Categories
தேசிய செய்திகள்

CBSE மாணவர்களுக்கு இதற்காக கால அவகாசம்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடித்துக்கொள்ள வேண்டாம் என பல்கலைக்கழகம் மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என யு.ஜி.சி வலியுறுத்தியுள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத சூழ்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |