Categories
உலக செய்திகள்

கலிஃபோர்னியாவில் அதிர்ச்சி… பிறந்தநாள் பரிசாக துப்பாக்கிச் சூடு… 2 மாணவர்கள் மரணம்..!

கலிஃபோர்னியா மாகாணத்தின் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சவுகஸ் (Saugus) மேல்நிலைப்பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய 16 வயது மாணவன், திடீரென்று தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அருகிலிருந்த மாணவர்களை நோக்கிச் சுடத்தொடங்கினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு 16 வயது மாணவியும், ஒரு 14 வயது மாணவனும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரூ 72,000,00,00,00,000….. ”பயங்கரவாதத்தால் இழப்பு”….. பிரதமர் மோடி தகவல் …!!

உலகெங்கிலும் அரங்கேறிய பயங்கரவாத தாக்குதல்களால் உலக பொருளாதாரம் ரூ.72 லட்சம் கோடி (1 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பை சந்தித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 11ஆவது பிரிக்ஸ் மாநாடு பிரேசிலில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:சர்வதேச நாடுகளின் அமைதி, வளர்ச்சிக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது. உலக அளவில் அதிகரித்துவரும் […]

Categories
உலக செய்திகள்

அடடே..!.. நீங்களுமா ? ”ஆன்லைன் ஷாப்பிங் செய்த குரங்கு” சீனா_வில் வினோதம் …!!

வனப் பூங்காவில் பாதுகாவலரின் செல்ஃபோனை உபயோகித்து, குரங்கு ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனநாட்டின் சாங்ஜோ பகுதியில் யான்செங் (Yancheng Wild Animal World) வனவிலங்கு பூங்கா இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் பூங்கா பாதுகாவலர் எல்வி மெங்மெங் (Lv Mengmeng), சீன இ-காமர்ஸ் தளத்தில் தனக்குத் தினசரி தேவைப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ப்ரைமேட் (குரங்கு) பசியுடன் இருப்பதை உணர்ந்த பாதுகாவலர் செல்ஃபோனை, அங்கேயே வைத்துவிட்டு உணவு எடுக்கச் சென்றுள்ளார். பின்னர், […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன பல் ”மூக்கில் வளரும் வினோதம்” மருத்துவர்கள் வியப்பு …!!

மூச்சுவிடமுடியவில்லை என்று மருத்துவமனையில் பரிசோதித்த நபருக்கு, நாசியில் பல் வளர்ந்துள்ளதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீனாவில் வசித்து வருபவர் ஜாங் பின்ஷெங் (Zhang Binsheng)(30). இவருக்குச் சமீப காலங்களாக மூச்சு விட முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும், மூக்குப் பகுதியில் அழுகிப் போன துர்நாற்றம் வருவதைக் கவனித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மருத்துவரை அணுகிய ஜாங்க்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, அங்குப் பல் வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் உடல்நிலை கவலைக்கிடம்..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் உடல்நிலை கவலைக் -கிடமாக உள்ளது என பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல் நவாஸ்) கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, மருத்துவச் சிகிச்சைக்காக அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. கவலைக்கிடமான நிலையில் 2 வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்த […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி ரிப்போர்ட்…. ஈராக் போராட்டத்தில் 300 பேர் கொலை… 15,000 பேர் காயம்.!!

ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டத்தில் இதுவரையில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. ஈராக்கில் அதிகரித்துவரும் வேலையின்மை, ஊழல், தவறான நிதி மேலாண்மை உள்ளிட்ட பிரச்னைகளைக் காரணம்காட்டி, அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஒருமாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் இதுவரையில் 300 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் ஈராக்கின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈராக் அரசு, […]

Categories
உலக செய்திகள்

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நாள் – கூகுள் டூடுல் நினைவூட்டும் அதன் பின்னணி என்ன?

உலகின் ஒவ்வொரு பெரு நிகழ்வுகளையும் நினைவூட்டும் கூகுள் டூடுல், இன்று பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் வரை கலை சித்திரங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. 1989ஆம் வருடம், நவம்பர் 9, மகிழ்ச்சியான மக்கள் கூட்டம் கூட்டமாக முழக்கங்கள் எழுப்பியபடி பெர்லின் சுவர் மீது ஏறுவதையும், எண்ணற்ற கிழக்கு பெர்லினைச் சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்டிருந்த இடங்களைக் கடந்ததையும் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஊடகங்களில் கண்டிருப்பர். அதை கூகுளின் டூடுல் நினைவூட்டுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை ஜெர்மனி ஒரே நாடாக […]

Categories
உலக செய்திகள்

காலிஸ்தான் செயலிக்கு பின்னால் பாகிஸ்தான் ….!!

காலிஸ்தான் செயலிக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2020 சீக்கிய வாக்கெடுப்பு என்ற பெயரில் 7.54 எம்.பி. அளவுகொண்ட செல்போன் செயலி ஒன்றை ருமேனியாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். இது இந்தாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் காலிஸ்தான் பிரிவினைவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.இந்தச் செயலியை கூகுளின் பிளே ஸ்டோரிலும் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலியை பதிவிறக்கும்போது, ​​பதிப்பு 3.001 பயன்பாடு கேமரா, இருப்பிடம், நெட்வொர்க் அணுகல் மற்றும் நெட்வொர்க் இணைப்பு […]

Categories
உலக செய்திகள்

நவம். 9_இல் ”கர்தார்பூர் நிகழ்ச்சி” இம்ரான் தேர்வு செய்தது ஏன் ? பரபரப்பு தகவல் …!!

கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு நவம்பர் 9ஆம் தேதியை இம்ரான் கான் தேர்ந்தெடுக்க காரணம் வெளியாகியுள்ளது. சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் கா்தார்பூரில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதி சுதந்திரத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் வசம் சென்றது. இதையடுத்து இந்த யாத்திரையை மேற்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தும் நோக்கில், பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் […]

Categories
உலக செய்திகள்

வடகிழக்கு சிரியாவில் தொடர் வன்முறைகள்- ஐநா கவலை.!!

வடகிழக்கு சிரியாவில் நிகழும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களினால் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, குர்து படையினருக்கும் துருக்கி ஆதரவு படையினருக்கும் இடையே சண்டை வலுத்தது. இந்தத் தாக்குதலில் இதுவரை 305 போர் வீரர்கள், 353 துருக்கி ஆதரவாளர்கள், சிரியா படையைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை நிறுத்தும்வகையில், ரஷ்ய தலைமைகளின் கீழ் அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஒரு சில ஒப்பந்தங்கள் போடப்பட்டன. […]

Categories
உலக செய்திகள்

தான் அதிபரானால் இலங்கைக்கு புதிய பிரதமர் – சஜித் பிரேமதாச..!!

‘இலங்கை அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், புதிய பிரதமரை தேர்வு செய்வேன்’ என ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறினார். இலங்கை அதிபர் வேட்பாளர் தேர்தல் வருகிற 16ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரன் கோத்தபாய ராஜபக்ச களம் காண்கிறார். கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக கோத்தபாய ராஜபக்ச மக்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். அவர் தனது […]

Categories
உலக செய்திகள்

அதிர்ந்து போன அமெரிக்கா.. ”ஆதிக்கம் செலுத்த போகும் கம்யூனிசம்”.. ஆய்வில் தகவல் …!!

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் இடதுசாரிகளுக்கு ஒரு மகத்தான ஆதரவு இருப்பது வெளியாகியுள்ளது. கம்யூனிச எதிர்ப்பை முன்னெடுக்கும் Victims of Communism Memorial Foundation என்னும் அமெரிக்க அமைப்பு கம்யூனிசக் கோட்பாடுகள் குறித்து அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள கருத்தை அறியும் விதமாக சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.கணக்கெடுப்பின் முடிவுகள் மக்களின் கம்யூனிச எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் என்று அந்த அமைப்பு எண்ணியது ஆனால் அந்தக் கணக்கெடுப்பு தந்த விவரங்கள், முற்றிலும் அதற்கு மாறானவையாக இருந்தது. அந்த ஆய்வில் 36 விழுக்காடு […]

Categories
உலக செய்திகள்

குரூர கிளர்ச்சியாளனுக்கு 30 ஆண்டுகள் சிறை…. சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மனித உரிமை மீறில், பாலியல் வல்லுறவு உள்ளிட்ட போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக முன்னாள் காங்கோ கிளர்ச்சிப் படை தலைவன் பாஸ்கோ நடகன்டா-வுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் காங்கோவின் தாது வளமிக்க இடாரு பகுதியைக் கைப்பற்ற பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் ஒன்றுக்கொன்று போரிட்டு வந்தன. அதில், யூனியன் ஆஃப் காங்கோலீஸ் பேட்ரியார்ஸ் (Union of Congolese Patriots- UCP) குறிப்பிடத்தக்கது. இந்த கிளர்ச்சி அமைப்பின் ராணுவ […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

”உளவு பார்க்கும் ட்விட்டர்” அதிர்ச்சியில் உலக நாடுகள் ….!!

ட்விட்டர் ஊழியர்களை வைத்து சவுதி அரசு, ஆயிரக்கணக்கான ட்விட்டர் வாசிகளின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக அமெரிக்க நீதித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. சவுதி தலைமையை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்க அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், விமர்சகர்களைக் கண்டறிந்து களையும் நோக்கில் சவுதி அரசு ட்விட்டரில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் இருவரை வைத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க ட்விட்டர் பயனாளிகளின் கணக்குளை உளவு பார்த்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளதாக […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரூ 13,000,00,00,000.. ”தற்கொலை செய்துகொள்வேன்” மிரட்டும் மோசடி மன்னன் …!!

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என நிரவ் மோடி மிரட்டல் விடுத்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, லண்டனுக்குத் தப்பிச்சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை அங்கிருந்து நாடு கடத்தி, இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.இந்நிலையில், இதுதொடர்பாக வழக்கில் கடந்த மார்ச் மாதம் நிரவ் மோடியை லண்டன் காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது லண்டனின் வானண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் […]

Categories
உலக செய்திகள்

காதுக்குள் வேதனை …. ”குடும்பம் நடத்திய கரப்பான்” சீனாவில் வினோதம் …!!

மனிதனின் காதுக்குள் 10க்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் குடும்பமாக வசித்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் ஹுய்சோ(Huizhou) பகுதியில் வசித்து வருபவர் எல்வி (Lv). இவர் திடீரென்று காது வலியின் காரணமாகத் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். உடனடியாக தனது வீட்டில் வசிக்கும் நபர்களைக் காதில் டார்ச் லைட் அடித்துப் பார்க்கச் சொல்லிருக்கிறார். அப்போது எல்வியின் காதில் பெரிய கரப்பான் பூச்சி ஒன்று இருந்துள்ளதைப் பார்த்து, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு எல்வியை அழைத்துச் சென்றுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

யாருப்பா நீ…. ”இம்புட்டு பெருசா இருக்க” ரூம் இல்ல போ ……. அவதிப்பட்ட கிரிக்கெட் ரசிகர் …!!

ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியைக் காணவந்த எட்டு அடி உயரம் கொண்ட ரசிகர் ஒருவர் விடுதி கிடைக்காமல் அவதியடைந்தார். ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாஜ்பாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் ஒருநாள் போட்டிகளைப் பார்ப்பதற்காக ஆப்கானின் காபூல் நகரைச் சேர்ந்த சேர் கான் என்ற […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கர்தார்பூர் புனிதப் பயணத்திற்கு பாஸ்போர்ட் கட்டாயம்..!!

கர்தார்பூர் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்திய சீக்கியர்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கட்டாயம் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப்பையும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் கோயிலையும் இணைக்கும் வழித்தடம்தான் கர்தார்பூர் சாஹிப் வழித்தடம். இதன் வழியாக, இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப்புக்குச் சென்று அங்கு வழிபட முடியும்.சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குரு நானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ட்ரம்ப் பதவி தப்புமா?… மக்கள் முன்னிலையில் விசாரணை..!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை அடுத்த வாரம் முதல் மக்கள் முன்னிலையில் நடைபெறும் என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். இந்தச் சூழலில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை (Vlodimir Zelensky) ட்ரம்ப் வலியுறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நிரவ் மோடிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு ….!!

நிரவ் மோடி சார்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்குத் தப்பிச்சென்றவர் வைர வியாபாரி நிரவ் மோடி.இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்துமாறு இந்திய அரசு வைத்திருந்த வேண்டுகோளின் படி லண்டனில் கடந்த மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது லண்டனின் வாண்டஸ்வொர்த் சிறையில் […]

Categories
உலக செய்திகள்

மக்கள் முன்பு ட்ரம்ப் பதவி நீக்க விசாரணை – ஜனநாயகக் கட்சி

அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை அடுத்த வாரம் முதல் மக்கள் முன்னிலையில் நடைபெறும் என ஜனநாயகக் கட்சியினர் அறிவித்துள்ளனர். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.இந்நிலையில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை ( Vlodimir Zelensky) ட்ரம்ப் வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.அமெரிக்க சட்டப்படி, ஒரு […]

Categories
உலக செய்திகள்

வர்த்தக ஒப்பந்தம்: சீன அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு …..!!

அமெரிக்கா-சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன.இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தாயாராகி […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து… திணறும் தீயணைப்பு வீரர்கள்..!!

நைஜீரியாவின் முக்கிய வணிக வளாகமாக கருதப்படும் பாலகோன் மார்க்கெட்டில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரின் முக்கிய பகுதியாக இருப்பது பாலகோன் மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் விலை உயர்ந்த ஆடைகளையும், காலணிகளையும் விற்கும் ஐந்து மாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் நேற்று காலை திடீரென தீ பற்றியது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

வால்மார்ட் நிறுவனத்தில் இருந்து விலகினார் ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்..!!

கடந்த வாரம் பெண் ஊழியர் ஒருமித்த உறவு வைத்துக்கொண்ட ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக், வால்மார்ட் நிறுவனத்தில் வகித்து வந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். உலகின் மிகப்பெரிய துரித உணவுச் சங்கிலி நிறுவனமான மெக்டொனால்ட் கார்ப், கடந்த வாரம் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பதவி நீக்கம் செய்தது. அதற்கு பெண் ஊழியர் உடன் ஒருமித்த உறவு வைத்துக்கொண்டதே, ஸ்டீவின் இந்தப் பதவி நீக்கத்துக்குக் காரணம் என அந்நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், ஸ்டீவ் முன்பே பதவி வகித்துக்கொண்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

வர்த்தக ஒப்பந்தம்…. சீன அதிபருக்கு டிரம்ப் அழைப்பு..!!

அமெரிக்கா-சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன. இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மகளுக்கு பிணை…!

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மகளான மரியம் நவாஸுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சவுத்ரி சர்க்கரை ஆலை பணமோசடியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அக்.31ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாவஸின் மகள் மரியம் நவாஸ் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் […]

Categories
உலக செய்திகள்

இந்திய ஊடகங்கள் சொல்வது பொய் – பாகிஸ்தான் ….!!

கர்தார்பூரின் அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறான ஒன்று என்றும் பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. நரோவல் மாவட்டம் கர்தார்பூரிலுள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வர். இந்தாண்டு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல சீக்கியர்கள் கர்தார்பூர் செல்லவுள்ளனர்.இந்நிலையில், நரோவல் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் முகாம்கள் உள்ளதாகவும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், இந்தத் தகவல்களைப் பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. இது […]

Categories
உலக செய்திகள்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா….!!

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்து உருவாக்கப்பட்டதுதான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா உட்பட 200க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. மேலும், 2016ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் எந்தவொரு நாடும் இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேற முடியாது. 2017ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளதால் அந்த ஒப்பந்தத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோ 2.0: இந்தியா- கனடா உறவில் தொடரும் பதற்றம்….!!

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் கனடா – இந்தியா உறவு எவ்வாறு இருக்கும் என காணலாம். ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடாவின் லிபரல் கட்சி அக்டோபர் 21ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. முடிவுகளும் கருத்துக் கணிப்புகளும் அவ்வாறே உறுதிப்படுத்தின. ஆனால், மக்கள் முடிவுகள் லிபரல் கட்சிக்கு புது தெம்பை அளித்துள்ளன. அக்கட்சி 157 இடங்களுடன் தனிப்பெரும் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் கடத்தப்பட்ட இந்தியத் தொழிலாளி மரணம்….!!

மியான்மரில் புரட்சியாளர்களால் கடத்தப்பட்ட இந்தியத் தொழிலாளி உயிரிழந்தார். மியான்மர் நாட்டில் புரட்சிப்படையினரான அரக்கன் ராணுவத்துக்கும் அரசுக்கும் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ஐந்து இந்திய கட்டட தொழிலாளர்கள், ஒரு மியான்மர் எம்.பி. உள்பட 10 பேர் கடத்தப்பட்டனர்.இந்நிலையில் நான்கு இந்தியர்கள் உள்பட எட்டு பேரை புரட்சிப் படையினர் விடுவித்தனர். இதனால் கடத்தப்பட்ட ஒரு இந்தியர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. இத்தகவலை அரக்கன் ராணுவம் உறுதி செய்தது. தங்கள் குறி அப்பாவி மக்கள் இல்லை என்றும் மியான்மர் […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதி பாக்தாதியின் சகோதரி கைது….!!

 ஐ.எஸ்., ஐ.எஸ். பயங்கர அமைப்பின் தலைவரும், அமெரிக்க ராணுவப் படையால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியுமான பாக்தாதியின் சகோதரி கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள சிரியாவின் முக்கியப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் களம் கண்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அமைப்பின் தலைவர், அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த நிலையில் அவரின் சகோதரி 65 வயதான ராஸ்மியாவை துருக்கி […]

Categories
உலக செய்திகள்

பயங்கரமான குழந்தையா? மன்னிப்பு கோரிய நியூசிலாந்து கஃபே …!!

வாடிக்கையாளரின் குழந்தையை பயங்கரமான குழந்தை என்று கட்டண ரசீது வழங்கியதற்குக் காப்பி சூப்ரீம் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியிலுள்ள காப்பி சூப்ரீம் என்ற கஃபே கடைக்குத் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் கிம்பர்லி ஸ்ஸே. அப்போது, கஃபே ஊழியர்கள் வழக்கமான விலையை விட அதிகமாகக் கூறியதால் அவர்களிடம் ரசீது கேட்டுள்ளார்.அப்போது அவருக்கு வழங்கப்பட்ட ரசீதுதான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதில் ‘Fam w the terrifying kid’, அதாவது ‘பயங்கரமான குழந்தையுடன் வந்த குடும்பத்துக்கு’ (Family […]

Categories
உலக செய்திகள்

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல… இந்திய ஊடகம் சொல்வது பொய்… மறுக்கும் பாகிஸ்தான்..!!

கர்தார்பூரின் அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறான ஒன்று என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. நரோவல் மாவட்டம் கர்தார்பூரிலுள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வர். இந்தாண்டு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல சீக்கியர்கள் கர்தார்பூர் செல்லவுள்ளனர். இந்நிலையில், நரோவல் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் முகாம்கள் உள்ளதாகவும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், இந்தத் தகவல்களைப் பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மகளுக்கு பிணை..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மகளான மரியம் நவாஸுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சவுத்ரி சர்க்கரை ஆலை பணமோசடியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அக்.31ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாவஸின் மகள் மரியம் நவாஸ் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் […]

Categories
உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் அதிர்ச்சி… சரக்கு லாரியில் 41 அகதிகள் உயிரோடு கண்டுபிடிப்பு..!!

வடக்கு கிரீஸில் குளிர்சாதனப் பெட்டி கொண்ட சரக்கு லாரியில் 41 அகதிகள் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டின் வடக்குபகுதியில்  நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு டிரக்கை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். சோதனையில், சரக்கு லாரியின் குளிர்சாதனப் பெட்டிக்குள் 41 அகதிகள் உயிருடன் இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சரக்கு லாரியிலிருந்து மீட்கப்பட்ட அகதிகள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிரீஸ் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பாகிஸ்தானுக்கு சென்ற 1100 இந்தியர்கள்…!!

சீக்கிய மதத்தின் நிறுவிய பாபா குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக 1100 இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் சென்றுள்ளனர். சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குருநானக் தேவ்-இன் 550ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நாகர் கீர்த்தன் ஊர்வலத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 1100 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.இதற்காக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியர்கள், பஞ்சாப் மாநிலம் லூதியானா மற்றும் அம்ரிஸ்டர் வழியாக சென்றனர். இதுகுறித்து ETPB துணை […]

Categories
உலக செய்திகள்

கழுகு தூக்கி வந்து கீழே போட்ட உயிரினம் – வளர்த்த பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி….!!

கழுகு தனது தோட்டத்தில் தூக்கி வந்து போட்ட உயிரினத்தை நாய் என நினைத்து வளர்த்த பெண்ணுக்குப் பரிசோதனையில் கிடைத்த தகவல் அதிர்ச்சி அளித்தது. ஆஸ்திரேலியாவில் வடகிழக்கு மெல்பெர்ன் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் வீட்டின் தோட்டத்தில் விலங்கின் சத்தம் கேட்டுள்ளது. இச்சத்தத்தைக் கேட்டு வெளியே சென்ற பார்த்த பெண் ஆச்சரியம் அடைந்தாள். தோட்டத்தில் குட்டி நாய்க்குட்டி மாதிரி விலங்கு ஒன்று அடிபட்ட நிலையிலிருந்துள்ளது. வானத்தில் பறந்து கொண்டிருந்த கழுகைப் பார்த்தபிறகு தான் புரிந்துள்ளது. கழுகு தான் அந்த […]

Categories
உலக செய்திகள்

ரூ 12,00,000 செலவு….. 200 இடத்தில் பச்சை குத்தி …. பார்வையை இழந்த பெண் …!!

கண் விழிகளில் பச்சை குத்தி மூன்று வாரங்கள் கண் பார்வையை இழந்து தவித்துள்ளார் ஆஸ்திரேலிய இளம்பெண். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசித்து வருபவர் அம்பர் லுக் (Amber Luke). இவர் தன்னுடைய உடல் பாகங்கள் அனைத்தையும் அழகாக மாற்ற வேண்டும் என முடிவு செய்து உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். அவர் தன் உடலில் 200 இடங்களில் பச்சை குத்தியது மட்டுமல்லாமல் உதடு, கன்னம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஃபில்லர்ஸ் (fillers), காது பகுதியில் ஸ்பைக் […]

Categories
உலக செய்திகள்

ரூ 12,00,000….. உதடு, கன்னம் என 200 இடம் ….. பச்சை குத்தி பார்வை போன பரிதாபம் …!!

கண் விழிகளில் பச்சை குத்தி மூன்று வாரங்கள் கண் பார்வையை இழந்து தவித்துள்ளார் ஆஸ்திரேலிய இளம்பெண். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசித்து வருபவர் அம்பர் லுக் (Amber Luke). இவர் தன்னுடைய உடல் பாகங்கள் அனைத்தையும் அழகாக மாற்ற வேண்டும் என முடிவு செய்து உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். அவர் தன் உடலில் 200 இடங்களில் பச்சை குத்தியது மட்டுமல்லாமல் உதடு, கன்னம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஃபில்லர்ஸ் (fillers), காது பகுதியில் ஸ்பைக் […]

Categories
உலக செய்திகள்

இம்ரான் கான் அரசை பதவியிறங்கும்படி மிரட்டும் மௌலானா ஃபஸ்லர் ….!!

பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசை கலைக்குமாறும் இல்லையெனில் அந்நாட்டை முடக்கிவிடுவோம் எனவும் ஜமித் உலெமா இ இஸ்லாம் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி (நவாஸ்), அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பெஷாவர் நகரில் இன்று நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜமியாத் உலெம் இ இஸ்லாம் – […]

Categories
உலக செய்திகள்

காதலால் தொலைந்த தலைமைப் பதவி! – ஈஸ்டரின் கதை

மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், அதன் தலைமை செயல் அலுவலர் ஈஸ்டர் ப்ரூக்கை பதவியிலிருந்து அதிரடியாக வெளியேற்றியுள்ளது. உலக நாடுகளில் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற துரித உணவு (ஃபாஸ்ட் ஃபுட்) கடைதான் மெக்டொனால்ட்ஸ் உணவகம். இந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தலைமை செயல் அலுவலரான ஈஸ்டர் ப்ரூக்கை, நிறுவன தலைமைக் குழு அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும், தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் இவரை விலக்கியுள்ளது. இவருக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் இனி எந்தவிதமான சம்பந்தமோ, தொடர்போ கிடையாது என நிறுவன தரப்பில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை நோக்கி கண்களைத் திருப்பும் உலக நாடுகள்….!!

பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீட்டைத் தூண்ட இந்த ஆண்டுக்குள் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு (Regional Comprehensive Economic Partnership) ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிக்க, நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் ஆசிய பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 16 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சி […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தமிழர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு…..!!

நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வரும் நவம்பர் 16ஆம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது ஆதரவை தற்போது ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.கட்சியினருடன் இன்று நடைபெற்ற மத்திய செயற்குழுவைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற கட்சியினரின் அறிக்கையைவிட ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை தமிழர்களுக்கு ஓரளவு நன்மை […]

Categories
உலக செய்திகள்

“சந்தேக மரணம்” இளம்பெண் கழுத்தை நெருக்கி கொன்ற மலைப்பாம்பு…… போலீசார் தீவிர விசாரணை……!!

அமெரிக்காவில் வீட்டில் வளர்த்த மலைப்பாம்பு கழுத்தை இறுக்கி அதில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்கா இண்டியான பகுதியைச் சேர்ந்த லாரா என்ற இளம்பெண் தனது வீட்டில் 140 க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்தார். அதிலும் செல்லப்பிள்ளையாக மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார் லாரா. இந்நிலையில் கடந்த வாரம் அவரது வீடு பூட்டப்பட்டு உள்ளே துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டை உடைத்து […]

Categories
உலக செய்திகள்

இன்று சென்றடையும்……. விண்வெளியில் சமையல் செய்ய…… அதிநவீன சாதனம்……!!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட அதி நவீன சமையல் சாதனம் இன்று அவர்களை சென்றடைகிறது. அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சர்வதேச விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றை தயாரிக்க மாவு, மைக்ரோவேவ் ஆகியவற்றை அமெரிக்கா வெர்ஜினியா பகுதியிலிருந்து 3.7 டன் எடை கொண்ட சைக்னஸ்விண்கலம் மூலம் அனுப்பி வைத்தது. இந்நிலையில் சைக்னஸ் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பம் ஈர்ப்புவிசை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”முதலீடு செய்ய உகந்த நேரம் இது” அழைப்பு விடுத்த மோடி …!!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம் என பிரதமர் மோடி தாய்லாந்து தொழில் அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்ற 16 வது ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.அப்போது பிற நாட்டுத் தலைவர்களுடன் ஒரே மேடையில் வீற்றிருந்த மோடி அவர்களுடன் உற்சாகமாக கைகுலுக்கினார். இதையடுத்து இந்தியா ஆசிய நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை வரவேற்பதாகவும், இந்தியா பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா மேற்கொள்ளும் கொள்கைகள் முக்கியமானதாக உள்ளது என்று மோடி தெரிவித்தார். கடல் வழிப் […]

Categories
உலக செய்திகள்

‘கிரேட்டா நம் காலத்துக்கான தலைவர்’ – புகழ்ந்து தள்ளிய லியனார்டோ டிகாப்ரியோ

கிரேட்டா தன்பர்க் நமது காலத்துக்கான தலைவர் என்றும்; அவரது பேச்சு பருவ நிலை மாற்றம் குறித்து நாம் உணர இறுதி அழைப்பு என்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பருவ நிலை செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்கை சமீபத்தில் சந்தித்து உரையாடியுள்ளார். கிரேட்டா தன்பெர்க்குடன் எடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், “மனித வரலாற்றில் முக்கியத் தருணங்களில் மாற்றத்துக்குத் தேவையான குரல்கள் […]

Categories
உலக செய்திகள்

”வழிகாட்டும் ஒளிவிளக்கு திருக்குறள்” – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்….!

திருக்குறள், மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்கிறார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடக்கிறது. தாய் மொழியில் திருக்குறள் : முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் மத்தியில் நடந்த விழாவில், தாய்லாந்து மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

54 பேர் பலி….. ”நாங்கள் தான் கொன்றோம்” ஐஎஸ் பொறுப்பேற்பு….!!

மாலி நாட்டில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்பிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பகுதியிலுள்ள இன்டெலிமனே (Indelimane) ராணுவ தளத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உள்பட 54 பேர் பலியாகினர்.இத்தாக்குதலைத் தொடர்ந்து இன்டெலிமனே பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாகவும் மாலி நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் யயா சங்கரே (Yaya Sangare) தெரிவித்துள்ளார். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

பலதரப்பு உறவுகளை மேம்படுத்த உதவுமா மோடியின் சவுதி பயணம்?

ஐநா போன்ற ஒரு அமைப்பு நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும் கருவியாக இருக்க வேண்டும்’ பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 28-29 தேதிகளில் மேற்கொண்ட சவுதி அரேபியா பயணம் இருதரப்பு உறவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆற்றல், முதலீடு ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. சவுதி அரேபியாவில் வாழும் சுமார் 26 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டு வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்றுவதற்கு இந்தப் பயணம் அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது. இது சவுதி அரேபிய பொருளாதாரத்தின் நீண்ட […]

Categories

Tech |