சுனாமியால் பாதிப்படைந்த டோங்கா தீவிற்கு மத்திய அரசு, 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளிப்பதாக அறிவித்திருக்கிறது.
டோங்கா என்ற பசிபிக் பெருங்கடல் நாட்டில், கடந்த சனிக்கிழமை அன்று கடலின் அடியில் இருக்கும் எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சுனாமி உருவாகி, எரிமலை பிழம்பு, சாம்பல் மற்றும் நெருப்பு கடலிலிருந்து வெளியேறியது. இதனால், டோங்காவில் சுனாமி அலை உருவானது.
எனவே, டோங்கா தீவிற்கு அருகேயுள்ள நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை, டோங்கோ தீவின் நிலை தொடர்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறது. மேலும், 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளிப்பதாக தெரிவித்துள்ளது.