மராட்டிய மாநிலத்திற்குள் நுழைந்து வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதியை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் உத்தப்தாக்கரே அறிவித்துள்ளார்.
உத்தவ்தாக்கரேவின் இந்த அறிவிப்பால் சிபிஐ அதிகாரிகள் தன்னிச்சையாக நுழைந்து எந்த வழக்குகள் தொடர்பாகவும் இனி விசாரணை மேற்கொள்ள முடியாது. மும்பை உள்ளிட்ட இடங்களில் சில தொலைக்காட்சிகள் செய்த டிஆர்பி மோசடி தொடர்பான வழக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டது. ஆனால் வழக்கை திடீரென சிபிஐக்கு உத்தரபிரதேச காவல்துறை கொடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து மராட்டியத்தில் சிபிஐயின் தன்னிச்சியை விசாரணைக்கு உத்தவ்தாக்கரே தடை விதித்துள்ளார். மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சூழலில் தடை உத்தரவை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிறப்பித்துள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் மேற்கு வங்க மாநிலங்கள் சிபிஐக்கு வழங்கி வந்த புது சேவையை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.