ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க இல்லாத அரசை அமைப்பதற்காக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசியுள்ளார்.
இப்போது இறுதி கட்ட தேர்தல் முடியும் நிலையில் ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்திய தேசம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தார். காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சரத் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் சந்திரபாபு நாயுடு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிற்கு சென்று அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசினார். ஆனால் அங்கு என்ன பேசினார்கள் என்பது தொடர்பாக இதுவரையில் தகவல் ஒன்றும் வெளியாகவில்லை.