Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகர் மாரியம்மன் கோவில் தெருவில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலுசாமி ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் பத்தலப்பள்ளி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் வேலுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் படுகாயம் அடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலுசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |