Categories
தேசிய செய்திகள்

“தலைமைச் செயலாளரிடம் கைவரிசை” ரூ. 90,000-த்தை அபேஸ் செய்ய முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!

தலைமைச் செயலாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட முயற்சி செய்த நபர் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அமீர் சுபானி. இவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை நேற்று முன் தினம் யாரோ சில மர்ம நபர்கள் ஹேக் செய்து திருட முயற்சி செய்துள்ளனர். அதன்படி ரூ. 90 ஆயிரம் பணத்தை திருடுவதற்கு முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் அமீர் சுபானி புகார் கொடுத்துள்ளார்‌.

அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி நய்யார் ஹஸ்நைன் தெரிவித்துள்ளார். மேலும் தலைமைச் செயலாளரின் வங்கி கணக்கிலேயே பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |