மர்ம நபர்கள் பெண்ணிடமிருந்து தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுண்டக்காமுத்தூர் பகுதியில் தேவிபாலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது ஸ்கூட்டியில் ரெட்பீல்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவரது ஸ்கூட்டியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் தேவிபாலாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தேவிபாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர் .