Categories
உலக செய்திகள்

சீனாவின் டிக்டாக் நிறுவனம்… புதிய உத்தரவைப் பிறப்பித்த டிரம்ப்…!!!

சீனாவின் டிக்டாக் செயலி நிறுவனத்திற்கு எதிராக அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார்.

சீனாவை சார்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு உரிமையான டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, கொள்கை மட்டும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றது. அதன் காரணமாக அமெரிக்காவில் டிக் டாக் செயலியை தடை விதிப்பதாக அதிபர் முடிவு செய்திருந்தார். அதன் பின்னர் டிக் டாக் நிறுவனத்திற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். சென்ற வாரம் அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் டிக் டாக் நிறுவனத்திற்கு எதிரான புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் அடுத்து வருகின்ற 90 நாட்களுக்குள் டிக் டாக் நிறுவனத்திற்கு சொந்தமாக அமெரிக்காவில் இருக்கின்ற அனைத்து விதமான சத்துகளையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட்டான்ஸ் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்திருக்கின்ற முதலீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் மற்றும் அனைத்து வகையான அசையும் சொத்துக்கள் ஆகியவற்றை 90 நாட்களுக்குள் விலக்கிக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |