அமெரிக்க போர் விமானம் சீன வான்வெளியில் பறந்ததாக பீக்கிங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சென்ற வாரம் டெக்சாஸின் ஹூஸ்டனில் இருக்கின்ற சீனாவின் துணைத் தூதரகத்தை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சீன தூதரக அமெரிக்காவைச் சுற்றியுள்ள தூதரக வசதிகளைப் பயன்படுத்தி முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முதல் ராஜதந்திரம் மற்றும் தென் சீனக்கடல் வரையிலான தொடர்ச்சியான மோதல்களில் தற்போது தூதரக மூடல் மோதல்களும் இணைந்திருக்கின்றன. சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் விமர்சனங்களை செய்து வரும் நிலையில், இத்தகைய மோதல் வருகின்ற மாதங்களில் ஒரு ராணுவ மோதலாக மாறிவிடுமோ என்கிற அச்சத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.
இத்தகைய நிலையில் அமெரிக்க போர் விமானங்கள் சீனா மீது பறந்துள்ளன, ஷாங்காயில் இருந்து 76.5 கி.மீ தூரத்திற்குள் பறந்துள்ளன என பீக்கிங் பல்கலைக்கழக சிந்தனைக்குழு கூறியிருக்கின்றது.அமெரிக்காவின் பி -8 ஏ நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம் மற்றும் ஈபி -3 இ உளவு விமானம் தைவான் ஜலசந்தியில் நுழைந்தன, ஞாயிற்றுக்கிழமை ஜெஜியாங் மற்றும் புஜியான் கடற்கரைக்கு அருகே பறந்தன என தென் சீனக்கடல் மூலோபாய சூழ்நிலை ஆய்வின் பீக்கிங் பல்கலைக்கழக சிந்தனைக்குழு கூறியிருக்கின்றது. சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை இத்தகைய நடவடிக்கை பற்றி டுவிட் பதிவிட்டுருந்தது. அதன் பின்னர் புஜியான் மற்றும் தைவான் ஜலசந்தியின் தெற்குப் பகுதியை நெருங்கி உளவு விமானம் மீண்டும் பறந்து கொண்டிருப்பதாகக் கூறியது.
பி-8 ஏ ஷாங்காயிலிருந்து 76.5 கி.மீ தூரத்திற்குள் பறந்தது, மற்ற விமானம் புஜியனின் தெற்கு கடற்கரையிலிருந்து 106 கி.மீ தூரத்திற்குள் பறந்தது என கூறியுள்ளது. தொடர்ந்து 12 வது நாட்களாக அமெரிக்க ராணுவ விமானங்கள் பிரதான கடற்கரையை நெருங்கியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஆரம்பமாகி இருக்கின்றது. பீக்கிங் பல்கலைக்கழக சிந்தனைக்குழு ஒரு அமெரிக்க விமானப்படை ஆர்.சி -135 டபிள்யூ விமானம் – மற்றொரு உளவு விமானம் – தைவானின் வான்வெளியில் நுழைந்ததை யாராவது உறுதிசெய்ய முடியுமா என கேட்டது. இதற்கு தைவானிய பாதுகாப்பு அமைச்சகம் எத்தகைய கருதும் கூறவில்லை.இருந்தாலும் பிற்பகலில், நிறுவனம் மீண்டும் ஒரு டுவிட் பதிவிட்டது.
கடற்கரையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கின்ற குவாங்டாங்கை ஒரு ஈ.பி -3 விமானம் நெருக்கமான கண்காணிப்பை நிகழ்த்தி வருவதாகக் கூறி இருக்கின்றது. மேலும் , அமெரிக்க விமானப்படை ஈ -8 சி கண்காணிப்பு விமானங்கள் சென்ற வாரத்தில் நான்கு சந்தர்ப்பங்களில் குவாங்டாங் மாகாணத்தின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 185 கி.மீ அல்லது அதற்கும் குறைவாக பறந்துள்ளன என சிந்தனைக் குழு கூறியுள்ளது. இத்தகையை நேரத்தில் அமெரிக்க ராணுவம் தினமும் மூன்று முதல் ஐந்து உளவு விமானங்களை தென் சீனக் கடலுக்கு அனுப்புகிறது,” என சிந்தனைக்குழு கூறி இருக்கின்றது. அமெரிக்க ராணுவ விமானங்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து பல முறை சீனாவின் வான்வெளிக்கு அசாதாரணமாக வந்துள்ளன என தென் சீனா மார்னிங் போஸ்ட் குற்றம் சாட்டியுள்ளது.