தைவான் நாட்டின் வான் எல்லைக்குள் சீன நாட்டின் 30 போர் விமானங்கள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் எல்லை பகுதிக்குள் இந்த வருடத்தில் இரண்டாம் முறையாக சீனா ஊடுருவி இருக்கிறது. தைவான் அரசு, தங்கள் வான் பகுதிக்குள் புகுந்த 30 சீன போர் விமானங்களை தங்கள் போர் விமானங்களை கொண்டு தடுத்து நிறுத்தியதாக கூறியிருக்கிறது.
தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமானது, மின்னணு போர்முறை கருவிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள், 22 போர் விமானங்கள் போன்றவை சமீப நாட்களில் நடந்த ஊடுருவலில் புகுந்ததாக தெரிவித்திருக்கிறது. சீனா, தைவான் நாட்டின் மீது போர் தொடுக்க கூடாது என்று அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்ததற்குப் பின் இந்த ஊடுருவல் நடந்திருக்கிறது.