Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புதிதாக கொரோனா சிகிச்சை மையம்… நலம் விசாரித்த முதலமைச்சர்… மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு..!!

சேலம் மாவட்டத்திலுள்ள இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

சேலம் மாவட்டத்திலுள்ள இரும்பாலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தை கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள சேலம் வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இதனையடுத்து அவர் காரில் புறப்பட்டு சென்ற போது மகுடஞ்சாவடியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது பணியிலிருந்த மருத்துவர்களிடம் தொற்றை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்து மேலும் சுகாதார வசதிகள் பற்றியும் கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்ணிடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

Categories

Tech |