Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு ….!!

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மது வாங்க வருவோர் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியையும்  கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |