Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் 121 பேரின் பரிசோதனை முடிவுகள் வர இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 67 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்து , 5 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |