Categories
கல்வி மாநில செய்திகள்

இனி கட் அடிக்க CHANCE இல்ல….. BIO-METRIC வருகைப்பதிவு கட்டாயம்…. DPI அதிரடி….!!

பயோமெட்ரிக் கருவிகளில் வருகையை பதிவு செய்யாத கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி அலுவலகங்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பயோமெட்ரிக்  கருவிகள் கல்வித் தகவல் மேலாண்மை இணைய தளத்துடன் இணைக்கப் பட்டிருப்பதால் வருகைப்பதிவு நேரம் தகவல் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றன. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என அனைவரும் தங்களது வருகையை இதில் பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில் பயோமெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்யாத பள்ளிகள் கல்வி அலுவலகங்களுக்கு  பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 28-ஆம் தேதிக்குள் வருகை பதிவு செய்யாததற்கான காரணத்தை அவர்கள் விளக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |