Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சென்னைக்குச் செல்ல பேருந்துகள் இல்லை – மக்கள் போராட்டம்..!!

கடலூரில் இருந்து சென்னைக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்ல அனுமதிக்கப்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. அப்போது மேலும் பல பயணிகள் அந்த பேருந்தில் ஏற முயன்றனர். ஆனால் இருக்கைகள் நிரம்பியதால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்ற பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து பயணிகள் திடீரென பேருந்தின் முன்பு தரையில் அமர்ந்து பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |