ஜூன் 12 2002 சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள். குழந்தைகளை குழந்தைகளாக அல்லாமல் தொழிலாளர்கள் ஆக்கிப் பார்த்த இந்த சமூகத்தை கண்டிக்க சட்டங்கள் பல இருந்தும், தொடரும் நிலையில் இன்னமும் உள்ளது. குழந்தைகள் தொழிலாளர்களாக மாற்றப்படுவதன் மூலம் உடல் ரீதியான மற்றும் மனரீதியான பாதிப்புகளைக் பெறுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அதனை தடுக்கும் வகையில் ஐநா அவையின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு 2002 ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 12 ஆம் நாளினை குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளாக அறிவித்தது.
குழந்தைகள் உங்களுக்கு பிறந்தவர்கள் தான். ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல என்பதை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று யுனிசெப் நிறுவனம் அறிவுறுத்துகிறது. அரசாங்கத்தால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து விட முடியாது என்பதால் அரசு சாரா நிறுவனங்களும் இதில் ஈடுபட்டு குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் நீக்க முயற்சித்து வருகின்றன. குழந்தைகள் தங்களுக்கான உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்யும் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்.