Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிக்கலில் குமாரசாமி “மதியம் 1.30 தான் கெடு” மாறப்போகும் கர்நாடக அரசு …!!

இன்று மதியம் 1.30_க்குள் கர்நாடக முதலவர் குமாரசாமி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 16 MLA_க்கள்  தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  அதே போல ஆளும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை MLA_க்களான  நாகேஷ், சங்கர் ஆகியோரும் தங்களின் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.இதையடுத்து கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பரபரப்பான சூழலில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அதிருப்தி MLA_க்கள் மீது நடவடிக்கைக்கு பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு… கர்நாடக காங்கிரஸ் ….!!

அதிருப்தி MLA_க்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கர்நாடக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. கர்நாடக அரசியலில்  கடந்த 2 வாரமாக உச்சகட்ட தொடர் குழப்பங்கள் நீடித்து வந்தது. அங்குள்ள ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள்  பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக_விற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். MLA_க்களின் ராஜினாமாவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தான் காரணம் என்று ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். MLA_க்களின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எடியூரப்பாவிற்கு என் மீது கருணை ஏற்பட்டுள்ளது” முதல்வர் குமாரசாமி …!!

எடியூரப்பாவிற்கு திடீரென என் மீது கருணை ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.  இன்று காலை கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் முதலைமைசர் குமாரசாமி ,  தனது அரசு மீது நம்பிக்கை கோரி பேசும் போது ராஜினாமா செய்த MLA_க்கள்  சுயமரியாதை இல்லாதவர்கள், சபாநாயகரின் அதிகாரத்தை கேள்விகுறியாக்கும் வகையில் செயல்படுகின்றனர். கர்நாடகவில் நடப்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய குமாரசாமி , கூட்டணி அரசை தொடர்ந்து நடத்துவேனா, இல்லையா என்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கர்நாடக சட்டசபையில் அமளி” மாலை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்…!!

கர்நாடக சட்டசபையில் ஏற்பட்ட அமலியால் மாலை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநில முதலவர் குமாரசாமி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசினார். அதில் இந்த ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்திலேயே கடும் அமளி ஏற்பட்டது. இதைதொடர்ந்து பேசிய சபாநாயகர்  ரமேஷ் குமார்  கூறுகையில் , […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது உச்சநீதிமன்ற தீர்ப்பு…..!!

உச்சநீதிமன்றத்தின் முக்கிய வழக்கின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் முக்கியமான வழக்குக்களின் தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மொழிகளின் தொன்மையான மொழி , செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி இடம்பெறாததற்கு தமிழக அரசியல் கண்டனம்  தெரிவித்தனர். மேலும் தமிழிலும் தீர்ப்பை வெளியிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற 113 வழக்குகளின் தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டம்- குமாரசாமி காரசார பேச்சு..!!

ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயல்படுவதாக  குமாரசாமி காரசாரமாக தெரிவித்துள்ளார்.   கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்தனர். ஆனால் சபாநாயகர் ரமேஷ் குமார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. இதையடுத்து பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் படி உத்தரவிடக்கோரி 15 எம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 22ல் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்…. இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

ஜூலை 22ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருப்பதை  நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த 15ஆம் தேதியன்று இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி 56 நிமிடங்களுக்கு முன்பு கவுன்டவுன்  நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின் தொழில் நுட்ப குழு மேற்கொண்ட ஆய்வில் ஏவுகணையின் கிரையோஜெனிக் இன்ஜின் வாய் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி விவகாரம் …. மத்தியஸ்தர் குழு அறிக்கை தாக்கல் …..!!

அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பாக தொடர்பாக மத்தியஸ்த்தர் குழு தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை… மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள மொத்த ஓட்டுநர் உரிமங்களில்  30% போலியானவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்ட  திருத்தம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியபோது, இந்தியாவில் மட்டும்தான் எளிமையான முறையில் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும் என்றும், ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படம் ஓட்டுனருடன் பொருந்துவதில்லை என்றும், அனைவரும் சட்டத்தை மதிக்காமலும் பயமின்றியும் வாகனம் ஓட்டுவதாக தெரிவித்தார்.மேலும்  100 ரூபாய் அபராதம்   குறித்து யாரும்  கவலைப்படுவதில்லை என்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் தீடிர் மாற்றம் …….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக தலைவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஸ்வதந்திரா தேவ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆசுரத்தனமான  பெற்று , மத்தியில் தனி பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மேலும் பாஜகவின் தேசிய செயலாளர் அமித்ஷா இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக தேர்வாகியதால் பாஜவிற்கு செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு செய்யப்பட்டார். ஜே.பி நட்டா தேர்வானத்தில் இருந்து கட்சியை மேலும் பலப்படுத்துவதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

“அஞ்சல் துறை தேர்வுகள் இனி தமிழில் நடத்தப்படும்” – ரவிசங்கர் பிரசாத்..!!

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக தபால் துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த 14-ம் தேதி இந்தியா முழுவதும் தபால்துறை தேர்வுகள் நடந்தது. இதில் முதல் தாளில் இருந்த கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றருந்தன. இதையடுத்து தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இதற்கு கடும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்திய விமானம் பறக்க வான்வழியை திறந்தது பாகிஸ்தான்..!!

 இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியாக செல்வதற்கு பாகிஸ்தான் பாதையை திறந்து விட்டுள்ளது    இந்திய விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின்  பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறந்து செல்வதற்கு  பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பிரதமர் மோடி கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டிற்கு செல்லும் போது அவ்வழியை பயன்படுத்த முடியாமல்  பிரதமரின் விமானம் வேறு வழியாக சென்றது. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான்  இரு நாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கர்தார்பூர் குருத்வராவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“43,00,000 மக்கள் பாதிப்பு”அசாமை புரட்டி போட்ட கனமழை…..!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அசாம் மாநிலத்தில் சுமார்  43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை விட இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கி , வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து  வெளுத்து வாங்கி வருகின்றது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் , அசாம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் . மக்களின் இயல்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்” முதல்வர் குமாரசாமி நம்பிக்கை …!!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று முதலவர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் உச்சகட்ட குழப்பத்தில் இருந்து வருகின்றது. அங்கு ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MLA_க்கள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்து , பாஜக கட்டுப்பாட்டில் இருந்து வருவதால்  முதல்வர் குமாரசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து  சபாநாயகரை சந்தித்த பாஜக தலைவர் எடியூரப்பா, முதல்வர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி காப்பாற்றப்படுமா?கவிழுமா? 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. தற்போது ஆளும் அரசை கவிழ்க்க   பாஜக சதி செய்துள்ளதாக மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேவையில்லை நெக்ஸ்டே போதும்…. புதிய மருத்துவ ஆணை மசோதாவில் வெளியான தகவல்….!!!

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நெக்ஸ்ட் தேர்வே போதுமானது என மாற்றி அமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணை  மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த பின்னர் மருத்துவ படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரிடையே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் பெரும் மதிப்பெண்களே எம்.டி  மற்றும் எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவ படிப்பின் மாணவர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 85 % இடத்தில் போட்டியின்றி தேர்வு…!!

திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சியினரை வேட்பு மனுத்தாக்கள் செய்யவிடாமல் பாஜக அட்டகாசம் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 6,646 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் ஆளும் பாஜக , காங்கிரஸ், ஏற்கனவே ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் சுமார் 12, 03, 070 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். இதையடுத்து இங்குள்ள 6,646 உள்ளாட்சி இடங்களில் 5, 652 இடங்களில் ஆளும் […]

Categories
தேசிய செய்திகள்

பேக் கிக் செய்து பாட்டில் மூடியை தெறிக்கவிடும் மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு..!!

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார். சமீப நாட்களாக “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்ற  சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிக்கி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ், பிட்னஸ் சேலஞ், நில்லு நில்லு சேலஞ் ஆகிய சேலஞ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி மறைந்தது நமக்கு தெரியும். அந்த வகையில்  “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்பது பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து திறக்க வேண்டும். அதே நேரத்தில் முடியும் கீழே விழக்கூடாது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பங்கு விலக்கல்… 3 மடங்கு லாபம் ஈட்டிய பாஜக…ரூ3,25,00,000 இலக்கு..!!

பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசின் பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 3.25 லட்சம் கோடி ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்த 2009-2014 காலகட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விலக்கல் மூலம் 14.52 பில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பங்கு விலக்கல் மூலம் 40.92 பில்லியன் டாலர்கள் ஈட்டப்பட்டு, மும்மடங்கு அதிகத் தொகை பங்கு விலக்கல் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவியிடம் 4.5 கோடி மோசடி… தொழில் கூட்டாளி மீது போலீசில் புகார்..!!

சேவாக்கின் மனைவி தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி  4.5 கோடி கடன் வாங்கியதாக தொழில் கூட்டாளி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்   இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீ ரேந்தர் சேவாக்கின் மனைவி ஆர்த்தி. இவர் தொழில் கூட்டாளி ஒருவர் தனது  கையெழுத்தை தவறுதலாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் 4.5 கோடி கடன் வாங்கியுள்ளார் என்றும், அந்த பணத்தை அந்நிறுவனத்திடம் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி, தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது இந்த புகாரில், “தனது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜினாமா MLA”காங்கிரஸோடு இணைவது உறுதி….அமைச்சர் சிவக்குமார் பேட்டி …!!

கர்நாடகாவில் ராஜினாமா செய்த MLA நாகராஜன் மீண்டும் காங்கிரஸ்க்கு வர உறுதியளித்துள்ளதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளிலிருந்து  16 MLAக்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக கூறி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இது குறித்து  கர்நாடக மாநில மழை கால கூட்டத் தொடரில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டால் ஆட்சி தானாகவே கவிழ்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

நீடிக்கும் கனமழை…8,00,000 மக்கள் பாதிப்பு…வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்..!!

அஸ்ஸாமில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சுமார் 8,00,000 மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களையொட்டி கடந்த சில தினங்களாக மழை சரமாரியாக   பொழிந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உள்ளிட்ட  மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூறையாடியுள்ளது. குறிப்பாக  அஸ்ஸாமில் பாய்ந்தோடும்  பிரம்மபுத்திரா உள்ளிட்ட 5 நதிகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி  வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் 21 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுமார் 8,00,000 பேர் தங்களது வீடுகளையும் ,உடைமைகளையும் பறிகொடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இடி,மழையடித்தாலும் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்… இஸ்ரோ தலைவர் பேட்டி…!!

இடியுடன் மழை பொழிந்தாலும்  சந்திராயன் 2 விண்கலம் எவ்வித தடையுமின்றி  விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். சந்திராயன் 1 விண்கல ஆராய்ச்சியை தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில்   செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கொண்டு செல்வதற்க்காக ஜிஎஸ்எல்வி மார்க் 2 என்ற ராக்கெட் பிரத்யேகமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த   ராக்கெட் சுமார் 4000 கிலோ எடை வரை தாங்கி செல்லக்கூடிய  திறன் கொண்டது. ஆகையால் இதற்கு பாகுபலி என்ற மறுபெயரும் உண்டு. இந்நிலையில்   திருப்பதி ஏழுமலை வெங்கடேஸ்வரர் கோவிலில் […]

Categories
தேசிய செய்திகள்

“பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக்குத்து” கேரள எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்..!!

கேரள பல்கலைக்கழக மாணவர்  கத்திக்குத்து சம்பவத்திற்கு கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கண்டனம் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அகில் என்ற SFI மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர் மீது கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறை 20 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து , 16 பேரை கைது செய்துள்ளனர். மேலும் SFI என்ற மாணவர் அமைப்பு அதே மாணவர் அமைப்பை […]

Categories
தேசிய செய்திகள்

பல்கலைக்கழக வளாகத்தில் “மாணவனுக்கு கத்திக்குத்து” கேரளாவில் அதிர்ச்சி…!!

கேரளாவில் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் எப்படி அரசியல் கட்சிகளுக்குள் மோதல் ஏற்படுகின்றதோ அதே போல அங்குள்ள கல்லூரிகளில் இருக்கும் மாணவர் அமைப்புக்குள்ளும் மோதல் ஏற்படுவது வழக்கமான ஓன்று. அந்தவகையில் திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் B.A அரசியல் அறிவியல் 3_ஆம் ஆண்டு படித்து அகில் சந்திரன் என்ற மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கல்லூரி மாணவர்கள் அமைப்புக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் கனமழை “15 பேர் பலி” 6 நாட்களுக்கு மழை எச்சரிக்கை……!!

மும்பையை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் . உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 9_ஆம் தேதி முதல் 12_ஆம் தேதி வரை 3 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள உன்னாவ், அம்பேத்கர் நகர், பிரயாக்ராஜ், பராபங்கி, ஹர்தோய், கிரி, கோரக்பூர், கான்பூர் நகர், பிலிபித், சோனபத்ரா, சந்தோலி, பிரோசாபாத், மாவ் மற்றும் சுல்தான்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. நகரின் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண்… துணிச்சலுடன் காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு…!!

ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவல் துறை அதிகாரி காப்பாற்றிய சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு பெண் ஒருவர்   ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் ரயில்  செல்வதை கண்டு அவசர அவசரமாக ஓடிச்சென்று எற முயற்சித்துள்ளார். அப்பொழுது நிலைதடுமாறியதால்  கீழே விழுந்தார். இதில் ரயில்  சக்கரத்தின் இடையில்  சிக்க இருந்த அவரை,ரயில் நிலையத்தில்  வழக்கமாக  ரோந்து பணியில் ஈடுபடும்  ரயில்வே துறை காவலர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலைய அறையில் “16 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை” பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் கைது..!!

ரயில் நிலையத்தில் 16 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாதுகாப்பு பணியாளர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.    சோலாங் ரயில் நிலையத்தில் 16 வயது இளம்பெண் ஒருவர் முகேரியன் அருகே உள்ள தனது ஊருக்கு செல்ல காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பஞ்சாப் பாதுகாப்பு பணியாளர்கள் அவரிடம் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேள்வி கேட்டுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணை இருவரும் நைசாக பேசி அங்கிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை […]

Categories
தேசிய செய்திகள்

“தபால் துறையில் இனி தமிழ் கிடையாது” இந்தி, ஆங்கிலத்தில் தான் தேர்வுகள் நடக்கும்… மத்திய அரசு சுற்றறிக்கை..!!

தபால் துறையில் இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது  இந்தியா முழுவதும் உள்ள தபால் துறைக்கான பல்வேறு காலியான பணியிடங்களுக்கு  தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்புவது வழக்கம். இத்தேர்வுகளில்  இந்தி,ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் வினாத்தாள் இருக்கும். மாநில மொழிகளில் கொடுக்கப்பட்டிருப்பதால் போட்டி தேர்வு எழுதுபவர்கள் எளிதில் புரிந்து கொண்டு பதிலளிக்க ஏதுவாக இருக்கும். இதுவே நடைமுறைப்டுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மிரட்டலால் மும்பை சென்றதாக MLA_க்கள் சொன்னார்கள்” கர்நாடக சபாநாயகர் தகவல்…!!

சிலரின் மிரட்டல் காரணமாக மும்பை சென்றதாக 10 MLA_க்கள் என்னிடம் கூறினார்கள் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த  சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்  முன்பு அங்குள்ள 10 சட்டமன்ற உறுப்பினர் ஆஜராகி அதில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இதை தொடர்ந்து அதிருப்தி MLA_க்கள் சந்திப்புக்கு பின்பு கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , சபாநாயகராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்குள்ளது. யாரையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நான் ராஜினாமா செய்யமாட்டேன்” முதல்வர் குமாரசாமி திட்டவட்டம்…!!

அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் நான் ராஜினாமா செய்ய வேண்டுமா அதற்க்கு என்ன தேவை இருக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியலில் தொடர்ந்து நிலவிவரும் சிக்கல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன , இந்த ஆட்சியை தக்க வைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசித்ததாக தெரிகின்றது. அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் இந்த கூட்டம் கர்நாடக […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“தோனி ஓய்வு எண்ணமும் உங்களுக்கு வர வேண்டாம்” பிரபல படகி உருக்கம்…!!

ஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம் என்று பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடந்து வரும் உலகக்கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்த  இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறனை பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எங்களது ஆட்சி கலைக்கப்படாது…. குமாரசாமி நம்பிக்கை…!!

எங்களது ஆட்சி கலைக்கப்படாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்- ஜனதா தள  அதிருப்த்தி MLAக்கள் 14 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள ஜனதா தள-காங் கட்சிகள் தீவீர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 2 MLAக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளோம் என சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் ஆட்சி காப்பாற்றப்படுமா?இல்லை கவிழுமா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எனக்கு அறிவுரை வழங்க முடியாது…நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சபாநாயர் வழக்கு..!!

MLAக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதை எதிர்த்து கர்நாடக சபாநாயகர் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநில MLAக்கள் 14 பேர் அளித்த ராஜினாமா கடிதத்தில் 8 பேரின் கடிதங்கள் சட்ட விதிமுறைகளின் படி இல்லை என்றும், ராஜினாமா செய்ய விரும்பினால் முறைப்படி கடிதம் அளிக்கவேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து MLAக்கள் 10 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள்,MLAக்கள் 10 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம்…நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் ஆர்ப்பட்டம்..!!

பாஜக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தின் முன்  காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக  மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாவை சேர்ந்த 14 அதிருப்த்தி MLAக்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.அங்கு நடக்கும் ஆளும் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக  சதி திட்டம் தீட்டி வருவதாக காங்-மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்,கோவாவிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 MLAக்கள் பாஜகவில் தங்களை முழு மனதுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி” தோல்வி குறித்து மோடி ட்வீட்..!!

வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி […]

Categories
தேசிய செய்திகள்

“அனைவரின் இதயம் உடைந்துள்ளது” தோல்வி குறித்து ராகுல் ட்வீட்…!!

இந்திய அணியின் தோல்வியால் அனைவரின் இதயம் உடைந்துள்ளது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக MLA” சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை….!!

 துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. டெல்லியில் பத்திரிக்கையாளரை மிரட்டிய புகாரில் ஏற்கனவே மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளார் பாஜக எம்எல்ஏ பிரணவ் . காலில் அறுவைசிகிச்சை செய்து கொண்டு வீட்டிற்கு சென்ற அவர் மது அருந்தி கொண்டு கையில் துப்பாக்கி வைத்து ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் …!!

மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக  மசூத் ஹூசைன் இருந்து வந்தார்.இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணத்துக்கு முன் கட்டாய HIV டெஸ்ட்” கோவா_வில் புதிய திட்டம் …!!

திருமணத்துக்கு முன்பு கட்டாயமாக HIV டெஸ்ட் மேற்கொள்ள வேண்டுமென்ற புதிய திட்டத்தை கோவா மாநிலம் நிறைவேற்றவுள்ளது. மனிதனுக்கு பல்வேறு நோய்கள் வந்தாலும் மிக கொடூரமான நோய்யாக பார்க்கப்படுவதில் ஓன்று தான்  எச்.ஐ.வி என்ற வைரஸால் பரவும் எய்ட்ஸ். உயிரையே கொள்ள கூடிய இந்த நோயி நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தற்சமயம் தடுப்பூசியோ , நிரந்தர தீர்வோ இல்லை . மக்களால் மிகவும் கூடியதாக பார்க்கப்படும் இந்த பரவலாம் இருக்க  எச்.ஐ.வி பரிசோதனை முக்கியமானதாகும். அந்த வகையில் திருமணத்தை பதிவு செய்வதற்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திரும்பி போ…!! திரும்பி போ..!! சந்திக்க வந்த அமைச்சருக்கு எதிராக கோஷம்…!!

அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற கர்நாடக அமைச்சரை திரும்பி போ திரும்பி போ என்று ஜனதா தள ஆதரவாளர் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

 “போலீஸ் எந்த படையையும் குவிக்கட்டும்” கர்நாடக அமைச்சர் ஆவேசம்…!!

அதிருப்தி MLA_க்களை சந்திக்க விடாமல் போலீஸ் எந்த படையையும் குவிக்கட்டும்  என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று வருகின்றது. அதே போல விடுதியில் தங்கி இருக்கும் சட்டமன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பரிதவிக்கும் கர்நாடக அரசு…..மும்பை சென்ற அமைச்சர் தடுத்து நிறுத்தம்…!!

மும்பை நட்சத்திர விடுதிகளில் இருக்கும் அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவகுமாரை அங்குள்ள போலீசார் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மாநில சட்டசபையில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 119  உறுப்பினர்களும் , பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ்+ ஜே.டி.எஸ் கூட்டணி சார்பில் குமாரசாமி மாநில முதல்வராகவும் , பாஜக எதிர்கட்சியாகவும் இருந்து வருகின்றது. காங்கிரஸ் + ஜே.டி.எஸ் MLA_க்கள் ராஜினாமா :  கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து நிலவிவரும் அரசியல் குழப்பத்தால் அங்குள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக முதல்வர் உத்தரவு …..!!

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்திற்கு  177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ளது.  அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ தமிழகத்துக்கு வெறும் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியது. இந்நிலையில் கடந்த 25_ஆம் தேதி டெல்லியில் உள்ள சேவா பவனில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மும்பைக்கு மீண்டும் கனமழை…வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை……!!!

மும்பையில்  மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது   மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 10 நாட்களாக கொட்டும் கனமழையால்  தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளித்தது .நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைத நிலையில் அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு  மீட்புப்பணி நடைபெற்று வந்தது   கடந்த 10 நாட்களாக பெய்து வந்த மழை  இதுவரை இல்லாத அளவுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் பாஜக” காங்கிரஸ் MLA குற்றசாட்டு…!!

சுயேச்சை MLA  நாகேஷை பாஜக வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விட்டதாக கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பாட்டு வருகின்றது.எப்போது வேண்டுமெனாலும் ஆட்சி கவிழும் சூழலில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போராடி வருகின்றனர்.அங்குள்ள கோலார் மாவட்டத்தின் முல்பாகல் சட்டப்பேரவை தொகுதியில், சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றவர் நாகேஷ். இவரின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியவர் காங்கிரஸ் கட்சியின் சிவகுமார். சிவகுமார் கர்நாடக அரசில் […]

Categories
தேசிய செய்திகள்

தீடிர் பரபரப்பு “19 மாநிலம் 110 இடங்களில் சோதனை” CBI அதிரடி ……!!

ஒரே நேரத்தில் 19 மாநிலத்தின் 110 இடங்களில் CBI சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நேரத்தில் நாட்டின் 19 மாநிலங்களின் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட தனித்தனி வழக்குகள், சில ஊழல் வழக்குகள் , சில ஆயுதங்களை கடத்துவதில் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்ற பல்வேறு விதமான வழக்குகளுக்கான சோதனைகளை சிபிஐ ஒன்றாக சேர்ந்து 110 இடங்களில் நடத்தி வருகின்றது. இந்த சோதனை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 110 […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இயற்கை சீற்றத்தை கண்டறிய புதிய விண்கலம்…விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை…!!

இனி வரும் காலங்களில் இயற்கை சீற்றங்களை கண்டறிய விண்கலங்கள் உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம்  ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு  மாணவ-மாணவிகளுக்கான  வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்  இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன்பின்  செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அவர், இனி வரக்கூடிய காலங்களில் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே  கண்டறியும் விதமாக  நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பாஸ் ஆக , மதிப்பெண் பெற பணம்” லஞ்சம் வாங்கிய பேராசிரியர் பணிநீக்கம்…!!

அதிகமான மதிப்பெண் போட்டு தேர்வில் வெற்றிபெற வைக்க மாணவர்களிடம் லஞ்சம் வசூல் செய்த பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா_வில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் இயங்கி வருகின்றது ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் வரலா என்பவர்பல்கலைக்கழக தேர்வில் தன்னுடைய  தனது பாடத்தில்வெற்றி பெறவும் , அதிக மதிப்பெண் எடுக்கவும் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பேராசிரியர் மீதான புகார் குறித்து  மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம்  தெரிவித்துள்ளனர். அதற்க்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம் பங்கேற்குமா ? மக்கள் நீதி மய்யம் ……. தீடிர் ஆலோசனையில் நிர்வாகிகள் ..!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் பங்கேற்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை […]

Categories

Tech |