நடிகை சித்ரா கொலை வழக்கில் ஹேம்நாத் தவிர பல பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்து நடிகர் ரக்சன் சிக்கியிருக்கிறார்.
சித்ராவின் செல்போனுக்கு வந்த மெசேஜ்கள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் செல்போனில் இருந்த வீடியோக்கள் ஆகியவற்றை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சித்ராவிடம் நெருங்கிப் பழகியவர்கள் இடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு அரசியல் பிரமுகர் சித்ராவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று டார்ச்சர் செய்து வந்தது அவர் அனுப்பிய மெசேஜ் மூலம் தெரியவந்தது.
கடை திறப்பு விழாக்களுக்கு அதிகம் செல்வதால் அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும் டார்ச்சர் செய்து உள்ளனர். இந்நிலையில் இளம் நடிகர் ஒருவரும் சித்ராவின் வீடியோவை காட்டி மிரட்டி வந்துள்ளதாக தெரியவருகிறது. விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து வரும் இளம் நடிகர் ரக்ஷன் சித்ரா உடன் டேட்டிங் சென்றிருக்கிறார். அங்கு சித்ரா உடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வைத்து, அவரை மிரட்டி வந்ததாக சித்ராவின் தோழி தெரிவித்திருக்கிறார். ரக்ஷனின் மிரட்டல் விவகாரம் சின்னத்திரை மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.