Categories
அரசியல் தேசிய செய்திகள்

எல்லாம் போச்சு…. மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் ….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்துவந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சரத் வாங்க…. பாஜகவும் வேண்டாம்….. சேனாவும் வேண்டாம்…. ஆளுநர் அழைப்பு ..!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கக் கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை மறுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தன்னால் ஆட்சியமைக்க இயலாது என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்தார்.அந்த அழைப்பை ஏற்று ஆளுநரை சந்தித்த சிவசேனா, காங்கிரஸிடம் இருந்து உறுதியான நிலைப்பாடு தெரிவிக்காத நிலையில் ஆளுநரிடம் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா.! ”தலைநகருக்கு வந்த சோதனை”…. ரூ 300_க்கு காற்று விற்பனை …!!

டெல்லியில் காற்று மாசுபாடு மிக கடும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் தூய்மையான ஆக்சிஜன் 300 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் அவலமும் நிகழ்கிறது. டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மிக மோசமான நிலையில் நீடித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுவாசிக்கும் காற்றும் அங்கு விற்பனையாகி வருகிறது. டெல்லியில் சுத்தமான காற்றை OXY PURE என்ற விற்பனை மையத்தை உருவாக்கி விற்பனை செய்துவரும் அவலமும் நிகழ்கிறது. அங்குள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கு : வெறுப்பு பரப்புரையை முன்னெடுத்த 77 பேர் கைது..!!

சமூக வலைதளங்கள் வாயிலாக மதநல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட 77 பேரை காவலர்கள் கைது செய்தனர். அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது மக்களின் உணர்வு ரீதியான விவகாரம் என்பதால், உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த இரு தினங்களில், சமூக வலைதளங்களில் வெறுப்பு பரப்புரையை முன்னெடுத்த 77 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மத்திய அமைச்சர் வேண்டாம்” பதவியை தூக்கி எறிந்த சிவசேனா …..!!

பாஜகவுடனான கூட்டணி முறிவைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா விலகியுள்ளது. இதனால் அக்கட்சி தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தன.ராஜ்தாக்கரே கட்சியான நவநிர்மாண் சேனா ஒரு இடத்தில் வெற்றிபெற்று தனது கணக்கைத் தொடங்கியது. சமாஜ்வாதி, பிரகார் ஜனசக்தி, ஓவைசியின் அகில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நீங்க தான் முதல்வர்….. 2 நாளில் நிருபியுங்கள்….. பட்னாவிஸ்_க்கு ஆளுநர் செக் ..!!

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா – பாஜக இடையே ஆட்சிப் பகிர்வில் கடும் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், தற்போது முதலமைச்சராக பதவி ஏற்க வருமாறு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், வருகின்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அயோத்தி தீர்ப்பை பாஜக சொந்தம் கொண்டாட முடியாது -உத்தவ் தாக்ரே விளாசல்

அயோத்தி தீர்ப்பின் முடிவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சொந்தம் கொண்டாட முடியாது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கருத்து தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்த நாள் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி தீர்ப்பு: சகோதர , சகோதரி கருத்து…..!!

அயோத்தி தீர்ப்பு குறித்து, ராகுல் காந்தியும் ,பிரியங்கா காந்தியும் கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “அயோத்தி விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிப்பதன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியப் பொருளாதார தரம் குறித்து மூடீஸ்-இன் பார்வை தவறு….!!

பெரும் வளர்ச்சி கண்டு வரும் இந்தியப் பொருளாதார தரம் குறித்து மூடீஸ் நிறுவனம் தவறாக மதிப்பீடு செய்து வருவதாக அரசின் அங்கமான இந்தியா ஐஎன்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அரசு சார்பில் பொருளாதார மந்த நிலையை மேம்படுத்தப் பல செயல்பாடுகளை தொடர்ந்து நிகழ்த்தி வரும் நிலையில், மூடீஸ் எனும் பொருளாதார குறியீட்டு நிறுவனம் இந்தியாவின் தர மதிப்பீடு கீழ் இறங்கியுள்ளதாகக் கூறியது.இதற்கு முதன்முதலாக நேற்றுப் பதிலளித்த இந்தியா, தேவையான வளர்ச்சியை நாடு அடைந்து வருவதாகக் கூறியது. இதனைத் தொடர்ந்து, இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

பொறுப்பற்ற பாஜக ஆட்சி…. மக்கள் கடும் அவதி…. மாயாவதி விமர்சனம்…!!

ஆளும் பாரதிய ஜனதா அரசின் பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற ஆட்சியால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என்று  மாயாவதி விமர்சித்துள்ளார். நேற்று நவம்பர் 8_ஆம் தேதி பிரதமர் மோடி உயர்மதிப்புக் கொண்ட ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த 3_ஆம் ஆண்டு ஆகும். இதனால் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் மோடியில் இந்த முடிவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதே போல தற்போது நடைபெறும் பொருளாதார மந்தத்திற்கு  மோடியின் இந்த அறிவிப்பு காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

”வருங்கால வைப்புத்தொகை ஊழல்” விரிவான விசாரணை தேவை – அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 2022இல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மின்சார தொழிலாளர்கள் வருங்கால வைப்புத்தொகை ஊழல் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் லக்னோவில் கூறியதாவது:உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவினர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டாடிவருகின்றனர். தன்னிடம் இருந்த பணத்தை மாற்ற (ரூ.500, ரூ.100) அவரின் தாயார் நீண்ட வரிசையில் வங்கிமுன்பு காத்திருந்தபோது பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

வெற்றியும் இல்ல…. தோல்வியும் இல்ல ….. மோடி ட்விட்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கப்படாது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,உச்ச நீதிமன்ற தீர்ப்பு யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கப்படாது. நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

இவர் உளவாளி தானே ? கொலை செய்த மாவோயிஸ்ட்கள்….!!

காவல் துறைக்கு உதவி செய்து, மூன்று மாவோயிஸ்ட்டுகள் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கருதி, மாவோயிஸ்ட்டுகள் ஒருவரை கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் காவல்துறையினர் மாவோயிஸ்ட்டுகள் மீது தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குக் காவல் துறையினருக்கு உதவியதாகக் கருதி 30 வயதாகும் சுனில் பஸ்வான் என்பவரை, மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்து அருகிலுள்ள காட்டில் புதைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருக்கும் மாவோயிஸ்ட்டுகள், எங்களுடன் பயணித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அய்யோ பாவம்… ”இனி பாஜகவில் முடியாது”…. காங்கிரஸ் கடும் விமர்சனம் …!!

ராமர் கோயிலை வைத்து இனி பாஜக அரசியல் செய்ய முடியாது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்ப்பு இன்று வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு […]

Categories
தேசிய செய்திகள்

”நாட்டுக்கு எதிரான செயலி” உடனே நீக்குங்க… கூகுளை நாடிய முதல்வர் …!!

இந்தியாவுக்கு எதிரான ஆண்ட்ராய்டு செயலியை நீக்க கூகுளிடம் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கோரிக்கைவிடுத்துள்ளார். குருநானக் தேவின் பிறந்தநாளையொட்டி, சீக்கிய மக்களை பிளவுபடுத்தும் எண்ணத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். அந்தச் செயலியின் பெயர் ‘2020 சீக் ரெஃபெரெண்டம்’ (2020 Sikh Referendum) என்றும் அது ஐஎஸ்ஐ அமைப்பு சீக்கியர்களை அழிக்க முன்னெடுத்துள்ள ஏற்பாடுகள் எனவும் கூறியுள்ளார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, சமூக ஒற்றுமையைப் பேணி […]

Categories
தேசிய செய்திகள்

ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ…தேசபக்தியை வெளிப்படுத்துங்கள்- பிரதமர் மோடி..!!

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட  அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 : 30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது.. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கு… “தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை”… சன்னி வக்பு வாரியம்.!!

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிப்பதாகவும் ஆனால் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை எனவும் சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட  அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 : 30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது.. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : அயோத்தி நிலம் ”இந்துக்களுக்கே” உச்சநீதிமன்றம் உத்தரவு ….!!

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாவதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று அயோத்தி சர்சை இடம் யாருக்கு என்பது குறித்த வழக்கை விசாரித்து இன்று அதற்கான இறுதி தீர்ப்பை வழங்கி உள்ளனர். அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அயோத்தி வழக்கில்….. ”ராமர் கோவில் கட்டலாம்” கோர்ட் அதிரடி…

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கிய வழக்குகளில் ஒன்றாக கருதப்படும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பராசக்தி திரைப்பட காட்சி போல நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. அந்த வரிசையில் கடவுள் ராமருக்காக வழக்கு தொடர்ந்த விநோதம் மட்டுமல்லாமல் வரலாறு மத நம்பிக்கை , தொல்லியல் ஆய்வு , அரசியல் என அனைத்தும் பின்னிப் பிணைந்த ஒரு வழக்கு உண்டு என்றால் அது பாபர் மசூதி வழக்கு தான். மசூதி இடிக்கப்பட்டதோ […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

BREAKING : அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் – உச்சநீதிமன்றம்

நாடே உற்றுநோக்கியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்குகின்றது. தலைமை நீதிபதி தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்களை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களில் அங்கு இந்து கோயில் இருந்தது என உச்சநீதிமன்றமே கூறினாலும் அதை மட்டுமே வைத்து முடிவெடுத்துவிட முடியாது.

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ”இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல”- தலைமை நீதிபதி

நாடே உற்றுநோக்கியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்குகின்றது. தலைமை நீதிபதி தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் :  நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; எதையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்துவிட முடியாது. சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது; அயோத்தி தங்கள் இடம் என இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களும் பாபர் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி வாசிக்கிறார் …!!

அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி வாசித்து வருகின்றார். தலைமை நீதிபதி தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம்கள் பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் குலைக்கக்கூடாது தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை பாபர் மசூதிக்கு கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல

Categories
தேசிய செய்திகள்

வெற்றியும் இல்ல… தோல்வியும் இல்ல ….. – பிரதமர் மோடி ட்வீட்

அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணி அளவில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நம்பப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 40 நாட்கள் நடைபெற்ற விசாரணை முடிவு  பெற்றதை அடுத்து உச்சநீதி மன்றத்தின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அமித்ஷா எதுக்கு ? தேவை இல்லை -பாஜகவை கதறவிட்ட சிவசேனா …!!

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தயவு தேவை இல்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் மகாராஷ்டிராவில் சிவசேனா கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் , ஆட்சியை கைப்பற்ற தங்களுக்கு அமித்ஷா  மற்றும் பட்னாவிஸ் அடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். தாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்ததாகவும் , பாஜக பொய் உரைத்ததால் தாங்கள் அவர்களுடன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இழுபறி ஜனாதிபதி ஆட்சி ? பரபரப்பு நகர்வுகள் …!!

மராட்டியத்தில் சட்டமன்றத்தின் ஆயுட் காலம் முடிவுக்கு வந்ததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தபடுமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிகாரப் பகிர்வு குறித்து பாரதிய ஜனதா சிவசேனா இடையிலான மோதலால் அம்மாநில ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இந்நிலையில் தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதாவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில் 105 இடங்களை பிடித்த பாரதிய ஜனதா கட்சியினர் பகத் சிங்க் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மராட்டிய முதல்வர் பதவி விலகல்” சிவசேனா மீது கடும் கோபத்தில் பாஜக …!!

சிவசேனா பாரதிய ஜனதா இடையே சமரசம் ஏற்படாமல் போனதால்  மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதவி விலகியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தல் முடிவுகள் வந்த போது ஆட்சி அமைக்க அனைத்து வழிகளையும் தேர்வு செய்வோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியது அதிர்ச்சி அளிக்கிறது என்றார். மெகா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களித்ததாக பட்னவிஸ் கூறியுள்ளார்.உத்தவ் தாக்கரே குறித்து பாரதீய ஜனதா கட்சி ஏதும் புகார் கூறாத நிலையில் பிரதமர் மோடி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ராமருக்கா ?….. பாபருக்கா ? அயோத்தி வழக்கில்….. இன்று தீர்ப்பு , பெரும் பரபரப்பு …!!

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாவதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணி அளவில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நம்பப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 40 நாட்கள் நடைபெற்ற விசாரணை முடிவு  பெற்றதை அடுத்து உச்சநீதி மன்றத்தின் அலுவல் பட்டியலில் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் யாருக்கு ? கடந்து வந்த பாதை…. இன்று இறுதி தீர்ப்பு…..!!

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கிய வழக்குகளில் ஒன்றாக கருதப்படும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் காலை10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது இந்த நிலை பிரச்சனை ஏற்பட காரணம் என்ன இந்த வழக்கின் பின்னணி என்பது குறித்த செய்தி தொகுப்பு பராசக்தி திரைப்பட காட்சி போல நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. அந்த வரிசையில் கடவுள் ராமருக்காக வழக்கு தொடர்ந்த விநோதம் மட்டுமல்லாமல் வரலாறு மத நம்பிக்கை , தொல்லியல் ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

மோடி மன்னிப்பு கேட்கணும் “துக்ளக் ஆட்சி நடைபெறுகிறது” டி.கே.ரங்கராஜன் MP சாடல்

மூன்று ஆண்டுகள் கழிந்தும் பண மதிப்பிழப்பின் தாக்கம் இன்று பொருளாதாரத்தை பாதிப்பதால் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் இன்னும் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், “மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி பணம் வேண்டாம்….. ”வசூலிக்கப்படாது” ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக வரும் ஜனவரி முதல் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக கடந்த மூன்றாண்டுகளாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வர்த்தகம், பணபரிவர்த்தனைக்கான டிஜிட்டல் பயன்பாடானது அபரிமிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த ஓராண்டில் 96 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும், நெப்ட்(NEFT) மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மோடியை விமர்சித்த பத்திரிக்கையாளர்” – குடியுரிமை ரத்து..!!

 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் ஆதிஷ் தசீரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர் அதீஷ் தசீர். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான குடியுரிமை அட்டை- யுடன் (Overseas Indian Citizenship Card – OIC) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழ்ந்துவரும் ஆதீஷ், இந்திய அரசியல் குறித்து பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரை எழுதி வருகிறார்.அந்த வகையில், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

SPG பாதுகாப்பு இல்லை…. ”பாஜகவின் பழிவாங்கல்” – அஹமத் படேல் சாடல் …!!

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது பாஜகவின் பழிவாங்கும் நோக்கை காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமத் படேல் சாடியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்க எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு (Special Protection Group) வழங்கப்பட்டது.அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் பதவி… ”அப்பாக்கு வாக்கு கொடுத்துட்டேன்” அசைந்து கொடுக்காத உத்தவ்

முதலமைச்சர் பதவி குறித்து அமித்ஷாவிடம் முன்கூட்டியே பேசியதாகவும், தாக்கரே குடும்பத்தினர் ஒருவரை முதல்வராக்குவேன் என தனது தந்தை பால்தாக்கரேக்கு வாக்கு கொடுத்துள்ளதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டா போட்டி காரணமாக இருகட்சிகளும் முரண்டு பிடித்துவருவதால் முடிவுகள் வெளிவந்த 15 நாட்கள் கழித்தும் ஆட்சி அமையவில்லை. சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு நாளை வெளியாகிறது …..!!

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30க்கு வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. நாடே பெரிதும் எதிர்பார்க்கும் சர்ச்சைக்குரிய ராம் ஜன்ம பூமி – பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தொடர் விசாரணையை மேற்கொண்டது. 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உச்ச […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென மோதிய லாரி …. சாலையில் சென்ற 12 பேர் பரிதாபமாக பலி ….!!

சித்தூர் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய பலரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். கன்டெய்னர் லாரியில் பிரேக் பிடிக்காத காரணத்தினாலேயே, இந்த விபத்து ஏற்பட்டது […]

Categories
தேசிய செய்திகள்

ஊட்டச்சத்து குறைபாடு: பாஜகவின் உணவு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா காங்கிரஸ்?

மத்தியப் பிரதேச அங்கன்வாடிகளில் மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பாஜகவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அங்கன்வாடிகளில் நவம்பர் மாதம் முதல் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதனை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் இமர்தா தேவி, “நாங்கள் மகாராஷ்டிராவிற்கு சென்று அங்குள்ள அங்கன்வாடிகளில் ஆய்வு செய்துள்ளோம். 2016ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அதெல்லாம் இல்ல…. இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்துவருகிறது.!!

முக்கிய பொருளாதார வளர்ச்சியை இந்தியா தொடர்ந்து இழந்து வருவதாக மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பு குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் இந்தியாவின் மதிப்பீடு குறித்த தனது பார்வையை நிலையான இடத்திலிருந்து, எதிர்மறையான இடத்துக்கு இறக்கிக் கணித்துள்ளதற்கு இந்திய அரசுத் தரப்பில் தனது முதல் எதிர்க்கருத்தை இன்று கூறியிருக்கிறது. அதில் இந்தியா முக்கியப் பொருளாதார நிலைகளில் நல்ல வளர்ச்சியைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்னால் […]

Categories
தேசிய செய்திகள்

தொலைக்காட்சியில்…. ”தொலைந்த 1வயது குழந்தை உயிர்”…. ஆந்திராவில் சோகம்

ஆந்திராவில் ஒரு வயது குழந்தை மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில், அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்டம் காஷிபுக்கா பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு, ஒரு வயதில் மோஹ்ரினி என்ற குழந்தை இருந்துள்ளது. இக்குழந்தை இன்று (நவ.7) காலை உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, தொலைக்காட்சிப் பெட்டியின் கம்பியை (TV wire) இழுத்து விளையாடியுள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக குழந்தை மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில், […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரூ 13,000,00,00,000.. ”தற்கொலை செய்துகொள்வேன்” மிரட்டும் மோசடி மன்னன் …!!

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என நிரவ் மோடி மிரட்டல் விடுத்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, லண்டனுக்குத் தப்பிச்சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை அங்கிருந்து நாடு கடத்தி, இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.இந்நிலையில், இதுதொடர்பாக வழக்கில் கடந்த மார்ச் மாதம் நிரவ் மோடியை லண்டன் காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது லண்டனின் வானண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் […]

Categories
தேசிய செய்திகள்

”பொருளாதாரத்தை உயர்த்தனும்” மாநிலங்கள் உதவனும் – மோடி வேண்டுகோள் …!!

இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக மாற்ற, மாநிலங்கள் அனைத்தும் பங்களிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார நிலை குறித்துப் பேசினார்.அதில், ‘நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியாவின் மாநிலங்களுக்கு பெரும் பங்குள்ளதாகத் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களும் தங்கள் முழு ஆற்றலை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 25,000,00,00,000 ஒதுக்கீடு…. ”கடன் வாங்கிக்கோங்க” ரியல் எஸ்டேட்_க்கு ஜாக்பாட். ..!!

ரியல் எஸ்டேட் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,ரியல் எஸ்டேட் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க சிறப்பு சாளரம் அமைக்கப்பட்டு, 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் நிதிப்பற்றாக்குறையால் கட்டி முடிக்கப்படாத கட்டடங்களை கட்டி முடிக்கலாம். இதனால் 1,600 கட்டுமானத் […]

Categories
தேசிய செய்திகள்

ஆத்தாடி…. ‘கடவுளுக்கே முகமூடி’ …. மாசு_வின் வேதனை சிவனுக்கு சோதனை …!!

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு முகமூடி போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் காற்று மாசு சிக்கல் அதிகரித்துள்ள நிலையில் வாரணாசியில் உள்ள சிவனுக்கு அங்குள்ள அர்ச்சகர்கள் முகமுடி அணிவித்துள்ளனர். நாடு முழுவதும் காற்று மாசு பிரச்னை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் ஏற்படும் மாசானது, […]

Categories
தேசிய செய்திகள்

வட்டாசியரை கொன்ற கொலையாளி….. மருத்துவமனையில் மரணம் …!!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வட்டாட்சியரைத் தீயிட்டு கொலை செய்த குற்றவாளி சுரேஷ், உஸ்மானியா மருத்துவமனையில் உயிரிழந்தார். நில விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநில வட்டாட்சியர் விஜயா ரெட்டி, அலுவலகத்தில் தீயிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ், தற்போது ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுர்மெட் பகுதியில் வட்டாட்சியராகப் பணி புரிந்து வந்த விஜயா ரெட்டி கடந்த நான்காம் தேதி, […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

5 ஆண்டுகளில்…. 12,00,000 வேலைவாய்ப்புகள் – நாஸ்காம் தகவலால் மகிழ்ச்சி …!!

கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால், 12 லட்சம் நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் என நாஸ்காம் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. தேசிய மென்பொருள் சேவைகளுக்கான அமைப்பாக செயல்படும் நாஸ்காம் (NASSCOM) அமைப்பு, இந்தியாவின் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.அதில், இந்திய இளைஞர்கள் தற்போது தொழில்நுட்பம் சார்ந்த அறிவை இணையம் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் […]

Categories
தேசிய செய்திகள்

இண்டிகோ, கத்தார் ஏர்வேஸ் இடையே குறியீட்டுப் பகிர்வு ஒப்பந்தம்….!!

குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, கத்தார் ஏர்வேஸுடன் ஒரு வழி குறியீட்டுப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விமானச் சேவை அளிப்பதில் முன்னணி நிறுவனமான இண்டிகோ, வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை அளித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் சர்வதேச விமான போக்குவரத்துக் கழகத்தின் (IATA) அங்கமானது இண்டிகோ ஏர்லைன்ஸ். தங்களின் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்நிறுவனம் பல திட்டங்களையும், பயணிகளுக்குச் சலுகைகளையும் அளித்து வருகிறது.இதனிடையில் கத்தார் ஏர்வேஸுடன் ஒரு வழி குறியீட்டுப் பகிர்வு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் 70 லட்சம் மக்களை முடக்கியது – கபில் சிபல்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, 70 லட்சம் மக்கள் முடக்கப்பட்டனர் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் சார்பாக வழக்கில் ஆஜராகிய கபில் சிபல், மத்திய அரசின் நடவடிக்கையால் 70 லட்சம் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது, இதுபோல் சுதந்திர இந்தியாவில் நடந்ததில்லை” எனத் தெரிவித்தார். […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கர்தார்பூர் புனிதப் பயணத்திற்கு பாஸ்போர்ட் கட்டாயம்..!!

கர்தார்பூர் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்திய சீக்கியர்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கட்டாயம் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப்பையும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் கோயிலையும் இணைக்கும் வழித்தடம்தான் கர்தார்பூர் சாஹிப் வழித்தடம். இதன் வழியாக, இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப்புக்குச் சென்று அங்கு வழிபட முடியும்.சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குரு நானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

‘காஷ்மீர் மக்களை அச்சுறுத்தும் பிரிவினைவாதிகள்…!’

பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் பொதுமக்களிடத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் பொய் பரப்புரை செய்து வருவதாகக் காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. ஜம்மு & காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.அதன்படி, ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை இருக்கும். லடாக் தனி யூனியன் பிரதேசமாக இருக்கும். அதற்குச் சட்டப்பேரவை இருக்காது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஜம்மு – காஷ்மீரில் இணைய தொடர்பும் தொலைபேசி தொடர்புகளும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை சூழ்ந்திருக்கும் ‘மரண புகை’!

டெல்லியை சூழ்ந்திருக்கும் புகையால், நகரம் என்ற பட்டியிலில் இருந்து நரகத்தை நோக்கி டெல்லி பயணிப்பதுபோல் உள்ளது. அதாவது மாநகரத்திலிருந்து மரண நகரமாக மாறி வருகிறது. இந்தியாவின் தலைநகரம் உண்மையில் சுவாசிக்கப் போராடுகிறது. தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவருக்கும் இது பொதுவான நிகழ்வாகிவிட்டது. இந்த ஆண்டு, காற்று மாசுபாட்டின் விளைவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. நகரத்தில் காற்றின் தரம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பருவமழை காரணமாக சிறப்பாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால், தீபாவளி பட்டாசிலிருந்து வந்த புகை, […]

Categories
தேசிய செய்திகள்

“காற்று மாசு” விவசாயிகளுக்கு இயந்திரம் வழங்க நடவடிக்கை…… பிரதமர் மோடி உத்தரவு….!!

பயிர்க் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பதை டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. விவசாய கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை வாங்க ஹரியானா பஞ்சாப் அரசுகள் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வந்த போதிலும் இந்த பிரச்சனையே அதிகாரிகள் சரிவர கையாளவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் பயிர் கழிவுகள் எரிக்காமல் கையாள […]

Categories

Tech |