Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற கல்லூரி மாணவர்…. மர்ம நபர்களின் செயல்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

செல்போன் பறித்து விட்டு தப்பி ஓடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து விட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வேலாயுதபுரம் மாரியம்மன் கோவில் அருகில் விஜயகுமார் நடந்து சென்றுள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் விஜயகுமாரின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் பொதுமக்கள் தப்பியோடிய 2 பேரில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர்.

அதன்பின் அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியில் வசிக்கும் மந்திரமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய நபர் கோவில்பட்டி சிந்தாமணி நகரில் வசிக்கும் மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மூர்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |