சுமியின் அண்ணன் முனீஸ்வரன் என்பவரும், பாபுவின் அண்ணன் பிரபாகரன் என்பவரும் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிகொண்டனர்.

அப்போது கோபமடைந்த முனீஸ்வரன் பிரபாகரனின் முதுகில் சிறிய கத்தரிக்கோலால் குத்திவிட்டார். இதனால் படுகாயமடைந்த பிரபாகரனை அருகிலுள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து இரு தரப்பினரும் பட்டாபிராம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்த புகார்களின் படி  வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முனீஸ்வரன், துரைராஜ், பிரபாகரன், விஜயன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |