Categories
உலக செய்திகள்

ஆஹா! இதல்லவோ கண்டுபிடிப்பு…. கெட்டுப்போன உணவிலிருந்து சிமெண்ட் தயாரிப்பு… ஜப்பான் ஆய்வாளர்கள் அசத்தல்…!!!

ஜப்பான் நாட்டின் ஆய்வாளர்கள் கெட்டுப்போன உணவுகளிலிருந்து சிமெண்ட் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

கான்கிரீட் தயாரிக்க மேற்கொள்ளப்படும் செயல்முறைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்படையக் கூடிய வாயுக்கள் வெளியேறுகின்றன. இதனால், சிமெண்டிற்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஒன்றை கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெற்றியை நெருங்கி விட்டனர்.

அதாவது வீடுகளில் மீதமாகும் உணவுகள் மூலம் சிமெண்டை உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். வீண் செய்யப்படும் உணவுகளில் மூன்று தொழில்நுட்பங்களை உட்படுத்தி சிமெண்ட் உருவாக்க முடியும் என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அழுகிப்போன உணவில் சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்யும் வாயுக்கள் வெளியேறுவது குறைவாக இருக்கும். எனவே, பூமி வெப்பமயமாதல் போன்ற பல நெருக்கடிகளுக்கு இதன் மூலம் தீர்வுக்காண முடியும் என்று தெரிவித்துள்ளனர். இறுதிகட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் இவர்கள் இந்த ஆய்வு விரைவில் முழுமை பெறும் என்று கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |