Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு அலெர்ட்” 22 தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சி… அம்பலமான வீடியோ… பழிவாங்க துடிக்கும் பாகிஸ்தான்…!!

இந்தியாவில் தாக்குதல் நடத்த isi 22 தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறை பயிற்சி அளித்து வருகிறது.  காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவிற்கு தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை அளித்தது. இதையடுத்து இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்ககில், 22 ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பயிற்சி அளித்து வரும் வீடியோ காட்சிகளை ஆங்கில […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதுல சேராதிங்க…”Q-NET MULTILEVEL MARKETING” ரூ5000கோடி மோசடி… காவல்துறை எச்சரிக்கை..!!

Q-NET நிறுவனம் 5000 கோடி நிறுவனம் மோசடி செய்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  Q-NET  என்ற நிறுவனம் 5000 கோடி மோசடி செய்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக கூறி வழக்கு பதியப்பட்டதை தொடர்ந்து, 70 பேரை ஹைதராபாத் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் Q-NET திட்டங்களில் சேர வேண்டாம் என்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊடகங்களில் முன்னணி நடிகர்களை கொண்டு விளம்பரம் செய்து  பர்சனல் ஹெல்த், உணவுப்பொருட்கள் மற்றும் சுற்றுலா பொருள்கள் போன்ற பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

”வழக்கில் தப்பிக்கவே ப.சிதம்பரம் முயற்சி” அமலாக்கத்துறை வாதம்…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் தப்பிக்கவே ப.சிதம்பரம் முயற்சி செய்கின்றார் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதங்களை முன்வைக்கப்படுகின்றது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார்.அதில் , சிதம்பரம் மழுப்பலான பதில்களையே அளிக்கிறார்.  வழக்கின் உண்மை தகவலை மறைத்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் என்ற குற்றச்சாட்டை  முன்வைத்தார். ப.சிதம்பரத்துக்கு நாளை வரை சிபிஐ காவலில் வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மோடிஜியின்”FITNESS CHALLANGE” தொடங்கியது புதிய இயக்கம்… இனி ஆட்டம் ஓட்டம் தான்..!!

டெல்லியில் இந்திய மக்கள் FITNESS ஆக இருக்கவேண்டுமென இந்திய உடற்தகுதி இயக்கம் ஒன்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஆகஸ்ட் 29 ஆம் தேதியான இன்று இந்திய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் இவ்வாண்டு வெகு விமர்சையாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய மக்கள் FITNESS உடன் இருக்க வேண்டும் என்பதற்காக இதற்கு முன் FITNESS CHALLANGE ஒன்றை பிரதமர் மோடி மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகா அரசுக்கு சிக்கல்….. 10 MLA_க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி… முதல்வர் எச்சரிக்கை…!!

கர்நாடகா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பின்னர் 18 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்னும் 16 அமைச்சர்கள் இடம் காலியாக உள்ளன. அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஆசையில் இருந்த பாஜக_வினர் பலர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

”ஸ்ரீநகர் புறப்பட்டார் சீதாராம் யெச்சூரி” MLA யூசுப் தரிகாமி_யை சந்திக்கிறார்..!!

உச்சநீதிமன்ற அனுமதியையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகருக்கு புறப்பட்டார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேஷமாக மத்திய அரசு அறிவித்ததில் இருந்து  அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வர கூடாது என்று மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே கடந்த 9_ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘பாகிஸ்தானுக்கு உதவிய ராகுல்” மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்…. மத்திய அமைச்சர் ஆவேசம்..!!

ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவியுள்ளார் எனவே அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் கண்டித்துள்ளார். ஜம்முக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல் கொடூரமான அரசு நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சியும், இந்திய ஊடகங்களும் சிக்கியுள்ளது. அரசின் அடக்குமுறையால் மக்கள் ஒடுக்கப்பட்டு காஷ்மீர் கலவரத்தில் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். ராகுலின் இந்த கருத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஐ.நா.விற்கு கடிதம் எழுதியது. இதனால் ராகுல் காந்தி கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மோதாதே….!! மறக்க முடியாத பதிலடி கொடுப்போம்…..வெங்கையா எச்சரிக்கை…!!

இந்தியா மீது பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசும் போது, இந்தியா எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது கிடையாது.வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்திய போதும் நாம் யாரையும் தாக்கவில்லை. ஆனால், யாராவது  இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றால் அவர்கள் வாழ்நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் மக்களுக்கு ஜாக்பாட்…. 2 மாதத்தில் அரசு பணி….. 50,000 வேலைவாய்ப்பு….!!

ஜம்முவில் 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து , ஜம்மு மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“கன்னத்தில் ‘கிஸ்’ கொடுத்த தொண்டர்” சிரித்த ராகுல்… வைரலாகும் வீடியோ..!!

ராகுல் காந்தி தனது தொகுதியான வய நாட்டிற்க்கு சுற்று பயணம் மேற்கொண்ட போது ஒரு தொண்டர் அவரது கன்னத்தில் முத்தமிட்டார்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது சொந்த பாராளுமன்ற தொகுதியான கேரளாவில் உள்ள வயநாட்டிற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வயநாடு பகுதியில் காரில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். ராகுல் காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்தார். கார் மெதுவாக சென்றபோது  தொண்டர்களாக  வந்து வந்து ராகுலிடம் கை கொடுத்து விட்டு  சென்றனர். அதில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவில் சேருங்கள்…. சொல்லிட்டு போங்க….. காங்கிரஸ் தலைவர் கருத்து..!!

காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் பாஜக செல்ல வேண்டுமென்றால் தாராளமாக செல்லுங்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடியை பாராட்டினர். இதனால கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி தலைமை இருவருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இவர்கள் இருவரின் கருத்து பல்வேறு மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான  வீரப்ப மொய்லி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது , காங்கிரசிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கின்றார் சீதாராம் யெச்சூரி ….!!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கின்றார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேஷமாக மத்திய அரசு அறிவித்ததில் இருந்து  அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வர கூடாது என்று மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே கடந்த 9_ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் கொடூரம் ”செக்ஸ் தொல்லை” தடுத்ததால் ஆசிட் வீச்சு…!!

பீகாரில் பாலியல் தொல்லையை தடுத்த உறவினர்கள் மீது ஒரு கொடூர கும்பல் ஆசிட் வீசி தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம்  வைசாலி மாவட்டத்தில் உள்ள தவுத்நகரில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் கும்பல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது. இதனையறிந்த அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கும்பலை தட்டிக்கேட்டு தடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் , மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்  காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள்  பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

3_ஆவது முறையாக கைது நீட்டிப்பு…. நாளை மீண்டும் விசாரணை…!!

ப.சிதம்பரத்துக்கு 3-ஆவது முறையாக கைது தடை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கான முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று  நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு  நடைபெற்றது.கடந்த இரண்டு நாட்களாக சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களாக அபிஷேக் மனு சிங்வி , கபில் சிபில் வாதங்களை முன்வைத்த நிலையில் மதியம் 2 மணியிலிருந்து அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார். அப்போது இந்த வழக்கு என்பது பழிவாங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 பேரை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள்..!!

புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வசித்து வந்த இருவரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்தனர்.  ஜம்மு- காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஹதீர் கோலி மற்றும் மன்சூர் அகமது கோலி ஆகியோர் டிரால் (Tral) பகுதியில் நாடோடியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 20- ஆம் தேதி கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் லாச்சி டாப் பெஹாக் காட்டில் (Lachi Top Behak forest) இருவரையும்  போலீசார் சடலமாக மீட்டனர். பின்னர் இவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

”அவர் அறிவாளி , சாதுரியம் மிக்கவர்” புகழ்ந்து அசிங்கப்படுத்திய அமலாக்கத்துறை…!!

ப.சிதம்பரம் அறிவாளி மற்றும் சாதுரியம் மிக்கவர் என்பதால் இது போன்ற சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட முடிந்தது என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. அதே போல அமலாக்கத்துறையினர் கைது செய்ய கூடாது என்ற முன்ஜாமீன் மனு மீதான விசாரணை  இன்று தொடங்கியது. நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததில் அமலாக்கத் துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்த போது , சட்டவிரோத பண […]

Categories
தேசிய செய்திகள்

சிகரெட் விற்றால் 1 ஆண்டு சிறை… ரூ1,00,000 அபராதம்… மத்திய அரசு அதிரடி..!!

E சிகரெட் விற்றால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கும் வரைவு அவசரச் சட்டம் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  புகையிலை சிகரெட்டுக்கு மாற்றாக சில நாடுகளில் E சிகரெட் என்று கூறப்படும் மின்னணு சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றனர். இதுவும் உடல் நலத்திற்கு கேடு என்பதால் இதனை தடை செய்ய ஒரு வரைவு அவசரச் சட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. அதன்படி E சிகரெட் உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், வினியோகம் மற்றும் விற்க செய்யவும் தடை […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் எங்க பிரச்னை” தீடீர் பல்டி அடித்த ராகுல்….!!

காஷ்மீர் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. இதில் பாகிஸ்தானோ அல்லது வேறுநாடுகளோ உடன்பட இடமில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் ஜம்முவுக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்….!!

காஷ்மீரில் ஊடகத்திற்கு அனுமதி வழங்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.  மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்… விமானப்படை அதிகாரி கைது..!!

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்களை அனுப்பி அனுமதி பெற்ற விமானப்படை முன்னாள் அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் எல்என்டி நிறுவனத்துடன் அரசியல் தலைவர்கள் பயணிப்பதற்கான தனி விமானங்களை எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவு ஓட்டுவதற்கு சுமார் 1000 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எல்என்டி நிறுவனங்களுக்கு எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் 

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஜம்முவில் சிறப்பு சட்டப்பிரிவு 370_ஐ ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தற்போது அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்திருக்கிறார்.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் பொதுமக்களுக்கு அங்கு சரிவர எந்தவித […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : காஷ்மீர் செல்லலாம் ”சீத்தாராம் யெச்சுரிக்கு” உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

ஜம்மு காஷ்மீர் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீத்தாராம் யெச்சுரி-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது. ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் ஜம்முவுக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். அதே […]

Categories
தேசிய செய்திகள்

காதல் விவகாரம் : காதலன் ஆணவக்கொலை “10 பேருக்கு இரட்டை ஆயுள்” நீதிமன்றம் அதிரடி..!!

காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது . கேரள மாநிலம் கோட்டயத்தில் பட்டினத்தைச் சேர்ந்த ஜோசப் கெவின் என்பவர்  கல்லூரியில் படிக்கும்போது நீனு  என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நீனு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தினர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இந்த ஜோடி கடந்த ஆண்டு மே மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“நிலவை நோக்கிய பயணம்” 3வது அடுக்கில் இணைந்தது சந்திராயன்-2..!!

சந்திராயன்-2 விண்கலம் நிலவு வட்டப்பாதையில் மூன்றாவது அடுக்கில் வெற்றிகரமாக இணைந்தது. கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2,650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 ,375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது. அதாவது பூமிக்கும் நிலவுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“புது ஆடை வாங்கி வராத மனைவி” முத்தலாக் கூறிய கணவன்..!!

உத்தர பிரதேசத்தில்  புது ஆடை வாங்கி கொண்டு போகாததால் மனைவியிடம் சிறையில் இருக்கும் கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா  மாவட்டத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது கணவனை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் தனக்கு பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி வரும்படி கூறியுள்ளார். ஆனால் இவர் புது ஆடை வாங்கி கொண்டு செல்லவில்லை. இதனை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு அவர் முத்தலாக் கூறி […]

Categories
தேசிய செய்திகள்

கிருஷ்ணர் ”புல்லாங்குழல் ஊதினால் பால் உற்பத்தி அதிகரிக்கும்” பாஜக MLA பேச்சு…!!

கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் போது பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என்று  பாஜக எம்.எல்.ஏ. திலிப் குமார் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின்பால் அங்கு நடைபெற்ற  நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது , கடவுள் கிருஷ்ணர் ஆடிக்கொண்டு இருக்கும் போது புல்லாங்குழல் ஊதுவார். அப்போது அவர் ஊதியதை கேட்டால் பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என்றும் , இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.இவரின் இந்த கருத்து அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள்  தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாஜகவினர் இது […]

Categories
தேசிய செய்திகள்

”பாஜக மீது தீய சக்தி ஏவினார்கள்” காங்கிரஸ் கண்டனம்…!!

பாஜக மீது எதிர் கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டுள்ளதாக போபால் MP கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா விமர்சனம் செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டில் பாஜகவின் முக்கிய , மூத்த தலைவர்கள் மரணமடைந்துள்ளனர்.  குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர் , சுஷ்மா ஸ்வராஜ் , அருண் ஜெட்லி ஆகிய முக்கிய தலைவர்கள் இறந்துள்ளனர்.பாஜகவின் அடுத்தடுத்து மரணங்கள் குறித்து  போபால் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர் கூறியது சர்சையை ஏற்படுத்தியது. அதில்,  பாஜகவின் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

சேவாக்_கை கொடுத்தவர் ”அருண் ஜெட்லி” டெல்லி கிரிக்கெட் சங்கர்….!!

டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் வைக்கப்பட்டதற்கான  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 24-ஆம் தேதி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து 25_ஆம் தேதி இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த பிரதமர் மோடி இறுதி சடங்கில் பங்கேற்காததால் இன்று அருண் ஜெட்லி வீட்டிற்கு நேரடியாக சென்ற பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

”வயநாட்டில் ராகுல்” வெள்ள பாதிப்பை பார்வையிடுகின்றார்…!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – 14 ஆகிய தேதிகளில் வயநாடு பாதிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் முதல் பெண் டிஜிபி மரணம்… அதிகாரிகள் இரங்கல்..!!

நாட்டின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். 1973ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற காஞ்சன் சௌத்ரி 1974 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பிஜேபி ஆக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் டிஜிபி அதிகாரி என்ற சாதனையை படைத்தார். தனது பதவியிலிருந்து 2007ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹரியானா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

சந்திரயான்-2 மிகப்பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது-நாசா முன்னாள் விஞ்ஞானி பாராட்டு

சந்திரயான்-2, நிலவின் தெற்கு பகுதியில் இறங்க இருப்பது மிக பெரிய சாதனை என்று நாசா_வின்  முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டிள்ளார். கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2, 650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 , 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது. இதில் நிலவின் மேற்பரப்பில்  இருக்கும் பள்ளங்கள் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் மைதானம் ”அருண் ஜெட்லி” பெயருக்கு மாற்றம்…!!

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம்  தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24-ஆம் தேதி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து 25_ஆம் தேதி இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

”உண்மை ஒருநாள் வெல்லும்” ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை…!!

ப.சிதம்பரம் குறித்து பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவரின் குடும்பத்தினர் அறிக்கை விடுத்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. அதே போல அமலாக்கத்துறையினர் வழக்கு நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் ப.சிதம்பரம் வழக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அவரின் குடும்பத்தை மிகுந்த சோகத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் , […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் ”கைது தடை மேலும் நீட்டிப்பு” நாளை மீண்டும் விசாரணை…. உச்சநீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நாளை நடைபெறுமென்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ப.சிதம்பரம் சார்பாக கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர்  வடித்தாடுகின்றனர். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது இன்று 12 மணியோடு நிறைவடைகின்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற  விசாரணையில் கபில் சிபில் , அபிஷேக் மனு சிங்வி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. எங்களின் தரப்பு வாதங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“எல்லைக்குள் ஊடுருவல்” 26 பேர் அதிரடியாக கைது… மேற்குவங்கத்தில் பரபரப்பு..!!

வங்க தேச எல்லையில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவ முயன்ற 26 பேரை எல்லை பாதுகாப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது. நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருந்ததன் காரணமாகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் நோக்கிலும் கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ந்து இந்திய உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் வங்கதேச எல்லையில் இருந்து 26 பேர் மேற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஆதார் அட்டை: மத்திய அரசு நடவடிக்கை

ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதை  தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு  இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது. அரசு சலுகைகள், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்பதால், அம்மாநில மக்கள் அனைவருக்கும் ஆதார் பதிவை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்ட பணிகளாக  ஜம்மு- காஷ்மீர் முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அதிகளவிலான பொது சேவை […]

Categories
தேசிய செய்திகள்

“வேன் மீது சரக்கு லாரி கவிழ்ந்து கோர விபத்து” 16 பேர் உடல் நசுங்கி பலி… 5 பேர் காயம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓன்று சரக்கு ஏற்றிக்கொண்டு  வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 3 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]

Categories
தேசிய செய்திகள் பேட்மிண்டன் விளையாட்டு

”பி.வி சிந்து_க்கு ரூ 10,00,000 காசோலை” மத்திய அமைச்சர் வழங்கினார்…!!

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சந்தித்து வாழ்த்து பெற்றார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை […]

Categories
தேசிய செய்திகள் பேட்மிண்டன் விளையாட்டு

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற பி.வி சிந்து ……!!

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து வீராங்கனை பி.வி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொருளதார பேரழிவு…. பிரதமருக்கு தெரில…. பணத்தை திருடாதீங்க…. ராகுல் கடும் விமர்சனம்…!!

பொருளாதார சீரழிவை போக்க இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பயனற்றது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணமாக ஆட்டோ மொபைல் வீழ்ச்சியை பார்க்க முடியும்.இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதன் ஒரு பகுதியாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு ”ரூ 1,76,000,00,00,000” கொடுக்கும் ரிசர்வ் வங்கி …!!

மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி கடன் கொடுப்பதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தன.மேலும் பல்வேறு தொழில்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் பல்வேறு விமர்சனம் எழுந்தது. இதையடுத்து கடந்த 23_ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் , அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. இந்தியா போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.என்.எக்ஸ் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது….!!

ப.சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ப.சிதம்பரம் சார்பாக கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர்  வடித்தாடுகின்றனர். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது இன்று 12 மணியோடு நிறைவடைகின்றது. இந்தநிலையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கேட்டு ஒருபக்கம் வாதம் நடந்தாலும் இன்னொரு பக்கம் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் குழு சிபிஐ சிதம்பரத்தை கைது செய்தது சட்டத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”அருண்ஜெட்லி வீட்டில் மோடி” குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்…!!

அருண்ஜெட்லி மறைவில் கலந்து கொள்ள முடியாததால் பிரதமர் மோடி அருண் ஜெட்லி வீட்டிற்கு சென்று குடும்பத்தருக்கு ஆறுதல் கூறினார். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம்  தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பாஜக மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் மாயம்…!!

தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை  சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் படித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.   தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக தலைவராக இருக்கும் உதய் பிரதீப் என்பவரின் 23 வயதான மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, இங்கிலாந்தின் இயந்திர கற்றல்  மற்றும்  செயற்கை நுண்ணறிவியலில்  எம்.எஸ் பயின்று வருகிறார். இவர் இங்கிலாந்திற்கு படிக்க  சென்றதில் இருந்து தினமும் பெற்றோருடன் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பேசவே இல்லை. இதையடுத்து சந்தேகமடைந்த உதய் பிரதீப், மகன் மாயமானது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள் பேட்மிண்டன் விளையாட்டு

பிரதமர் மோடியை சந்திக்கும் பி.வி சிந்து …!!

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து இன்று பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகின்றார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

”பாஜகவுக்கு சூனியம் வச்சுட்டாங்க” கலங்கிய பாஜக MP …!!

பாஜக மீது எதிர் கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டுள்ளதாக போபால் MP பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் பாஜகவின் முக்கிய , மூத்த தலைவர்கள் மரணடைந்துள்ளனர். பாஜகவினரின் இந்த மரணம் நாடு முழுவதும் உள்ள அவர்களின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர் , சுஷ்மா ஸ்வராஜ் , அருண் ஜெட்லி ஆகிய முக்கிய தலைவர்கள் இறந்துள்ளனர். பாஜகவின் அடுத்தடுத்து மரணங்கள் ஏற்படுவதால் போபால் […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி இறுதி சடங்கு… பா.ஜ.க எம்.பி உட்பட 11 பேர் செல்போன் திருட்டு..!!

அருண் ஜெட்லி இறுதி சடங்கு நிகழ்ச்சியில்  பா.ஜ.க எம்.பி பாபுல் சுப்ரியோ மற்றும் திஜாரவாலா உட்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளது.  பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம்  தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பாஜக மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

2017-ஆம் ஆண்டு சாலை விபத்தில் எந்த மாநிலத்தில் அதிக பேர் மரணம்..?

2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.  சாலை விபத்துகளை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றன. ஆனாலும் சாலை விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பல்வேறு சமயங்களில் நிகழும் சாலை விபத்துக்களில் அதிக பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஒரு நாளுக்கு 405 பேர் சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர். கடந்த 2017- ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒட்டு மொத்தமாக 4,64,000 சாலை விபத்து […]

Categories
தேசிய செய்திகள்

பார்சலில் பாம்பு…. ஓட்டம் பிடித்த உரிமையாளர்…..ஒடிஷா_வில் நடந்த வினோதம்…!!

ஒடிஷா_வில் வீட்டுக்கு வந்த பார்சலில் பாம்பு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் ஒடிசாவின் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் வேலை செய்கின்றார். இவருக்கு அண்மையில் ஒரு பார்சல் வந்துள்ளது.  ஆந்திராவின் குண்டூரில் வந்த பார்சலில் வீட்டு உபயோக பொருட்கள் என்று எண்ணிய முத்துக்குமார் அதை திறந்து பார்த்தார். அப்போது பார்சலில் இருந்து விஷம் கொண்ட ஒரு பாம்பு வெளியே தலைகாட்டியதை கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து அவர் ஓட்டம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. #WATCH […]

Categories
தேசிய செய்திகள்

”நிலவின் 2_ஆவது புகைப்படம்” வெளியிட்டது சந்திராயன்-2 ..!!

தற்போது நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 நிலவை இரண்டாவது புகைப்படம் எடுத்திருக்கிறது.  கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2, 650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 , 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது.அதாவது பூமிக்கும் நிலவுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் […]

Categories

Tech |