Categories
உலக செய்திகள்

காதலியை கிரில் அடுப்பில் சமைத்த கொடூர காதலன் ..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட சண்டையில் காதலன் தனது காதலியை உயிருடன் மயக்க நிலையில் இருக்கும் போது கிரில் அடுப்பில் எரிந்து கொன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜெண்டினா நாட்டில் வசித்துவருபவர் நைம் வேரா (25) இவரது காதலி  ப்ரண்டா மைக்கலா  (24) இவர்கள் இருவரும் பலவருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று காதலன் நைம்கும், காதலி மைக்கலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே நைம், மைக்கலாவை பிடித்து தள்ளியுள்ளார். இதில் மாடிப்படியில் இருந்து உருண்டு […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் இடைவிடாமல் பெய்யும் கனமழை… 12 பேர் உயிரிழப்பு… 46 பேர் மாயம்!

பிரேசிலில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மாயமான 46 பேரை தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சா பாலோ (Sao Paulo) நகரில் இடைவிடாது கொட்டி தீர்த்து வரும் கனமழையால் அப்பகுதி கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” 96%….. 20 நொடி போதும்….. அசத்தல் மருத்துவ கண்டுபிடிப்பு….. அலிபாபா நிறுவனம் சாதனை….!!

கொரோனா வைரஸை  20 நொடிகளில் கண்டறியும் விதமாக செயற்கை நுண்ணறிவு கருவியை அலிபாபா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அலிபாபா நிறுவனம் புதிய  செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளது.  இந்த கருவி மூலம் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை வெறும் 20 நொடிகளில் 96% கண்டுபிடித்துவிடலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ அமைப்புகள் இந்த கருவியை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

துருக்கிக்கு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் வழங்கத் தயாரான அமெரிக்கா… சிரியாவில் பதற்றம்!

துருக்கிக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதால் சிரியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது  சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுப்படைக்கு ஆதரவாக ரஷ்யாவும்,   ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கியும் செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக இருபிரிவினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த உள்நாட்டு போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், சமீபத்தில் இட்லிப் பகுதியில் சிரியாவுக்கு சொந்தமான போர் விமானத்தை ஹவுதி  கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் துருக்கி படைகள் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடி கொடுப்பதற்கு சிரியா […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…… வெறும் 6 அடி போதும்…… டக்குனு பரவிடும்…..!!

கொரோனா வைரஸில்  இருந்து நம்மை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து இந்த  செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது  உலக நாடுகளை அதிக அளவில் அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா  வைரஸ் தான். இது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பின்வருமாறு காணலாம், தொடர்ந்து நமது கைகளை சோப் மற்றும் நீரைக்கொண்டு நன்கு கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” இது இருந்தால் பிழைச்சோம்…… இன்னைக்கே செக் பண்ணுங்க….!!

கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா  வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால் இது குறித்த விரிவான தகவலை நாம் அறிந்துகொள்வது அவசியம். அந்தவகையில் நோயின் அறிகுறிகள் பின்வருமாறு, பொதுவாக இது ஒரு வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த நோய் என்பதால் சளி, இருமல், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தாக்கம்” இது தான் காரணமா…? இல்லை வேற எதுவுமா….? மீண்டும் ஆராய்ச்சி….!!

கொரோனா  வைரஸ் எதிலிருந்து பரவியது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கோவிட் – 19 என்கின்ற கொரோனா  வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வைரஸ் ஒன்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் எந்த விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியது என்று அறிவியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்ட சமயத்தில்  வௌவாலின் மரபணுவுடன் ஒத்துப்போவதாக கூறி வௌவாலில் இருந்து தான் பரவியது என்பதை ஒரு கணிப்பாக தெரிவித்தனர். ஆனால் இது வௌவாலிடமிருந்து தான் மனிதனுக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரேசில்: “கோர விபத்து” 18 பேர் மரணம்…… 30 பேர் மாயம்…… மீட்பு பணி தீவிரம்…..!!

பிரேசிலில் உள்ள அமேசான் துணை நதியான ஜாரி  நதியில் இரண்டடுக்கு கப்பலில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். அமேசானின் துணை நதியான ஜாரி நதியில் இரண்டடுக்கு படகு ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த படகில் மொத்தம் 94 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அந்தவகையில், விபத்தில் சிக்கியவர்களில் 46 பேர் மீட்கப்பட, 18 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் 30 பேரை பிரேசில் அரசு வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு அடுத்தபடியாக… தென் கொரியாவில் 4,800 பேர் பாதிப்பு.!

தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4,800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.  தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4, 800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 29ஆக உயர்ந்துள்ளது சீனாவுக்கு அடுத்த படியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தென் கொரியாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அதிபர் மூன் ஜேயிங் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தென் கொரியாவில் […]

Categories
உலக செய்திகள்

ஒருபுறம் கொரோனா… மறுபுறம் லாசா வைரஸ்… நைஜீரியாவில் 2 மாதத்தில் 100 க்கும் மேற்பட்டோர் மரணம்!

கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகையே அச்சுறுத்தி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ்  நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுவாங்கி வருகிறது நைஜீரியாவில் கடந்த 2 மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் (Lassa fever) தாக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் முகமது அபுபக்கர் கூறுகையில், ‘லாசா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்தை நாங்கள் (அரசு) தொடங்கியுள்ளோம். மக்கள், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி…. ”தமிழர்களால் முடியும்” உதவி கேட்கும் சீனர்கள் …..!!

ரசம் எப்படி செய்ய வேண்டுமென்று சிங்கப்பூரில் உள்ள மக்கள் தமிழர்களிடம் கேட்டு வருகின்றனர். சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நடுகல் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் […]

Categories
உலக செய்திகள்

பசிவந்தா மலைபாம்பு இதையும் விழுங்குமா .!! கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் ! … வைரல் வீடியோ

மலைப்பாம்பு ஒன்று பசியால் கடற்கரையில் கிடந்த துணியை விழுங்கியதை மருத்துவர்கள்  பாம்பின் வாயில் இருந்து எடுக்கும் காட்சி வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவின்  சிட்னியில் மலைப்பாம்பு ஒன்று கடற்கரையில் கிடந்த ஒரு துணியை  விழுங்கியது அதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாம்பின் உரிமையாளர்  கால்நடை மருத்துவமனைக்கு பாம்பினை எடுத்து சென்றுள்ளார். மருத்துவமனையில்  பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தால் பாம்பின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியனர். எனவே  பாம்பின் வாயில்  இருந்து துணியை லாவகமாக  நீண்ட […]

Categories
உலக செய்திகள்

FAKE NEWS: பெண்ணும், குழந்தையும் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ..! வெளிவந்த உண்மை பின்னணி

இந்தியாவில் இஸ்லாமிய பெண்ணும் அவரின்  குழந்தையும் இந்துக்களால் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுகின்றனர்  என கூறி ஒரு வீடியோ வைரல் ஆன நிலையில் அதன்  உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிப் என்ற முன்னாள் ராணுவ வீரர்  தனது ட்விட்டர்  பக்கத்தில்  ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் பெண்ணும், குழந்தையும் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கும் காட்சி இடம் பெற்றிருந்தன. முகமது அந்த பதிவில் இந்தியாவில் இஸ்லாமியர்களை  இந்துக்கள் உயிரோடு புதைக்கிறார்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல்… பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதார துறை  இயக்குனர் ஜெனரல் ஜெரோம் சாலமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒரே நாளில் நாடு முழுவதும் 61 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் 12 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 மாகாணங்களில் 5 மாகாணங்களில் 10 க்கும் மேற்பட்டோர் அடையாளம் […]

Categories
உலக செய்திகள்

கொரானா வைரஸ் பரவியதற்கு மண்டியிட்டு மன்னிப்பு கோரினார் – தலைவர் லீ மேன் ஹீ

தென்கொரியாவில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வழிபாட்டின் போது தேவாலயத்தில் இருந்து வைரஸ் பரவியதால் தொலைக்காட்சி கேமராக்கள் மற்றும் நிருபர்கள் என ஏராளமானவர்கள் முன் மதப்பிரிவின் தலைவர். லீ மேன் ஹீ மண்டியிட்டு மன்னிப்பு கோரினார். ஷின்சியோன்ஜி பிரிவின் தலைவர் லீ மேன் ஹீ  இவ்வாறு மன்னிப்பு கோரினார். ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் வழிபட்ட பெண் மூலம் பலருக்கும் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. யாரையும் குற்றம் சாட்டுவதற்கான நேரம் இது அல்ல; மேலும் தனது  மத அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

அடையாளம் தெரியாத இரு ஏவுகணைகள்… கடலில் ஏவி சோதனை செய்த வட கொரியா..!

வட கொரியா கடலில் ஏவி அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று வட கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும்  வோன்சான் பகுதியில் இருந்து கிழக்கு  நோக்கி இந்த இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.சுமார் 240 கி.மீ. தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய  குறைந்த தூர ஏவுகணைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற ஏவுகணைகள் மேலும் ஏவப்படலாம் […]

Categories
உலக செய்திகள்

70க்கும் மேற்பட்ட நாடுகள்… 3,100 பேரை காவு வாங்கிய கொரோனா…!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3100 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசால் இதுவரை 3100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரசால் மொத்தம் 90,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மிக வேகமாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாடு பல சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு.. தேர்தல் தேதி அறிவிப்பு..!!

இலங்கை நாடாளுமன்றத்தை திடிரென்று கலைத்தார், அந்நாட்டின் அதிபரான கோத்தபய ராஜபக்சே, அப்பொழுது அவர் தேர்தல் நடைபெறும் தேதியையும் தெரிவித்தார். இலங்கைக்கு 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து அத்தேர்தல் முடிவில் செப்டம்பர் மாதம் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. ஆட்சிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக நேற்றிரவு திடீரென அறிவிப்பு விடுத்தார். இந்நிலையில் அரசாணையும் உடனடியாக வெளியானது. ஏப்ரல் 25ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், […]

Categories
உலக செய்திகள்

கொரானாவால் அதிகம் உயிரிழப்பவர்கள் இவர்களா..? சீனாவின் அதிர்ச்சி தகவல்

சீனாவில் தோன்றிய கொரான வைரஸ் பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவியவருகிறது. உயிரிழப்பு அதிகரித்தது வந்த நிலையில் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தியது. தேசிய  உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை 2020 ஜனவரி 30-ல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தொடங்கிய கொடிய கொரானா வைரஸுக்கு  இதுவரை 3000-க்கும்  அதிகமான மக்கள்  உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 11-ஆம் தேதி நிலவரப்படி கொரானா உறுதிப்படுத்தப்பட்ட 44000-க்கும்  மேற்பட்டவர்களை கொண்டு ஆய்வு செய்ததில் […]

Categories
உலக செய்திகள்

2019ல் சாதனை படைத்த ஆல்பம்… அமெரிக்க பாடகிக்கு விருது!

2019 ஆம் ஆண்டில் விற்பனையில் சாதனை படைத்த ஆல்பமாக அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் (Taylor Swift) “லவ்வர்”, பாடலுக்கு கிடைத்துள்ளது. ஐ.எப்.பி.ஐ (IFPI) என்ற அமைப்பின் சார்பாக விற்பனையில் சாதனை புரிந்த செய்ததற்காக ஆல்பங்களை கண்டறிந்து அதனை பாடிய பாடகருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. இணையத்தில் நேரலையாக பார்ப்பது முதல் பயன்பாட்டை உலகளவில் விற்பனை செய்வது வரை அனைத்தையும் கணக்கிட்டு இந்த விருது வழங்கப்படுகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான “லவ்வர்” பாடல் […]

Categories
உலக செய்திகள்

பாரிஸில் நடந்த  ஆடை அணிவகுப்பு நிகழ்வு… விலங்குகள் உடையணிந்து பெண்கள் அசத்தல்..!!

பிரான்சின் பாரிஸில் நடந்த  ஆடை அணிவகுப்பில், ஒய்யார நடையிட்டு வந்த பெண்களுடன் பொம்மை வடிவ விலங்குகளின் தோற்றமுடைய உடையணிந்தும் பெண்கள் வந்தனர்.   இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெல்லா மெக்கார்ட்னி (Stella McCartney), பல ஆண்டுகளாக விலங்கு உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிரான்ஸ்  நாட்டின் பாரிஸில்  நடந்த  ஆடை அணிவகுப்பில், ஒய்யார நடையிட்டு வந்த பெண்களுடன் சேர்ந்து, ஸ்டெல்லா தயாரித்த பொம்மை வடிவ நரி, குதிரை, முயல், குதிரை என பல […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பரிதாப பலி!

பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 28 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். பிரேசிலின் வடக்கு மாநிலமான அமாபாவில் அமேசான் மழைக்காடுகளை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒரு பெரிய படகில் சென்றுள்ளனர்.அப்போது, அமேசான் ஆற்றில் படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் மூழ்கி பலியாகியிருக்கலாம் என்று  கூறப்படுகிறது. மேலும் 28 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விபத்து குறித்து […]

Categories
உலக செய்திகள்

நூற்றுக்கணக்கான அகதிகள்… துருக்கி வழியாக கிரீஸ் நாட்டிற்குள் செல்ல முயற்சி..!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான அகதிகள்  துருக்கி வழியாக நடந்து  கிரீஸ் நாட்டிற்குள் செல்ல முயற்சிக்கின்றனர்.  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், சட்டவிரோதமாக  தங்கள் நாட்டிற்குள் வருபவர்களை தடுக்க எல்லைப்பகுதி முழுவதும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இருப்பினும், கிரீஸ் செல்வதற்கு தங்கள் நாட்டின் வழியைப் பயன்படுத்துவதற்கு அதன் அண்டை நாடான துருக்கி எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்காததால், நூற்றுக்கணக்கான அகதிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். துருக்கி எல்லையில் தங்குவதற்கு […]

Categories
உலக செய்திகள்

பனியால் உறைந்து போன உலகின் ஆழமான ஏரி… விமானத்தை இறக்கி பைலட்ஒருவர் சாதனை!

ரஷ்யாவில் பனியால் உறைந்து போயிருக்கும் உலகின் ஆழமான ஏரியில் விமானத்தை இறக்கி பைலட்ஒருவர் சாதனை நிகழ்த்தியிருக்கிறார். உலகின் மிக ஆழமான ஏரி என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரி இப்போது பனியால் முழுமையாக உறைந்துள்ளது. இந்த ஏரி உலகில் உள்ள நன்னீரில் சுமார் 20% இருப்பது குறிப்பிடத்தக்கது. உறைந்து போயிருக்கும் இந்த ஏரியில் ஒரு சிறிய செஸ்னா 172 (small Cessna 172 plane) வகை விமானத்தை இறக்க பைலட் வாடிம் மகோரோவ் என்ற […]

Categories
உலக செய்திகள்

67 நாடுகள்… கொரோனாவால் 3,001 பேர் மரணம்… ஈரானுக்கு உதவும் சீனா!

உலகளவில், கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும்  2,870 பேர் உயிர் இழந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையுடன் சேர்த்து மொத்தம் 3,001 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று, ஒரே நாளில் மட்டும் ஈரான் நாட்டில் 11 பேர் உட்பட 24 பேர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர். 67 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்ட 88, […]

Categories
உலக செய்திகள்

“தலைக்கேறிய போதை” டீச்சர் வெறிச்செயல்….. 13 வயதில் குழந்தைக்கு தந்தையான சிறுவன்….!!

பிரிட்டனில் 13 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து தந்தையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    பிரிட்டன் நாட்டின் பெர்ஜியஸ் வின்சன்ட் நகரை சேர்ந்தவர் லியா கார்டெக்ஸ். இவர் அதே பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்நிலையில் சென்ற ஆண்டு லியா மதுபோதையில் 13 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் தனியாக இருக்கும்போது உள்ளே நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்பும் தொடர்ந்து அவருடன் […]

Categories
உலக செய்திகள்

கண்டம் விட்டு….. கண்டம்….. பரவும் கொரோனா…… ஆஸ்திரேலியாவில் ஒருவர் மரணம்….!!

ஆஸ்திரேலியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான் என உலகம் முழுவதும் படிப்படியாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நோய் தற்போது ஆஸ்திரேலியாவிலும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், 75 வயது முதியவர் ஒருவர் இந்த வைரஸ் நோயால் இறந்துவிட்டார். இவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட இவருக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்த பலனுமின்றி இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் கொரோனோ வைரஸால் உயிரிழந்த […]

Categories
உலக செய்திகள்

நான் நலமாக தான் உள்ளேன்.. எனக்கு கொரோனவா..? – ஜாக்கி சான்

தான் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக ஜாக்கிஜான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜாக்கிஜான் அவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனும் தகவலை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்கிஜான் அவர்கள் “நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னை பற்றி கவலைபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். என்னை யாரும் எங்கும் அடைத்து வைக்கவில்லை. நான் நலமாக தான் உள்ளேன். தயவு செய்து கவலைப்பட வேண்டாம். பல இடங்களிலிருந்து எனக்கு பரிசு பொருட்களை அனுப்பி அனைவருக்கும் எனது நன்றிகள். அதில் இருந்த அனைத்துமாஸ்க்கையும் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க […]

Categories
உலக செய்திகள்

உஷார்….. தாடி..மீசை இருந்தால்….. கொரோனா பரவும்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!

தாடி மீசை அதிகம் வைத்திருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ்  விரைவில் பரவும் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சீனா, கொரியா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியும், எந்தெந்த நாடுகளில் கால் வைக்கப் போகிறது என்று உலக நாட்டு மக்களை அச்சத்தில் வைத்திருக்கும் நோய் என்றால் அது கொரோனோ வைரஸ் தான். இந்த நோய் யாரும் எதிர்பாராத விதமாக அதிவிரைவில் பரவி வருகிறது. இதுவரை 2835 பேர் இந்த நோயால் இறந்து உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நாளை முதல் நியூயார்க்கில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை..!!

நியூயார்க்கில் நாளையில் இருந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை எரிப்பதாலும் காற்று மாசடைகிறது. அதேபோல் எரிக்காமல் எங்கேயாவது தெருவோரங்களில் தூக்கி எரிந்து விட்டால் விலங்குகள் அதனை சாப்பிட்டு உயிரிழக்க  நேரிடுகிறது. மேலும் பிளாஸ்டிக் பூமிக்குள் புதைந்து மட்காமல் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகின்றது. இப்படி பல பிரச்சனைகள் பிளாஸ்டிக் பைகளால் உள்ளன. உலகில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

34 துருக்கி வீரர்களுக்கும் அனுதாபங்கள்… ஆனால் படைகளை அனுப்ப முடியாது… கைவிரித்த நேட்டோ..!!

ரஷ்ய தாக்குதலில் துருக்கி வீரர்கள் உயிரிழந்ததற்கு நேட்டோ அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் துருக்கிக்கு ஆதரவாக கூடுதல் படைகளை அனுப்ப மறுத்துவிட்டது. சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தை எட்டியிருக்கின்ற நிலையில், இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியாவுக்கு ரஷ்யா ஆதரவளிக்கின்றது. அதேபோல துருக்கி குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. தற்போது இரு பிரிவினரும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் சிரிய-ரஷ்ய கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 34 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா உட்பட […]

Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பை தனக்கு சாதகமாக்கும் ஹேக்கர்கள் அதிர்ச்சி பின்னணி..!

கொரானா வைரஸ் பாதிப்பால் உலகமே பயத்தில் கலங்கி இருக்கும் வேளையில் அதை பயன்படுத்திய ஹேக்கர்கள் கணினி மூலம்  நுழைந்து மோசடி செய்வதற்கு  ஒரு கூட்டம்  முயல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஜப்பானுக்கு கணினி வைரஸ் மென்பொருளை மின்னஞ்சலில்(Email ) அனுப்பிய அவர்களின் தகவல் திருடப்படுவதாக  தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல்களில் “நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி கொண்டிருக்கிறது”. இந்த  வைரஸ் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமா? இந்த “இணைப்பை கிளிக் செய்யுங்கள்” என்பது போன்ற செய்திகளை […]

Categories
உலக செய்திகள்

சண்டை போட வேண்டாம்…. ”பேச்சுவார்த்தை நடத்துவோம்” … அதிபர்கள் ஒப்புதல் ….!!

சிரியா, துருக்கி இடையே ஏற்பட்டுள்ள மோதலை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த சிரியா, ரஷ்யா அதிபர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்நாட்டுப் போர்  நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில் சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சேர்ந்துகொண்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினர். இதில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள , துருக்கி நாட்டை ஒட்டி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கோர விபத்து… ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்… பேருந்தை அடித்து நொறுக்கிய ரயில்… 30 பேர் பரிதாப பலி!

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 30 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் கராச்சியில் இருந்து பஞ்சாப் நோக்கி பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற அந்த இரயில் ரோஹ்ரி நகர் அருகே காந்த்ரா என்ற இடத்தில் வந்தபோது, அதேசமயம் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை ஒரு பேருந்து கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த ரயில் பேருந்தின் […]

Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு!

ஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்த தாமோதரன் என்வருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. […]

Categories
உலக செய்திகள்

சிரியா உள்நாட்டு போர்… 33 ராணுவ வீரர்கள் பலி… துருக்கி- ரஷ்யா இடையே போர் பதற்றம்!

சிரியா அரசு படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்ததையடுத்து, துருக்கி- ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வருகின்றது. சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

முடிவுக்கு வரும் 18 ஆண்டு போர்… அமெரிக்கா – தலிபான்கள் இன்று மாலை பேச்சு வார்த்தை.!

அமெரிக்கா – தலிபான்கள் இடையே  கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகின்ற  போர் முடிவுக்கு வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டுமுதல் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அதாவது, ஆப்கான் அரசு படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க வீரர்களை ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பியது […]

Categories
உலக செய்திகள்

அசுர வேகத்தில் கொரோனா… மேலும் 5 நாடுகளுக்கு பரவியது!

அசுர வேகத்தில் பரவிவருகின்ற கொரோனா வைரஸ், மேலும் 5 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2,800 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  82,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் 39-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நிலையில், மேலும் 3 ஐரோப்பிய நாடுகளுக்கும், ஒரு ஆப்பிரிக்க நாடுக்கும், நியூசிலாந்துக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல்… 2,800 பேர் பலி… 82,000 பேர் பாதிப்பு!

கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 2800-ஆக அதிகரித்துள்ளதாக  சீனாவின் சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000-ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தவிர்த்து அடுத்தப் படியாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,022ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக […]

Categories
உலக செய்திகள்

தாய்க்கு சமர்ப்பணம்… ஒரே மூச்சில்180 மீட்டர் ஆழம்… ரஷ்ய வீரர் கின்னஸ் சாதனை!

ரஷ்ய வீரர் ஒருவர் உறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து சென்று கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உறைந்த நீருக்கு அடியில் ஒரே மூச்சில் 180 மீட்டர் ஆழம் வரை நீச்சலடித்து சென்று ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் அலெக்ஸி மோல்ச்சனோவ் (Alexey Molchanov). ரஷ்ய நீச்சல் வீரரான இவர் இந்த சாதனை முயற்சியை வெறும் 3 நிமிடத்தில் நிகழ்த்தி அசத்தியிருக்கிறார். குளிர்ந்த நீருக்கு […]

Categories
உலக செய்திகள்

சிரியா நடத்திய வான்வெளி தாக்குதல்… 33 துருக்கி ராணுவ வீரர்கள் பலி!

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் குவித்து வைத்துள்ளது. அடிக்கடி இரு பிரிவினருக்கு இடையே தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு 1 லட்சம் வாத்துக்களை அனுப்பியுள்ள சீனா ….!!

பாகிஸ்தானில் இருக்கும் வெட்டுக்‍கிளி தாக்‍குதலை சமாளிக்‍க சீனாவில் இருந்து 1 லட்சம் வாத்துக்‍கள் அனுப்பப்படுள்ளது. பாகிஸ்தானின் தெற்கு மாகாணம் சிந்துவில் இருந்து  வடகிழக்கு மாகாணம் கைபர் பக்துவா வரை இருக்கும் விவசாயிகள் கோதுமை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு அதிகளவில் விவசாயம் செய்கின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன என்றும் , கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வெட்டுக்‍கிளிகள் பாதிப்பால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடும் […]

Categories
உலக செய்திகள்

ரூ 3,40,00,000 நிதி… டிஸ்னிலாண்ட் செல்ல மாட்டோம்… தொண்டு நிறுவனத்துக்கு வழங்கும் சிறுவன்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கிடைத்துள்ள 3 கோடியே 40 லட்சம் ரூபாய்  நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்குவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அண்மையில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் காருக்குள் உட்கார்ந்து கொண்டு அவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ் (Quaden) கதறி அழுது கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறுகிறார். தனது மகனை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி… புனித பயணத்திற்கு தடை- சவூதி அரேபியா!

புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகையே ‘கோவிட்-19’ எனப்படும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாக பரவி வருவதன் காரணமாக, யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி ‘உம்ரா’ (Umrah) வுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி […]

Categories
உலக செய்திகள்

மின்னல் வேகத்தில் கொரோனா….. இன்னும் 1 வருடம்…… அதுக்கு அப்புறம் தான் தடுப்பூசி….!!

கொரோனா வைரசுக்கு இன்னும் ஒரு வருடத்தில் தடுப்பூசி தயாராகிவிடும் என அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது சீனா தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை ஆட்டிப்படைக்கும்  கொரோனோ வைரஸில் இருந்து பாதுகாக்க உலக விஞ்ஞானிகள் மருந்தை கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்கா சுகாதாரத்துறை இதில் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது அது செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனோவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி இன்னும் இரண்டு மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், அதற்கான சோதனை […]

Categories
உலக செய்திகள்

மழைமேகங்களுடன் புதிய கோள்….. புது வீட்டிற்கு செல்ல….. விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி….!!

சூரிய மண்டலத்திற்கு வெளியே மழை மேகங்களுடன் புதிய கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய மண்டலத்திற்கு வெளியே சுமார் 128 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் K18-19P என்ற புதிய கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.  சில வருடங்களாக அதைஆராய்ச்சி செய்ததில், அதில் பூமியைப் போலவே மழைமேகங்கள் காணப்படுவதாக தெரிவித்தனர். இயற்கை சுழற்சி அங்கேயும் நடைபெறுகிறது எனில் அங்கும் உயிர்வாழ சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று கூறிய விஞ்ஞானிகள், அதற்கான ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டு உள்ளனர். இது தற்போது […]

Categories
உலக செய்திகள்

3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மரணம்! சீனாவில் தொடரும் சோகம்

சீனாவில் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்  மாரடைப்பு காரணமாக  உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின்  சியான்டாவோ உள்ள சான்ஃபூட்டன் நகர மருத்துவமனையில் தலைசிறந்த நான்கு மருத்துவர்களில் Liu wenxiong ஒருவர் ஆவர். கொரானா வைரஸ் பாதிப்பு  அதிகமான பகுதியான  ஹூபே மாகாணத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 13ம் தேதி மன அழுத்தத்தால் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வேலை பார்த்து வந்ததுதான் […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவின் புதிய பிரதமர் மார்ச் 2ம் தேதி நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படும் : மகாதீர் முகமது!

2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர் இவர் கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. இவர் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற நிலையில், கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் சண்டை நிலவி வந்ததால் மகாதீர் மொஹமத், அன்வர் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து கொண்டனர். இதனையடுத்து திடீர் திருப்பமாக மகாதீர் மொஹமத் […]

Categories
உலக செய்திகள்

3,037 புகார்கள்… திகைத்து நிற்கும் கனட போக்குவரத்து நிறுவனம்!

கடந்த சில  வாரங்களில் பயணிகளிடமிருந்து 3,000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் (சி.டி.ஏ) தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 15-ஆம் முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 8 வார காலப்பகுதியில் மொத்தம் 3,037 புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி மத்திய அரசு (கனடா) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி, விமானம் தாமதமாவது மற்றும் விமானத்தின் கட்டுப்பாட்டிற்குள் ரத்து செய்யப்பட்டதற்கு விமான நிறுவனங்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் ஒரு கட்டிடத்தில் தீ விபத்து… 5 பேர் உடல் கருகி பலி… 7 பேர் தீக்காயம்!

வடகிழக்கு பிரான்சில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள (Strasbourg) ஒரு கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியானதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் […]

Categories

Tech |