சித்தரத்தையை ஆயுர்வேத வைத்தியர்கள் இருமல், வீக்கம், வாதம், இழுப்பு, காய்ச்சல் போன்றவற்றிற்கு பயன்படுத்தி வந்தனர். சித்தரத்தையின் மற்ற மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு
- தொண்டையில் சேரும் அதிகப்படியான சளியை அகற்றிவிடும்.
- உடலின் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
- சரியான நேரம் பசியைத் தூண்டி விடும்.
- நெஞ்சிலிருக்கும் சளியை அகற்றும்.
- மூச்சுக்குழலில் அடைத்திருக்கும் சளியையும் வெளியேற்றும்.
- மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்கு இதுவே அருமருந்தாகும்.
- சித்தரத்தையை நன்றாக அரைத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் குறையும்.
- சித்தரத்தை வாயில் போட்டு மென்றால் வாய் நாற்றம் மறைந்துவிடும்.