Categories
தேசிய செய்திகள்

சர்தார் சரோவர் அணை விவகாரம்: மேதா பட்கர் தலைமையில் காலவரையற்ற போராட்டம்

சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் தலைமையிலான குழுவினர் காலவரையற்ற எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நர்மதா அணை விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் தலைமையிலான நர்மதா பச்சோ அந்தோலன் குழுவினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நர்மதா நதிக்கரை அருகே வாழ்ந்துவரும் 32 ஆயிரம் பேர் அந்த இடத்தில் அகற்றப்படுவார்கள் என்பதற்காக அவர்களுக்காக போராடிவரும் நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தண்ணீர் அரசியல் செல்லாது – அரவிந்த் கெஜ்ரிவால்

தண்ணீரை வைத்து அரசியல் செய்வது சரி அல்ல என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள நகரங்களில் வழங்கப்படும் குழாய் தண்ணீரின் தரத்தை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நேற்று வெளியிட்டார். டெல்லியிலிருந்து பெறப்பட்ட 11 மாதிரிக்களின் தரத்தை ஆராய்ந்ததில், அங்கு குழாய்களின் மூலம் வழங்கப்படும் தண்ணீரின் தரம் இந்திய தர நிர்ணயம் விதித்த அளவுகோலுக்கு கீழ் உள்ளது என ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். இதேபோல், சென்னை, பெங்களூரு, சண்டிகர், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தை தீர்ப்பாரா மத்திய அமைச்சர்?

முதலமைச்சர் பதவியை இரண்டு ஆண்டுகளுக்கு சிவசேனாவுக்கு அளிப்பது குறித்து இரு கட்சிகளிடம் பேசிவருவதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனிடையே, மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சர் ராவத்திடம் சமரசம் குறித்து பேசி வருகிறேன். முதலமைச்சர் பதவியை மூன்று ஆண்டுகள் பாஜகவுக்கும் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் – வருமானம் அதிகரிப்பு…!!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், வருமானம் இரட்டிப்பாகியுள்ளதாக கேரள தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோயிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே கோயிலை நிர்வகிக்கும் கேரள தேவசம் போர்டின் தலைவர் என். வாசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பக்தர்கள் கூட்டமும் வருமானமும் கோயிலில் அதிகரித்துள்ளது. 2 கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்தி 533 ரூபாய் வருவாய் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியாவின் ‘பொதுச் சுகாதாரம்’ மேம்பட பில்கேட்ஸ் சொல்லும் வழி..!!

தனியார் முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு குறைந்த விலையில் இந்திய பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபரான பில்கேட்ஸ் தனது மனைவி மிலின்டா கேட்ஸூடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு இந்தியா எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள அவர் இந்தியாவின் சுகாதாரம், வேளாண்மை, பின்தங்கிய மக்களின் நிதித் தேவைகள் குறித்துப் பேசினார். பொதுச்சுகாதாரம் குறித்து பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றம் நோக்கி படையெடுத்த டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள்..!

400 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள், கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 400 விழுக்காடு உரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் காங்கிரஸ் அமைச்சருக்கு வெட்டு… கர்நாடகாவில் பரபரப்பு..!!

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் நரசிம்மராஜ தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன்வீர் சேட். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான இவர், நேற்றிரவுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரை, அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென்று கத்தியால் குத்தி விட்டு ஓடினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் வலியால் துடித்தார். கழுத்துப் பகுதியில் வெட்டு காயமடைந்த அவர், […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானார் எஸ்.ஏ.பாப்டே!

உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், முன்னாள் […]

Categories
தேசிய செய்திகள்

”மாவோயிஸ்ட்கள் பயிற்சி”….. கேரளாவில் அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ

கேரளாவின் நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி எடுக்கும் பிரத்யேக வீடியோ வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட்கள் மீது கேரள தண்டர்போல்ட் (Thunderbolt) படையினர் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு, மாவோயிஸ்ட்களிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர்த் தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேரள வனப்பகுதியிலுள்ள நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி பெரும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதை காவல் துறையினரும் உறுதி செய்தனர். மேலும், பழங்குடியினரும் கருலாய் வரயன் வனப்பகுதியில் ஆயுதமேந்திய […]

Categories
தேசிய செய்திகள்

எழுமலையானை தரிசித்த ரஞ்சன் கோகாய்..!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள ரஞ்சன் கோகாய் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி பதவி ஏற்றார். தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருக்கும்போது, அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என ரஞ்சன் கோகாய் உட்பட நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பினை நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால், இவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதிலிருந்து, தீபக் மிஸ்ரா […]

Categories
தேசிய செய்திகள்

அக்னி 2 ஏவுகணை இரவு நேரச் சோதனை வெற்றி…..!!

ஒடிசாவில் நடைபெற்ற அக்னி 2 ஏவுகணையின் இரவு நேரச் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒடிசாவிலுள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில், சனிக்கிழமை இரவு, அக்னி 2 ஏவுகணையில் இரவு நேரத் தாக்குதல் துல்லியத்தைப் பரிசோதிக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் இரவு நேரத்தில் ஒரு ஏவுகணையைச் சோதிப்பது இதுவே முதல்முறை என்றும் அக்னி-2வின் இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்தார். 20 மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்ட அக்னி 2 ஏவுகணை […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி தீர்ப்பு சரியில்லை” எதிர்த்து மறுசீராய்வு மனு ….!!

உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்திலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும எனத் தீர்ப்பில் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

அடேங்கப்பா….!…. 1,50,0,000,000…. TIK TOK ஆதிக்கம்…. புள்ளைங்க தான் கெத்து …!!

டிக்டாக் செயலியை உலக அளவில் அதிக டவுன்லோடுகளை செய்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து கலக்குகின்றது. அனைவரும் தெரிந்த கூகுள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலியை சுமார் 1.5 பில்லியன் டவுன்லோடு செய்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 466.8 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது மொத்த டவுன்லோடு சதவிகிதத்தில் 31 %  ஆகும்.கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி  டிக்டாக் செயலி பெற்றுள்ளது. இதில் 45.5 மில்லியன்  பயன்பாட்டாளர்களை பெற்று சீனா உள்ளது. […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கூட்டம் தேவையில்லை… “ஆஹா செம்ம டேஸ்ட்”… ஜாலியாக இனிப்பு சாப்பிட்டு போட்டியை ரசித்த கம்பீர்..!!

டெல்லியில் காற்று மாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கவுதம் கம்பீர் ஜாலியாக கிரிக்கெட்  போட்டியை பார்க்க சென்றதால் இணையவாசிகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபகாலமாக டெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் டெல்லியில் காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக நகர அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இக்குழுவின் உறுப்பினறும், டெல்லி கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பங்குச் சந்தைகள் உயர்வு …!!

பங்கு வர்த்தகத்தின் நிறைவு நாளான இன்று பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் ஆகின. மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 38.23 புள்ளிகள் அதிகரித்து 40,331.11 ஆக காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டியைப் பொறுத்தமட்டில் 11.55 புள்ளிகள் உயர்ந்து 11,886.65 ஆக வர்த்தகம் ஆனது.இன்ஃப்ராடெல், பார்தி ஏர்டெல், ஜூல், கிராஸிம் உள்ளிட்ட பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் உயர்ந்து காணப்பட்டது. அந்த பங்குகள் முறையே 9.54, 8.76, 3.37 மற்றும் 3.11 என உயர்ந்திருந்தது. ஐஓசி, […]

Categories
தேசிய செய்திகள்

இன்றோடு நிறைவு….. நாளை மறுநாள் ஓய்வு…. அடுத்தநாள் பிறந்தநாள் … ரஞ்சன் கோக்காய் ஸ்பெஷல் …!!

உச்சநீதிமன்றத்தின் தலைமை ரஞ்சன் கோக்காய் தனது கடைசி பணி நாளை முடித்திருக்கின்றார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோக்காய்_யின் பதவி காலம் என்பது நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உடன் முடிவடையும் நிலையில் , இன்றைய தினத்தோடு அவரின் பணி முடித்துள்ளது.  இன்றோடு தனது பணியினை அவர் நிறைவு செய்திருக்கிறார். இன்று காலை 10.30 மணி அளவில் தனது அலுவலக பணியை தொடர்ந்த அவர் வழக்கம் போலவே அதிரடியான பணிகளை கையாண்டு  கடைசி தினத்தையும் முடித்துள்ளார். பொதுவாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் […]

Categories
தேசிய செய்திகள்

போபால் விஷவயுக்கசிவு எதிர்ப்பு போராளி காலமானார்..!!

போபால் விஷவாயுக் கசிவுக்கு எதிராக போராடிய சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஜாபர் காலமானார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 1984-ஆம் ஆண்டு விஷவாயுக் கசிவு துயரம் நடந்தது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த துயரத்துக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்தவர்தான் இந்த அப்துல் ஜாபர். போபால் விஷவாயுக்கசிவு துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வித சமரசமுமின்றி வாதாடினார்.கடைசிவரை யாரிடமும் சமரசம் செய்துக் […]

Categories
தேசிய செய்திகள்

இதயத்தை ரணமாக்கும் சம்பவம்…. “உயிருடன் இருப்பதால் உங்களுடன் பேசுகிறேன்”… காஷ்மீர் எழுத்தாளர் உருக்கம்..!!

தான் உயிருடன் இருப்பதால் தன்னால் பேச முடிகிறது என்று காஷ்மீர் எழுத்தாளர் சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) உருக்கமாக தனது பேச்சை தொடங்கினார். மனித உரிமைகள் தொடர்பாக காங்கிரஸின் விசாரணை அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நடந்தது. அப்போது காஷ்மீர் பகுதியில் 1990ஆம் ஆண்டுகளில் இந்துக்கள் அனுபவித்த கொடுமையை சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) பகிர்ந்தார். அவர் பேசியதாவது, நான் காஷ்மீரைச் சேர்ந்த சிறுபான்மை இந்து சமூகத்தை சேர்ந்தவள். சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இன அழிப்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”பெண்களுக்கு அனுமதி இல்லை” கேரள கம்யூனிஸ்ட் முடிவு …!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில்  நாளை மாலை மண்டல பூஜை_க்கு வழிபட 36 பெண்கள் அனுமதி கோரியுள்ளனர். கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற  உத்தரவின் பிறகு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று உத்தரவின் பேரில் பல பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக வந்தபோது அந்த பகுதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து , கோவிலுக்கு வந்த பெண்களை பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு_க்கு நேற்று உச்சநீதிமன்றம் மாற்றியது.   இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

”பாதுகாப்பு கொடுக்க முடியாது” பின்வாங்கிய கேரளா அரசு ….!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில்  நாளை மாலை மண்டல பூஜை_க்கு வழிபட 36 பெண்கள் அனுமதி கோரியுள்ளனர். கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற  உத்தரவின் பிறகு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று உத்தரவின் பேரில் பல பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக வந்தபோது அந்த பகுதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து , கோவிலுக்கு வந்த பெண்களை பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு_க்கு நேற்று உச்சநீதிமன்றம் மாற்றியது. இந்த நிலையில் சபரிமலை […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானின் மரபணுவிலே பயங்கரவாதம்… இந்தியா பதிலடி..!!

யுனெஸ்கோவில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார் இந்தியாவின் அனன்யா அகர்வால். பாகிஸ்தானின் திமிர் பேச்சுக்கு அவர் அளித்த பதிலில், “பாகிஸ்தானின் மரபணுவிலே பயங்கரவாதம்” உள்ளது என்று கூறினார். பாரிஸில் நடந்த யுனெஸ்கோ பொதுக்கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பி இந்தியா மீது குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் அனன்யா அகர்வால் பாகிஸ்தானின் பாணியிலேயே பதிலடி கொடுத்தார். இவ்விவகாரம் தொடர்பாக அனன்யா அகர்வால் பேசியதாவது யுனெஸ்கோ அமைப்பை அரசியல் ரீதியாக பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு முதலில் என் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துங்கள்” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை முறையாக அமல்படுத்துங்கள் என்று உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. நேற்றைய தினம் சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் பெண்கள் நுழைவதற்கு எதிரான எந்த உத்தரவையும் பிறப்பிக்கமாக் இருந்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை என எதையுமே உச்சநீதிமன்றம் தெரிவிக்க வில்லை. இதனால் சற்று குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலி நரிமன் தெளிவு படுத்தியுள்ளார்.கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: மகாராஷ்டிரா : 3 கட்சியினர் நாளை ஆளுனருடன் சந்திப்பு …..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா ,காங்கிரஸ் , சிவசேனா தேசியவாத காங்கிரஸ் நாளை ஆளுநரிடம் சந்திக்கிறார்கள். மகராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள். மூன்று பேருக்குமே ஒத்துக் கொள்ளக்கூடிய விஷயங்களைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணி அமைக்கலாம் என்றும் , […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதி கேட்ட 36 பெண்களை அனுமதிக்கலாமா ? கேரள அரசு ஆலோசனை ..!!

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி தரலாமா என்பது குறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டுடன் கேரள அரசு ஆலோசனை  நடத்தி வருகின்றது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற  உத்தரவின் பிறகு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று உத்தரவின் பேரில் பல பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக வந்தபோது அந்த பகுதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து , கோவிலுக்கு வந்த பெண்களை பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: ”பேனர் வைக்க தடை கோரிய மனு தள்ளுபடி” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசும் பேனர் வைக்க தடை கோரிய வழக்கை  உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது. டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் , ஏனென்றால் பேனர் விழுந்து விழுந்து ஏராளமான சாலை விபத்துகள் , மரணம் ஏற்படுகிறது.இது தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் அளவிற்கு பெரிய ஒரு பிரச்சனையாக உருவாகி வருகிறது. எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக தமிழகம் முழுவதும் பேனர் வைக்க […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் தண்ணீர் குடிக்க… 3 முறை ‘தண்ணீர் பெல்’… அசத்தும் கேரளா.!!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் தண்ணீரை குடிக்க பெல் அடிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவனின் வாக்கு. அதன்படி பார்த்தால் உலகு மட்டுமின்றி உடலும்தான். நம் உடலின் இயக்கங்களுக்கு தண்ணீர் அத்தியாவசியமானது. தண்ணீரின் தேவை மனித உடலுக்கு அவசியம் என்பதை உணர்ந்த கேரள அரசு அதற்காக ஒரு திட்டத்தையே வகுத்துள்ளது.அத்திட்டத்தின்படி, கேரளாவில் பள்ளி மாணவ-மாணவிகளை தண்ணீர் குடிக்க வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பாடவேளைகளில் நேரம் ஒதுக்கி தண்ணீர் பருக வைக்கிறார்கள் ஆசிரியர்கள். பள்ளிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“அரசியலமைப்பு மீதான நம்பிக்கைகளுக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் அளிக்கிறது”… சீத்தாராம் யெச்சூரி..!!

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு என்பது அந்நாட்டின் புனித நூலாகக் கருதப்படுகிறது என்று சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். கேரள மாநிலம் கோழிக்கூடில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறுகையில், அயோத்தி தீர்ப்பை, சபரிமலை தீர்ப்போடு இணைத்துப் பார்க்கும்பொழுது பக்தர்களின் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருப்பதாகத் தெரிகிறது. நீதிமன்றம் அரசியலமைப்பு மீதான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரூ 72,000,00,00,00,000….. ”பயங்கரவாதத்தால் இழப்பு”….. பிரதமர் மோடி தகவல் …!!

உலகெங்கிலும் அரங்கேறிய பயங்கரவாத தாக்குதல்களால் உலக பொருளாதாரம் ரூ.72 லட்சம் கோடி (1 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பை சந்தித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 11ஆவது பிரிக்ஸ் மாநாடு பிரேசிலில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:சர்வதேச நாடுகளின் அமைதி, வளர்ச்சிக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது. உலக அளவில் அதிகரித்துவரும் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ரூ 50,000,00,00,000 நஷ்டம்….. நாட்டை விட்டு வெளியேறும் வோடபோன்?

சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. பல நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்திய தொலைத்தொடர்பு சந்தை ரிலையன்ஸின் ஜியோ வருகைக்குப் பின் வெறும் நான்கு நிறுவனங்களாகக் குறைந்தது. அதிலும் குறிப்பாக ஜியோவைத் தவிர மற்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவே கடும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. வோடபோனுக்கு ரூ.50,000 கோடி நஷ்டம் இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-2020 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தக் காலாண்டில் வோடபோன் […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தீர்ப்பு……!!

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனு மீது டெல்லி உயர் நீதின்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 74 வயதான காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை அமலாக்கத் துறையினர் அக்டோபர் 16ஆம் தேதி காவலில் எடுத்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் காவல் கடந்த 13ஆம் தேதியோடு முடிவடைந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுப்பு – சத்தீஸ்கர் முதலமைச்சர் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுப்பதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் குற்றஞ்சாட்டினார். சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், உணவு வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரை டெல்லியில் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.அப்போது சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து நெல் கொள்முதல், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதித்தார். இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய பூபேஷ் பாகல், “மத்திய அரசு நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

‘சபரிமலையில் பீடி, சிகரெட் குடித்த பெண்கள்’ – அர்ஜூன் சம்பத் சர்ச்சைப் பேச்சு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பீடி, சிகரெட், மது குடிக்கும் பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தவர் பினராயி விஜயன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சபரிமலைக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் …!!

சபரிமலையில் ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஆண்டு தோறும் மகரவிளக்கு பூஜையையொட்டி கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வார்கள், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொள்வார்கள். கார்த்திகை […]

Categories
தேசிய செய்திகள்

“உச்ச நீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன்”… ராஜ்நாத் சிங்

“ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கடந்த 2018 (டிச 14-ல்) விசாரித்து எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக முன்னாள் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் மற்றொரு ஊழல் அம்பலம் …!!

வருங்கால வைப்பு நிதி ஊழலை தொடர்ந்து மற்றொரு மோசடி அம்பலமாகி உத்தரப் பிரதேச யோகி அரசை உலுக்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில மின்சார கழக ஊழியர்களின் (Uttar Pradesh Power Corporation Limited (UPPCL)) வருங்கால வைப்புத்தொகை ரூ.2,631.20 கோடி, தனியார் நிறுவனமான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (Dewan Housing Finance Ltd (DHFL)) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

உருண்டோடிய பள்ளிப் பேருந்து…. தாங்கி பிடித்த மின்கம்பம்…… உயிர் தப்பிய குழந்தைகள் …!!

ஓட்டுனர் இல்லாமல், தண்ணீர் நிரம்பியிருந்த ஏரியை நோக்கி உருண்டோடிய பள்ளிப்பேருந்தை அங்கிருந்த மின்கம்பம் தாங்கி பிடித்தது. பேருந்துக்குள் இருந்த ஐந்து குழந்தைகள் உயிர் தப்பினர். பிகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள மிதாப்பூர் (Mithapur) பேருந்து நிலையம் அருகே பள்ளிப்பேருந்து ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அந்த பேருந்துக்குள் ஐந்து குழந்தைகள் இருந்தனர்.இந்த நிலையில் பள்ளிப் பேருந்து திடீரென உருண்டோட ஆரம்பித்தது. ஓட்டுனர் இல்லாமல் பள்ளிப் பேருந்து ஏரியை நோக்கி செல்வதை பார்த்து பள்ளிக் குழந்தைகள் அழுதனர். பள்ளிக் குழந்தைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் காந்திக்கு எச்சரிக்கை தேவை”… உச்ச நீதிமன்றம் அறிவுரை..!!

மோடியை விமர்சித்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியை  எச்சரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. தற்போது இந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ரபேல் வழக்கு : சீராய்வு மனு தள்ளுபடி… பாஜகவினர் மகிழ்ச்சி..!!

ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்று  தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை  உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு : 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை..!!

சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா ? இன்று பரபரப்பு தீர்ப்பு …!!

சபரிமலை உச்சநீதிமன்ற உத்தரவின் சீராய்வு மனு மீதான வழக்கில் இன்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”ரபேல் போர் விமானம் ஊழல்” உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு …!!

ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு புகார் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

ரபேல் ஊழல் வழக்கு….. ”மோடிக்கு வந்த அவப்பெயர்”…… இன்று அதிரடி தீர்ப்பு

ரபேல் போர் விமான ஊழல் சீராய்வு மனு வழக்கின் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. உலகில் எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன் என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ? நீங்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த வார்த்தைகள் பிரதமர் நரேந்திர மோடியுடைய  தாக இருக்கலாம் எனக் கருத வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடந்த நிகழ்வில் ஐக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

ரஃபேல் போர் விமானங்களின் சிறப்பம்சங்கள் ….!!

இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கஇருக்கின்றது. ரஃபேல் விமானத்தில் சிறப்பம்சங்கள் :  ரபேல் போர் விமானங்கள் 15.3 மீட்டர் நீளமும் , 10.9 மீட்டர் அகலமும் , 5.3 மீட்டர் உயரமும் கொண்டவை. இந்த ரபேல் போர் விமானங்கள் அதிகபட்சமாக மணிக்கு 2130 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டவை. சராசரியாக மணிக்கு 1,912 கிலோமீட்டர் வேகம் வரை இந்த விமானங்களை செலுத்த முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

”ரபேல் ஊழல்” எளிமையாக புரிந்து கொள்வது எப்படி ?

இந்திய அரசின் பாஜக ஆட்சி மீது பெரும் கரும்புள்ளியாக அமைந்தத ரபேல் விமானம் தீர்ப்பு சீராய்வு மனு மீதான விசாரணை தீர்ப்பை இன்று ( 14/11 )உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. ரபேல் விமானம் : என்ன தேவை ? இந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996_ல் வாங்கியது தான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி , 2001-இல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

”பாஜக மீது விழுந்த கரும்புள்ளி” நாளைய தினம் எடுபடுமா ? எடுபடாதா ?

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தீர்ப்பு_க்கெதிரான சீராய்வு  மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது. ரபேல் ஒப்பந்தம் :  இந்தியாவின் விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு 2007 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 126 போர் விமானங்களை வாங்க முடிவெடுத்து ஒப்பந்தம் செய்தது.இதில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களை விட குறைந்த ஒப்பந்தபுள்ளி கூறிய பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது என 2012இல் முடிவெடுக்கப்பட்டது. அதில் பறக்கத் தயாராக இருக்கும் 18 விமானங்களை வாங்குவது , […]

Categories
தேசிய செய்திகள்

”ரபேல் ஒப்பந்தம்” முதல் ”நாளைய தீர்ப்பு” வரை- நடந்தது என்ன ? முழு அலசல் …!!

ரபேல் போர் விமானத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. 2007 ஆம் ஆண்டு பல்நோக்கு பயன்பாடு கொண்ட 126 போர் விமானங்களை வாங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. ஜனவரி 2012 ஆம் ஆண்டு விமானம் தயாரிக்கும் ஏலத்தில் பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவனம் வென்றது. ஜனவரி 2012 ஆம் ஆண்டு முதல் கட்டமாக 126 போர் விமானங்களில் பயன்பாட்டுக்கு தயாரான நிலையில் 18 விமானங்களை தரவேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலையில் பெண்கள்” உச்சநீதிமன்றத்தில் நாளை பரபரப்பு தீர்ப்பு …!!

சபரிமலை உச்சநீதிமன்ற உத்தரவின் சீராய்வு மனு மீதான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி […]

Categories
தேசிய செய்திகள்

நாளைய தினம்….. ”மூன்று முக்கிய தீர்ப்புகள்”…… தேசியளவில் எதிர்பார்ப்பு ….!!

சபரிமலை, ரஃபேல் உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை வெளியிடவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் தலைமையிலான அமர்வு நாளை மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை வெளியிடவுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வழிபடலாம் என 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

”ரபேல் போர் விமானம் ஊழல்” உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு …!!

ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு புகார் வழக்கில் உச்சநீதிமன்றம்  நாளை தீர்ப்பு வழங்குகின்றது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு …!!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டப்பேரவை உறுப்பினர்களின் மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு (2018) மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடந்தது. ஆட்சியமைக்க மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.104 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைத்தன. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு […]

Categories

Tech |