Categories
உலக செய்திகள்

உலகை மிரட்டும் பலம் கொண்ட 5 நாடுகள்… வெளியானது பட்டியல்..!!

உலக நாடுகளில் இராணுவ பலம் அதிகமுள்ள முதல் 5 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளுக்கிடையே போர் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். உலகில் போர்க் களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உலகத்தில் இருக்கும் முன்னணி நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலரை தங்கள் இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்கின்றன. அதில் இந்தியாவும் ஓன்று. அதன்படி ஆயுதப் படைகளுக்கு மிக உயர்வான பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் ஆயுத பலத்தை  அதிகரிப்பதற்காக பெருமளவில் நிதி […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்படுத்த முடியவில்லை… சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: சீன அதிபர் பிரகடனம்

கொரானா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது வரை சுமார்  2468 பேர்  உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,929 நெருங்கி உள்ளது. இந்நிலையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங் 1949-ல்  கம்யூனிஸட்  ஆட்சி தொடங்கியதிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

மோடி என் இனிய நண்பர்… எதிர்நோக்கியுள்ளேன்…. புறப்படும் முன் ட்ரம்ப் பேட்டி …!!

இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர் நோக்கியுள்ளேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு […]

Categories
உலக செய்திகள்

BREAKING : இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் …!!

அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருவதற்கு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார்.   அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , […]

Categories
உலக செய்திகள்

கொரோனோ பலி 2,442ஆக உயர்வு : சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442ஆக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அதிபர் ஜி ஜின்பிங் இன்று அறிவித்துள்ளார். சீனாவி பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாட்டை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன அரசு செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்நிலையில் சீனாவில் இன்று வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள் வைரல்

இப்படி செஞ்சுட்டீங்களே…. நான் பாவம் இல்லையா ? நொந்து போன அணில் …!!

பேராசை கொண்ட அணில் திருடுவதைத் தடுக்க ஒரு தந்திரமான பறவை காதலர் செய்த புத்திசாலித்தனமான திட்டம் இது. நாம் அனைவரும் வீட்டில் கிளி , புறா , கோழி , ஆடு , மாடு என  இவற்றில் ஒன்றையோ அல்ல அனைத்தையுமோ வளர்த்திருப்போம். இவற்றுக்கு என்ன தேவையோ புல் , அரிசி என உண்ணுவதற்கு வைத்து கண்ணும் கருத்துமாய் பாதுகாப்போம். நாம் வைக்கும் புல்லாக இருந்தாலும் , அரிசியாக இருந்தாலும் அது மற்ற விலங்கு , பறவைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாக்கு பயந்து….. இப்படியா ? செய்வீங்க…. செத்துடாதீங்க…. தம்பதிகளுக்கு அட்வைஸ் …!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து தங்களை பாதுகாத்துக் கொண்ட தம்பதிகள் தங்களை காத்துக் கொண்ட போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. உலகமே பயந்து கொண்டு இருக்கும் வார்த்தை கொரோனா. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க வைத்துள்ளது. இதன் பாதிப்பால்  நேற்று முன்தினம் வரை சீனாவில் 2,345 உயிரிழந்துள்ளனர். 76,288 பேர் கொரோனா பாதிப்புக்குட்பட்டு 11,477 பேர் கவலை கிடமாக இருப்பதாக சீன மருத்துவ வட்டாரம் தகவல் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

அமேந்திர பாகுபலி..!…. ”கலக்கும் ட்ரம்ப்’ …. வைரலாகும் வீடியோ

அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , […]

Categories
ஆன்மிகம் உலக செய்திகள் ஜோதிடம்

உங்களுக்கு “திருவாதிரை நட்சத்திரமா ” வெடித்துச் சிதறப் போகிறதாம்..! பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்

உங்களுக்கு “திருவாதிரை நட்சத்திரம்”  கொஞ்சம் மனசு கஷ்டமாதான் இருக்கும் ,ஆனால் உண்மைங்க..! பீதியை கிளப்பும் விஞ்ஞானிகளின் தகவல்.                     திருவாதிரை நட்சத்திரம் சீக்கிரம் வெடித்து சிதற போகிறதாம் ஏற்கனவே அதன் ஒளி வேகமாக குறைய தொடங்கியுள்ளது. எந்த  நட்சத்திரமாக இருந்தாலும் எல்லாம் சில காலம் தான். ஆங்கிலத்தில் Betelgeuse   என்றழைக்கப்படும் விண்வெளியில் ஒரு முக்கிய நட்சத்திரம் நம்மவர்களால் திருவாதிரை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஜனாதிபதியின் திடீர் தீர்மானம்…. கலங்கிய 60 உறுப்பினர்கள்…!!

நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் எடுத்திருப்பதாக கோட்டபாய ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார் மார்ச் மாதம் 2ஆம் தேதி நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் எடுத்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றம் ஆரம்பித்து ஐந்து வருடங்கள் முடிவதற்கு முன்னரே அதனை கலைப்பதால் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 60 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மே மாதம் 12ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் சடலம்..! CCTV -யால் சிக்கிய காதல் ஜோடி

மெக்ஸிகோவில் 7 வயது  பள்ளி சிறுமியை  காதல் ஜோடி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மெக்சிகோவில் உள்ள ஒரு பள்ளியில் பாத்திமா  என்ற 7 வயது சிறுமி படித்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல பள்ளி முடிந்ததும் தனது அம்மாவிற்காக காத்திருந்தார்.  ஆனால்  மற்றொரு பெண்  சிறுமி பாத்திமாவை  தன் கையால் அழைத்துச் சென்றார். இதையடுத்து சிறுமியின் அம்மா வந்து பார்த்தபோது அவள் அங்கு இல்லை. பின்னர் போலீசாரிடம் சிறுமியின் அம்மா புகாரளித்தார். இந்த […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வாய்ப்புகள் குறைவு”… உலக சுகாதார அமைப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் ‘கோவிட்-19’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றினை  கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க முடியாமல் சீனா, அமெரிக்கா உட்பட  உலகநாடுகள் திணறி வருகின்றன. இதுவரையில் கொரோனா வைரசுக்கு 2,300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 76,000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

“வேட்டையாடு விளையாடு”… அதிபர் டிரம்பின் மகனுக்கு அனுமதி..!!

அமெரிக்க நாட்டின் அலாஸ்கா (Alaska) வனத்தில் வாழும் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகளை (Grizzly Bear) வேட்டையாடுவதற்கு  அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் 1000 டாலர் கட்டணம் கட்டி அனுமதி வாங்கியுள்ளார்.  ஆம், இனி அவர் காட்டுக்குள் புகுந்து விலங்குகளை வேட்டையாடலாம். அமெரிக்காவில் மான்கள், கரடிகள் மற்றும் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்குகிறது. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு தான் இது பொருந்தும். அந்த வகையில் வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட் (Seward) […]

Categories
உலக செய்திகள்

46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவை… சைபிரியா பிரதேசத்தில் கண்டுபிடிப்பு..!

சைபிரியாவில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பறவையின் உடல், 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த ஹார்ன்ட் லார்க் என்ற பறவையினுடையது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் சைபிரியா பிரதேசத்தில்  வடகிழக்கே இருக்கும் பெலாய கோரா (Belaya Gora) என்ற பகுதியில் ஹார்ன்ட் லார்க் (horned lark) என்ற பறவையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த பறவை 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது. இந்த தகவலை சுவீடன் ஆய்வாளர்கள் நிகோலஸ் டஸக்ஸ், லவ் டேலன் ஆகியோர் ஆய்வு செய்து […]

Categories
உலக செய்திகள்

கொரானா எதிரொலி : சுகாதாரத்துறை நடவடிக்கையால் எதிர்வினை பாதிப்பு..!

சீனாவின் ஹுபே  மாகாணத்தை சுற்றிலும் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்ததன் விளைவாக எதிர்வினை உருவாகியுள்ளது.  அந்த பகுதியில் பறவைகளும், விலங்குகளும் கொத்துக்கொத்தாக இறந்துள்ளது. கிருமிநாசினி அதிக அளவில் தெளிக்கப்பட்ட காரணதால்  வனவிலங்குகள் பலியாகி இருக்கலாம்  என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காட்டுப்பன்றிகள், மர நாய்கள் மற்றும் சில பறவை வகைகள் என இந்த காட்டுபகுதிகளில் சுமார் 135 வனவிலங்குகள் இறந்துள்ளது. இதில் சோகமான சம்பவம் என்னவென்றால்? பலியான அந்த விலங்குகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஆற்றை சுத்தம் செய்யும் போது… திடீரென உயர்ந்த நீர்மட்டம்… 8 மாணவர்கள் பலியான சோகம்..!

இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் 8 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் யோககர்த்தா (Yogyakarta) மாகாணத்தில் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத மாணவர்கள், ஆற்று நீரில் அடித்து […]

Categories
உலக செய்திகள்

3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவு… ‘காப்பான்’ படத்தை மிஞ்சும் வெட்டுக்கிளிகள்…. வேதனையில் விவசாயிகள்..!!

பாகிஸ்தான் முழுவதும் சுமார் 3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் அழித்து நாசம் செய்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் கூட்டம் வேகமெடுக்கத் தொடங்கியது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவாசயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அந்நாட்டில் விவசாயத்தை அதிகமாக நம்பியிருக்கும் பஞ்சாப் மாகாணம் மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது . வெட்டுக்கிளிகளின் வேட்டையால் கடந்த ஜனவரி மாதத்தில் மாவுகளின் விலைகள் 15 சதவிகிதமும், சர்க்கரை விலை […]

Categories
உலக செய்திகள்

220 ஜோடி மணமக்கள்… முகமூடி அணிந்து கொண்டு ‘கிஸ்’… கொரோனாவை மீறி திருமணம்..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே இடத்தில் மொத்தமாக 220 ஜோடி மணமக்கள் முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்டனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரசால் இதுவரையில் 2,345 பேர் மரணடைந்துள்ளனர். மேலும் 76,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகோலோட் என்ற இடத்தில் 220 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி  அவர்கள் நேற்று முன்தினம் […]

Categories
உலக செய்திகள்

“ஒரே இருட்டு..! லைட் இல்ல … முறைத்து கொண்டே பிறந்த குழந்தை … வைரல் புகைப்படம்..!

பிறந்த குழந்தை ஒன்றை மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக குழந்தை பிறந்தவுடன் நன்கு அழ ஆரம்பித்து விடும் ஆனால் அதற்கு மாறாக இந்த  குழந்தை பிறந்தவுடன் மருத்துவரைப் பார்த்து முறைப்பது போல உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ” உள்ள ஒரே இருட்டு..!ஒரு லைட் இல்ல … fan  கூட இல்லை என்றும் வடிவேல் காமெடியை வைத்து  கமெண்ட் செய்து வருகின்றனர்.   எவன்டா அது அழுதுட்டு வெளிய […]

Categories
உலக செய்திகள்

“விடாமல் வேட்டையாடும் கொரோனா”… பலி எண்ணிக்கை 2,345 ஆக உயர்வு..!!

உலகையே மிரட்டிவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில் மட்டும் 90 பேர் இறந்துள்ளதாக, சுகாதாரதுறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் மட்டும் கொரோனா வைரஸிற்கு புதிதாக 397பேர் பாதிப்படைந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் கண்டெய்னர் 39 பேர் பலி : 7 பேர் மீது வியட்நாம் போலீசார் குற்றச்சாட்டு..!!

 இங்கிலாந்து கண்டெய்னர் லாரியில் 39 பேர்  சடலமாக மீட்கப்பட்ட வழக்குத் தொடர்பாக 7 பேர் மீது வியட்நாம் போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் கவுண்டி  பகுதியில் கண்டெய்னர் லாரியில் 39 பேர்  சடலமாக மீட்கப்பட்ட வழக்குத்தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 ஆண்களும், 2 பெண்களும் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள் என்றும் ஹாரின் (Ha Tinh) மாகாண போலீசார் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி கண்டெய்னர் லாரி […]

Categories
உலக செய்திகள்

கொரானா பீதி: அடித்து நொறுக்கபட்ட பேருந்து … அதிர்ச்சி சம்பவம்..!

கொரானா  வைரஸ் பாதிப்பால்  சீனாவிலிருந்து உக்ரேன் சென்ற பேருந்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான  கொரானா  தற்போது உலகையே மிரள வைத்துள்ளது. இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்களின்  உயிரை பறித்த கொடிய கொரானா  வைரஸ்சால்  25000-க்கும் மேற்பட்டோர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீன மக்களை இந்த வைரஸ் தனிமைப்படுத்தும்  நிலைக்கு தள்ளியுள்ளது. இந்நிலையில் சீனாவின் வுஹனிலிருந்து அழைத்து வரப்பட்ட சிலருக்கு கொரானா தொற்று இருப்பதாக வந்த போலி […]

Categories
உலக செய்திகள்

பிரபல இளம் ‘பாப் பாடகர்’ துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

அமெரிக்காவில் கொள்ளை கும்பலில் ஒருவன் பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக்கை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக். இவரது இயற்பெயர் பஷர் பராகா ஜாக்சன். 20 வயதான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் மேற்கு ஹாலிவுட் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப் ஸ்மோக் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கொள்ளை கும்பல் ஓன்று […]

Categories
உலக செய்திகள்

“எனக்கு திருமணம் வேண்டாம்”… நோயாளிகளுக்காக பாடுபட்ட மருத்துவருக்கு நேர்ந்த சோகம்..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக திருமணத்தையே நிறுத்தி வைத்த ஊகான் மருத்துவர் ஒருவர்  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் நாளுக்குநாள் காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டு மருத்துவர்கள் இரவு பகல் என்றும் பாராமல்  சிகிச்சையளித்து வருகின்றனர். அதேநேரத்தில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. சில மருத்துவர்களும் இதற்கு பலியாகியுள்ளனர். அந்த வகையில் ஊகான் ஜியாங்ஜியா First People  மருத்துவமனையில்  பணியாற்றி வரும்  29 வயதான மருத்துவர் பெங் யின்ஹுவா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்….விலங்குகளிலிருந்து பரவுகிறதா?… அடித்து கொல்லப்படும் சோகம்..!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீனாவில்  நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் அடித்து கொல்லப்படுவதாக புகார் எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2000-த்திற்கும் மேற்பட்டோர் இதுவரையில் இறந்துள்ளனர். மேலும் 75000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே அந்நாட்டு மக்கள் வீடுகளில் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளும் தனிமைபடுத்தப்பட வேண்டும் என மருத்துவர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

“இருவரும் உல்லாசமாக இருந்தோம்”… இறந்துவிட்டாள்… நம்பும் படியாக இல்லை… ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி..!!

நியூசிலாந்து நாட்டில் டிண்டர் (Tinder) செயலி மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்தவர் கிரேஸ் மிலன் (GRACE MILLANE). 27 வயது பெண்ணான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கிரேஸ் மிலன், ஆன்லைன் டேட்டிங் செயலியான (app) டிண்டர் மூலம் ஒரு 28 வயதான ஜெஸ்ஸி கெம்ப்சன் என்ற (Jesse Kempson) நபரிடம் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி […]

Categories
உலக செய்திகள்

“சிறைக்கு சென்ற கொரோனா”… முகாம்களில் பரவுமா?… அச்சத்தில் மக்கள்..!!

சீனாவில் சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து, முகாம்களிலும் பரவி விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  சீனாவின் உகான் நகரில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்குதலுக்கு இதுவரையில் 2,236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த வைரஸ் பாதிப்பிற்கு மொத்தம் 75,465 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், சீனாவில் 450-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் மற்றும் காவல்துறையினருக்கும்   கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சீன […]

Categories
உலக செய்திகள்

அழுது கொண்டே… “ஸ்கூல்ல கிண்டல் பன்றாங்க”… நா சாகப்போறேன்… “தாயிடம் தூக்கு கயிறு கேட்கும் சிறுவன்”… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

 பள்ளியில் தன்னை கேலி செய்வதால்  தற்கொலை செய்து கொள்வதற்கு தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறி அழும் 9 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் அவரது 9 வயது மகன் குவார்டன் (Quaden) கதறி அழுது கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறுகிறார். தனது மகனை சமாதானப்படுத்த தாயும் அழுது கொண்டே […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்…. ஏமனில் 19 சிறுவர்கள் உட்பட 31 பேர் பலி..!!

ஏமனில் கடந்த 15-ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படை நடத்திய விமானத் தாக்குதலில் 31 பேர் பலியானதை ஐ.நா உறுதி செய்துள்ளது. ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்-ஜாஃப் நகரில் கடந்த 15ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படைகள் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 19 சிறுவர்கள் உட்பட 31 பொதுமக்கள் பலியானதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஐநாவின் யுனிசெப் அமைப்பு இதனை தற்போது உறுதி செய்துள்ளது. முன்னதாக சவுதிக்கு சொந்தமான டொர்னாடோ […]

Categories
உலக செய்திகள்

ஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்த கோடீஸ்வரர்..! NEXT PLAN-னால் அதிர்ச்சி!

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 50 வயதான கோடீஸ்வரர் ஒருவர் ஒரே நேரத்தில் 6 பெண்களை திருமணம் செய்துகொண்ட நிலையில் மேலும் 8 பேரை மணக்க உள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கோபெலா ம்தெம்பு (Mthembu) என்பவர் சில தினங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் 6 இளம்பெண்களை மணந்துள்ளார். 50 வயதான Mthembu  14 மனைவிகளை திருமணம் செய்ய முடிவு செய்ததுள்ளார். இதை தொடர்ந்து  இந்த ஆண்டு 8 மனைவிகளைத் இலக்காக கொண்டு திட்டமிட்டுள்ளதாக கூறினார். […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நில நடுக்கம்… உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா?

இந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நில நடுக்கத்தால் பலர்  தங்கள் வீடுகளையும், உயிர்களையும் இழந்துள்ளனர். அதன்படி அதிகாலை 3.24 மணியளவில் வடமேற்கு இந்தோனேசியாவின் சுமார் 229 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்  சயூம்லாகி பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கமானது 157 கி.மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]

Categories
உலக செய்திகள்

இந்தியா நெருக்கடி கொடுக்கிறது – ட்ரம்ப் பரபரப்பு புகார் …!!

இந்தியா – அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்பதாக அதிபர் ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா கிரிக்கெட் மைதானத்தை […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 118 பேர் மரணம்…. அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை..!!

உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்கத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 118 பேர் பலியாகியுள்ளதாக  அந்நாட்டு சுகாதாரதுறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக 889 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டு விபத்து… இருவர் பரிதாப பலி.!

ஆஸ்திரேலியாவில்  ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரத்தில் இருந்து மெல்போர்ன் நோக்கி  160 பயணிகளுடன் சென்ற இரயிலானது, வாலன் பகுதியில் வந்தபோது  யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் முழுமையாக  கவிழ்ந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம்… சட்ட விரோத போதை சிகரெட் ஃபேக்டரி… 20 பேர் அதிரடி கைது..!!

ஸ்பெயின் நாட்டில் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டில் மாட்டுத் தொழுவத்திற்கு கீழே 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக ஒரு கும்பல் போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த சுரங்க தொழிற்சாலையில் போலீசார் அதிரடியாக சோதனையிட்டு 20 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த போதை சிகெரெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த சமபவம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை இயக்குநர் கொரோனாவால் மரணம்… வாகனத்தின் பின்னால் கதறி அழுது ஓடும் மனைவி… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

ஊகான் மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரசால் பலியான நிலையில், அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது அவரது மனைவி வாகனத்தின் பின்னால் கதறி அழுதபடி ஓடிய காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஊகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் ஊகான் நகரில் […]

Categories
உலக செய்திகள்

“CUT, COPY,PASTE “… தந்தை லாரி டெஸ்லர் காலமானார்.!!

கணினி உலகின் வரப்பிரசாதமாக கருதப்படும் கட், காப்பி, பேஸ்ட் (cut, copy, paste) செயல்பாடுகளை உருவாக்கிய விஞ்ஞானி லாரி டெஸ்லர் காலமானார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் லாரி டெஸ்லர் (Larry Tesler). 74 வயதான இவர் ஜெராக்ஸ் பார்க், ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட உலகில் பெரிய தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை படைத்து அசத்தியவர். மேலும் கணினி உலகின் வரபிரசாதமாக கருதப்படும் கட், காப்பி, பேஸ்ட் செயல்பாடுகளையும் இவர்தான் உருவாக்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழர்..! புதிய வரலாறு படைத்தார் !

அமெரிக்காவின் மிகவும் உயர்ந்த பதவிக்கு   தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டு புதிய வரலாறு படைத்துள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(52)  நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  2013ல் இந்த  நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார்.   தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன், திருநெல்வேலி அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை பூர்விகமாக கொண்டவர். அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் பத்பநாபன் கணித பேராசிரியராக பணிபுரிந்தார். அதே பல்கலைக்கழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

சடலத்துடன் பயணித்த பயணிகள்….. நரகத்தை அனுபவித்த சூழல்….. நடுவானில் நடந்த சம்பவம்..

விமானத்தில் உயிரிழந்த மூதாட்டி உடன் பயணம் செய்த பயணிகள் நரகத்தை அனுபவித்ததாக அச்சத்துடன் கூறியுள்ளனர் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றில் 83 வயது கொண்ட வயதான பெண் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் பயணித்த செவிலியர் ஒருவர் மருத்துவ குழுவினரின் உதவியுடன் மூதாட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மூதாட்டி.  அவர் உயிரிழந்ததை தொடர்ந்து விமானத்தை தரையிறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சடலத்தை எடுத்து தனியாக வைக்கும்படியும் […]

Categories
உலக செய்திகள்

பலூசிஸ்தான் நடத்திய அதிரடி தாக்குதல்… 16 பாக்., ராணுவ வீரர்கள் உட்பட 19 பேர் பலி..!!

பலூசிஸ்தான் விடுதலைப் படை நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அடைக்கலம் கொடுத்து வருவதாக பலூசிஸ்தான் விடுதலைப் படை குற்றம் சாட்டி வருகிறது. மேலும் பாக்., ராணுவ முகாம்களிலேயே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் பலூசிஸ்தான் படையினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம், I.S.I .உளவுத்துறை மற்றும் லஷ்கர் இ தொய்பா (Lashkar-e-Taiba) தீவிரவாத முகாம்கள் மீது பலூசிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் 2 விடுதியில் துப்பாக்கிச் சூடு : 8 பேர் பரிதாப பலி..!

ஜெர்மனியில் இரண்டு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஜெர்மனியின் ஹனாவ் நகரில் சிஷா மதுபான விடுதி மற்றும் அருகில் சில தொலைவில் இருக்கின்ற  மற்றொரு விடுதி என இரண்டு இடங்களில் சரமாரியாக மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முதலில் மர்ம நபர்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளார். இரண்டாவது நடத்திய தாக்குதலில்  5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 8 பேர் இறந்துள்ளனர். மேலும் 5 பேரின் நிலைமை […]

Categories
உலக செய்திகள்

இவர்கள் 3 பேரும் 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! சீன அரசாங்கம் அதிரடி உத்தரவு

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் (WSJ)  3 அமெரிக்க பத்திரிகையாளர்களை 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற சீனாஅரசு  உத்தரவிட்டுள்ளது. “சீனா ஆசியாவின் உண்மையான நோய்வாய்ப்பட்ட மனிதர்” (“China is the Real Sick Man of Asia,) என்ற தலைப்பில்  பார்ட் கல்லூரி பேராசிரியர் வால்டர் ரஸ்ஸல் மீட் (Walter Russel Mead ) எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “China is the Real Sick Man of Asia, என்று  தலைப்பை வெளியிட்டதிற்கு  மன்னிப்பு […]

Categories
உலக செய்திகள்

380 கி. மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்த கார்… ஆனாலும் சாதனை முறியடிக்கப்படவில்லை..!

அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை படைக்க முயற்சி செய்த நபர்தோல்வியடைந்தார்.   அமெரிக்க நாட்டில் மின்னசொட்டா பகுதியைச் சேர்ந்தவர் கர்ட் ஆண்டர்சன் ( Kurt Anderson) . இவர்  ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை செய்ய முயன்றார். இதற்காக அவர் பிரத்யேகமான கார் ஒன்றையும் தயாரித்தார். இதையடுத்து விஸ்கான்சின் (Wisconsin) மாகாணத்தில்  பனியால் உறைந்து போயிருக்கும் பியர் ஏரியில் தன்னுடைய சாதனைப் பயணத்தை ஆண்டர்சன் தொடங்கினார். அப்போது பனிப்பாதையில் மணிக்கு 380 கி. மீட்டர் […]

Categories
உலக செய்திகள்

ஈரானுக்கு எப்படி ? ”பரவிய கொரோனா” 2 பேர் பலி …. அதிர்ச்சி தகவல் ….!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இதன் பாதிப்பால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 2000த்திற்கும்  அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா , இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வைரஸ் தாக்கத்தில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் நேருக்கு நேர்… விமான விபத்தில் 4 பேர் பரிதாப பலி.!

ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும்  மங்களூர் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது வானில் பறந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்தின் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு விமானங்களும் கீழே வயல்வெளியில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த […]

Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழப்பு ..!

ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தனர்.  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் மீண்டும் துப்பாக்கி சூடு… பெண் ஒருவர் பலி… விசாரணையில் அதிர்ச்சி..!

தாய்லாந்து நாட்டில் இருக்கும் வணிக வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  தாய்லாந்தின் வடகிழக்கே பாங்காக் நகரிலிருந்து 250 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும்  நாகோன் ராட்சசிமா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த 8-ஆம் தேதி ராணுவ வீரர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்று விட்டனர்.  அதை தொடர்ந்து இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது […]

Categories
உலக செய்திகள்

கொள்ளையர்கள் அட்டூழியம்… 6,000 கொரோனா மாஸ்க் திருட்டு..!!

ஜப்பான் நாட்டில் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலககின் பல நாடுகளுக்கு பரவி மிரட்டி வருகிறது.  அதில், சீனாவின் அண்டை நாடான ஜப்பானும் அடங்கும். எனவே அங்கிருக்கும் பொதுமக்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். முகமூடி இல்லாமல் யாரையுமே பார்க்கமுடியவில்லை. இந்த நிலையில் அந்நாட்டின் துறைமுக நகரமான கோபேயில் இருக்கும் ஜப்பான் செஞ்சிலுவை […]

Categories
உலக செய்திகள்

சரியான வாய்ப்பு… கடித்து ருசி பார்த்துற வேண்டியது தான்… யானைகள் வேட்டையாடும் வைரல் வீடியோ!

தாய்லாந்து நாட்டில் சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த கரும்பை 2 யானைகள் ரசித்து ருசித்து சுவைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் நகோன் சவான் என்ற இடத்தில் இரண்டு  யானைகள் இடமாற்றம் செய்யப்படுவதற்காக இரு லாரிகளில் தனி தனியாக ஏற்றப்பட்டு வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது இடையில் சிக்னல் போடப்பட்டதால் வண்டி நிறுத்தப்பட்டது. லாரிகளில் இரண்டு யானைகளும்  நின்றபடி காத்திருந்தன. அப்போது அருகே  கரும்பு லோடு ஏற்றிக் […]

Categories
உலக செய்திகள்

உண்மைதான்… மலாலாவை சுட்ட பயங்கரவாதி தப்பி விட்டான்… ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..!!

மலாலாவை சுட்ட தலிபான் பயங்கரவாதி சிறையிலிருந்து தப்பி சென்றது உண்மைதான் என்று பாகிஸ்தான் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. பெண் கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல்வேறு பிரசாரங்களை செய்தவர் மலாலா. இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு பயங்கரவாதியான இசானுல்லா இசான் (Ehsanullah Ehsan) என்பவர் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் மலாலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மலாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு பின் குணமடைந்தார். மலாலாவை சுட்ட இசான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். […]

Categories

Tech |