திருநெல்வேலி மாவட்ட பனங்குடியில் மைக்கல் மதன் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சினேகாவும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சினேகா அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதால் அதனை கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது. அதன்படி வியாழக்கிழமை சினேகா குழந்தையுடன் மைக்கேல் மதன் சிங்கின் சகோதரி வீட்டுக்கு சென்று இருந்ததாக கூறப்படுகிறது. அப்போதும் அவர் போன் பேசிக் கொண்டிருந்தார். இதனையடுத்து மைக்கில் மதன்சிங் மனைவியிடம் இருந்து போனை பிடிங்கி ஆவேசமாக உடைத்துள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த சினேகா கிளம்பி தனது வீட்டிற்கு வந்து அறையை பூட்டிக்கொண்டு உள்ளே தூக்கிட்டு கொண்டார். இவரின் அலரும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சினேகாவை தூக்கில் இருந்து இறக்கி பனங்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றார்கள்.
ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சினேகாவின் உறவினர்கள், சினேகாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் இன்று அடித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் மைக்கேல் மதன் சிங்கை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சேரன்மகாதேவி துணை ஆட்சியர் முகமது சபீர் ஆலம் நேரடியாக வந்து சினேகாவின் தாய்-தந்தையரிடம் விசாரணை நடத்தினார். இறந்த சினேகாவின் உடலில் வேறு எங்க காயம் இல்லை தூக்கிட்டு கொண்ட கழுத்தில் மட்டுமே காயம் இருந்தது. இருப்பினும் உடற்கூறு பரிசோதனைக்காக பாளை மருத்துவமனை கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சினேகா செல்போனை உடைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கணவர் கொலை செய்தாரா? என்பது குறித்து பணகுடி போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.