சென்னையில் இருந்து சேலம் வரை எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்திருக்கிறார்.
எட்டு வழி சாலை திட்டம் குறித்து ஏ.வ வேலு தெரிவித்திருப்பதாவது, சென்னை மாவட்டத்தில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுக்கான தலைவராக இருக்கும் திருப்புகழ் தலைமையில் இயங்கும் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருக்கும் பரிந்துரைகளின் படி, மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை முதல் சேலம் வரை எட்டு வழி சாலை திட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தற்போது வரை இத்திட்டம் தொடர்பில் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்த கடிதங்களும் வரவில்லை. மத்திய அரசு, கடிதம் அனுப்பினால் முதல்வரின் அறிவுரை படி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார்.