அண்மைக்காலமாக விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டும் சீனா நேற்று செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது.
சீனா அண்மைக்காலமாக விண்வெளி ஆராய்ச்சியில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. மேலும் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் லாங் மார்ச்-6 என்ற ராக்கெட் வாயிலாக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய நேரப்படி காலை 10.19 மணியளவில் வடக்கு சீனாவில் உள்ள தைவான் ஏவுதளத்தில் இருந்து SDGSAT-1 என்ற செயற்கைகோளை லாங் மார்ச்-6 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது.
மேலும் இந்த செயற்கைக்கோளை ‘குவாங்மு’ என்று அழைக்கின்றனர். இது 515 கி.மீ. உயர பூமியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் வெப்ப அகச்சிகப்பு மற்றும் குறைந்த ஒளி நிலை கேமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிலும் இதிலிருந்து கிடைக்கும் தரவுகள் மூலம் மனிதனின் நகர்ப்புற, குடியிருப்பு, கடலோர நடவடிக்கைகள், இயற்கையின் தாக்கங்கள் போன்றவற்றை கணக்கிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.