விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினத்தை முன்னிட்டு வருகிற 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அனுமதி மறுக்கப்பட்ட தினங்களில் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
