Categories
மாநில செய்திகள்

நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம் நிதி வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. இதற்கென தமிழக அரசு சார்பில் ரூ.3,250 கோடி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் 110 விதியின் கீழ் பல்வேறு நிவாரண திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக பல்வேறு அமைப்புகள் மற்றும் அமைப்பு சாரா தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவாளர் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு 1,33,043 நபர்களுக்கு இரண்டு தவணையாக தலா ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி, துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என்றும் நிதியுதவிக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி, துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்தவர்களில் விடுபட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தற்போது 2ம் முறையாக ரூ.1000 நிதி வழங்கப்படும் என்றும் அதற்கென ரூ.83 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |