Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்கள் மீது பாஜக துல்லியத் தாக்குதல்”… ஒன்று சேர்ந்துவிட்டோம்… எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிரா மக்கள் மீது பாஜக துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா அரசியல் திருப்பம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா காங்கிரஸ் தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத் பவார், ‘கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸிடம் எண்ணிக்கை இருந்தது. மொத்தம் 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவை எங்கள் கூட்டணி பெற்றிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இன்று காலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”… பட்னாவிஸின் பழைய ட்வீட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

தேசியவாத காங்கிரஸுடன் ஏற்பட்ட கூட்டணியால் மீண்டும் மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக நடைபெற்ற அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், யாரும் எதிர்பாரா விதமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் தேவேந்திர ஃபட்னாவிஸே பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு தேசியவாத […]

Categories
தேசிய செய்திகள்

“எப்போது வேண்டுமானாலும் பார்த்து பேசலாம்”… இமயமலையில் இருக்கிறேன்.. நித்தியானந்தா.!!

வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் நித்தியானந்தாவை குஜராத் மாநில காவல்துறையினர் தேடிவரும் நிலையில், தான் இமயமலையில் தான் இருக்கிறேன் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அகமதாபாத் போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர், சிறுமியரை கடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத் கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ்”… சர்ச்சையை கிளப்பும் குஜராத் பாடப் புத்தகம்..!!

குஜராத் கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் சதி இருப்பதாக குஜராத் பள்ளிப் பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயில், குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையம் அருகே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அதில், 59 பேர் தீயில் கருகி பலியாயினர். அதன் விளைவாக, குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. ஏறக்குறைய மூன்று மாதங்கள் நீடித்த இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில், […]

Categories
தேசிய செய்திகள்

’எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி பதவியேற்ற அஜித் பவார்’ – NCP மூத்தத் தலைவர் பகீர்.!

அஜித் பவார் எம்.எல்.ஏ.க்களிடம் வருகைப் பதிவேட்டில்(MLA Attendance) கையெழுத்து வாங்கிவிட்டு, அதனை பதவியேற்றுக் கொள்வதற்காக தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் நவாப் மாலிக் பகீர் தகவலை கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. சிவசேனாவுக்கு நேற்று வரை ஆதரவு அளித்து வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி, இன்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு தற்போது விடையளிக்கும் விதமாக […]

Categories
தேசிய செய்திகள்

10 வயது மாணவி பாம்பு கடித்து மரணம்… பள்ளியே காரணம்… மாவட்ட நீதிபதி ஆய்வு.!!

கேரளாவின் வயநாட்டில் 10 வயது மாணவி பாம்பு கடித்து உயரிழந்த சம்பவத்தில், மாவட்ட நீதிபதி அந்த பள்ளியின் சுகாதரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார். கேரள மாநிலம்  வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் அரசுப்பள்ளியில் ஷஹாலா (10) என்னும் மாணவி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்த புதன்கிழமையன்று 20ஆம் தேதி பள்ளி வகுப்பறையில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாணவியின் கால் அங்கிருந்த ஓட்டைக்குள் சிக்கிக்கொண்டது, பதறிப்போன அவர் காலை எடுக்க முயற்சிக்கும் போது, அதிலிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

’அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்’ – சிவசேனா சஞ்சய் ராவத் கடும் தாக்கு!

அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும், பாஜக ஆட்சியமைத்ததற்கும் சரத் பவாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். நிமிடத்திற்கு நிமிடம் மகாராஷ்டிராவின் அரசியல் நிகழ்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மக்கள் தீர்ப்பளித்து கிட்டதட்ட ஒரு மாத காலமாகிய பின்னும் யார் முதலமைச்சர் என்ற இடியாப்ப சிக்கல் மட்டும் நீங்கவில்லை. இந்நிலையில், இன்று காலை தேவேந்திர ஃபட்னாவிஸூம் அஜித் பவாரும் அரவமின்றி முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்.. 4 காவலர்கள் உயிரிழப்பு.!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் லதேஹர் மாவட்டத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது காவல் துறையினர் மீது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் உதவி ஆய்வாளர், […]

Categories
தேசிய செய்திகள்

’23 பேர் மரணம்… 1200 பேர் மீது வழக்குப்பதிவு… பல வருட தொடர் விசாரணை’ – வியாபம் ஊழலில் 31 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.!

இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட வியாபம் ஊழல் வழக்கில் 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாட்டையே உலுக்கிய மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ‘வியாபம்’ ஊழல் தொடர்பான வழக்கில் தற்போது சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல சந்தேக மரணங்கள், திகில்கள் நிறைந்திருந்த இவ்வழக்கில் மொத்தம் 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கான குற்றங்கள் குறித்த விவரம் நவ.25ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.பி. சாஹூ […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

”போட்டு கொடுத்தா நோட்டு” .. வருகிறது புதிய சட்டம்…!!

சாலைகள் விதிமுறைகளை மீறி பார்கிங் செய்துள்ள வாகனங்களைக் கண்டறிந்து புகார் கொடுத்தால் சன்மானம் வழங்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி, விதிமுறைகளை மீறி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

வேலை போய்டும்….. ”மனஅழுத்தத்தால் தற்கொலை” ஐடி ஊழியருக்கு வந்த துயரம் …!!

ஐடி வேலை பார்க்கும் பெண் ஒருவர், தனது ஒப்பந்தம் முடியவுள்ளது என்ற மனஅழுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ராய்துர்காம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வந்தவர் ஹரினி(24). இவர் இரண்டு வருட ஒப்பந்தத்தில் ஐடி வேலை செய்து வந்தார். சில நாட்களுக்குள் இவரது ஒப்பந்தம் முடியவுள்ளதாக நிறுவனம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றால் வேலை போய்விடும் என்பதால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அப்போ குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்… இப்போ பாதுகாப்புத் துறை ஆலோசகர்..!!

மும்பை மாலேகன் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் தற்போது பாதுகாப்பு அமைச்சரவையில் ஆலோசனைக் குழு உறுப்பினாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் நடந்த மாலேகன் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி, அவர் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை, போதிய ஆதாரங்கள் பிரக்யா மீது இல்லாததால், வழக்கை கைவிடுவதாக தெரிவித்தது. முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

நித்யானந்தா சிஷ்யைகள் கைது! ஏன்? – முழுப்பின்னணி ….!!

குழந்தைகளைக் கடத்தி துன்புறுத்திய வழக்கில் நித்யானந்தா ஆசிரமத்திலுள்ள இரண்டு பெண் சீடர்களைக் குஜராத் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஜனார்த்தன் சர்மா என்பவர் தன்னுடைய நான்கு பெண் குழந்தைகளையும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவுக்குச் சொந்தமான பிடரி ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். பின்னர், அந்த ஆசிரமத்தின் கிளையான குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நான்கு பெண் குழந்தைகளும் இடமாற்றப்பட்டுள்ளனர். இதனையறியாத, ஜனார்த்தன் சர்மா கடந்த நவம்பர் இரண்டாம் தேதி, பிடரி ஆசிரமத்தில் தன் குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது, […]

Categories
தேசிய செய்திகள்

பாம்பைத் தேடிப் தேடி பிடிக்கும் நபர் – 120ஆவது முறையும் வெற்றியே…!!

எர்ணாகுளம் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த 12 அடி ‘கிங் கோப்ரா’ பாம்பை யாருடைய உதவியுமின்றி பிடித்து அசத்திய நபர் குறித்து தெரிந்து கொள்வோம். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ். இவரின் வீடு அருகில் உள்ள ஓடையில் பாம்பு செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பிரபல ஸ்நேக் கேட்சர் மார்டின் பாம்பைப் பிடிக்க வருகைத் தந்தார். ஆனால், பாம்பு இருக்கும் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நேரமாகத் தவித்தார். பின்னர், […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை ஏவும் தேதி மாற்றம் …..!!

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை வரும் நவ.25ஆம் தேதி விண்ணில் ஏவப்போவதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், தற்போது விண்ணில் ஏவும் தேதியை மாற்றியமைத்துள்ளது. ராணுவ கண்காணிப்பிற்காகத் தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் நவம்பர் 25ஆம் தேதி காலை 9:28 மணிக்கு விண்ணில் செலுத்தப்போவதாக இஸ்ரோ நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் தேதியை இஸ்ரோ மாற்றியமைத்துள்ளது. அதன்படி, கார்டோசாட்-3 என்ற இந்திய செயற்கைக் கோளையும் அமெரிக்காவின் 13 நானோ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

’ஒரே நாடு ஒரே மொழி’ அமித்ஷாவை எதிர்த்த மத்திய இணை அமைச்சர்?

’ஒரே நாடு ஒரே மொழி’ திட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆதரவாகப் பேசியிருந்த நிலையில், அத்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் பேசினார். அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், இது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமையும்’ – சஞ்சய் ராவத்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அரசு டிசம்பர் 1ஆம் தேதிக்குள் அமையும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டியளித்த அவர், ‘காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆட்சியமைக்கும் அரசின் அதிகாரப் பகிர்வு குறித்து மூன்று கட்சிகளும் கூட்டாக முடிவு செய்யும். நேற்றுவரை, காங்கிரஸ்-என்சிபியின் மராத்தான் கூட்டங்கள் என்சிபி தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்றது. அடுத்த இரண்டு நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

‘என்னது வெங்காய விலை ரூ.80ஐ தாண்டிடுச்சா…’ – இறக்குமதிக்கு ஒப்புதல் சொன்ன மத்திய அரசு.!!

ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்த வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கடும் மழையால் வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கடந்த 16ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய விமானப் படையிடம் மூன்று ரஃபேல் விமானங்கள் ஒப்படைப்பு – அமைச்சர் தகவல்

மூன்று ரஃபேல் விமானங்களை இந்திய விமானப் படையிடம் பிரான்ஸ் ஒப்படைத்துள்ளதாக மக்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியுள்ளார். ரஃபேல் விமானம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக்,”பிரான்ஸின் டெசால்டு நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கு, 2016ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து, அக்டோபர் 8ஆம் தேதி பிரான்ஸில் உள்ள விமானப் படைத் தளத்தில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியக் கடற்படைக்கு 13 எம்.கே – 45 ரகத் துப்பாகிகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்!

ரூ. 1 பில்லியன் மதிப்புள்ள எம்.கே – 45 என்னும் நவீன ரகத் துப்பாக்கிகளை இந்திய கடற்படைக்கு வழங்க அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (US Defence Security Cooperation Agency) செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.அதில் இந்தியக் கடற்படைக்கு பயன்படுத்தக்கூடிய எம்.கே – 45, 5 இன்ச்/62 காலிபர் (எம்ஓடி 4) நவீனத் துப்பாக்கிகளை, நம் நாட்டு அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

‘குடிமக்களின் தேசியப் பதிவு விவகாரத்தில் வெளிநபர்களை நம்ப வேண்டாம்’… வங்க மக்களுக்கு மம்தா கோரிக்கை..!!

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் வெளி நபர்கள் கொடுக்கும் போலி வாக்குறுதிகளை நம்பவேண்டாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்கவே இந்த மசோதா நிறைவேற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் இந்த என்.ஆர்.சி எனப்படும் குடிமக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உடன் ஆதாரை இணைப்பு..!.. – மத்திய அரசு விளக்கம் …!!

ஆதார் எண்ணை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று திட்ட வட்டமாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். ஆதார் எண்ணை சமூக வலை தள கணக்குகளுடன் மத்திய அரசு இணைக்கப்போகிறதா என்று மக்களவையில், நேற்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “தனி நபர்களின் விவரங்கள் எவருக்கும் அளிக்கப்படமாட்டாது என்பதன் அடிப்படையிலேயே ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை சமூக வலை தள […]

Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தா என்னை கடத்தவில்லை… புது குண்டை தூக்கிப் போட்ட ’மா நித்தியானந்தா’

நித்தியானந்தாவால் கடத்தப்பட்ட தங்களுடைய மகள்களை மீட்க பெற்றோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களின் ஒரு மகள் தான் கடத்தப்படவில்லை என்பதாகவும் தன்னுடைய விருப்பப்படியே ஆசிரமத்தில் இருப்பதாகவும் கூறி வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சர்ச்சைக்கு மறுபெயர் ஒன்று இருக்குமென்றால் அது நித்தியானந்தா என்றே இருக்கும். அப்படிப்பட்ட சர்ச்சை நாயகன் நித்தியானந்தா மீது நேற்றும் ஒரு சர்ச்சை கிளம்பியது. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர், அகமதாபாத்திலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைக்கப்பட்டுள்ள தன்னுடைய இரு […]

Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாமில் சோக சம்பவம்… லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி..!!

ஒராங் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறத்தில், கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் ஒராங் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்தவர்கள் மங்கல்தோயில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு தேஸ்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது. நீண்ட நேரமாக […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சபரிமலைக்கென்று தனி சட்டம் – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கென்று தனி சட்டம் உருவாக்குங்கள் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது நம் அனைவருக்கும் தெரியும்,  அதற்கு பிறகு ஏற்பட்ட பல்வேறு சட்ட ரீதியிலான பிரச்சனைகளும் நமக்கு தெரியும்.அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தனித்தனியாக தொடரப்பட்டது. இந்த சட்டத்தினால் சட்ட ரீதியிலான பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அப்போது , உச்சநீதிமன்றம் கோவில் நிர்வாகம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சபாநாயகருக்கு ‘கிஸ்’… அதுவும் ஃப்ளையிங் ‘கிஸ்’… மீண்டும் ட்ரெண்டான MLA..!!

ஒடிசா சட்டப்பேரவையில் தன்னை முதலில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ஒடிசா சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி உரையாற்றினார்.  தனது தொகுதி சம்பந்தமான குடிநீர் பிரச்னை குறித்து பேசிய பின்னர், தனது உரையை முடித்துக்கொண்ட தார பிரசாத், யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு செயலை செய்தார். அது என்ன செயல் என்றால், சபாநாயகர் எஸ்.என். […]

Categories
தேசிய செய்திகள்

வானிலை காரணமாக மேலும் மோசமடையும் டெல்லி காற்று மாசு…!!

காற்றோட்டம் குறைவதால் வரும் நாட்களில் காற்று மாசு, மேலும் மோசமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் டெல்லி காற்று மாசு குறித்துக் கவலையளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்கைமெட் வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லியில் காற்று மாசு இன்று மிக மோசமான நிலையில் இருக்கும் என்றும்; இமயமலையின் […]

Categories
தேசிய செய்திகள்

”சபாநாயகருக்கு KISS கொடுத்த MLA” அதுவும் ஃப்ளையிங் கிஸ்….!!

ஒடிசா சட்டப்பேரவையில் தன்னை முதலில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ஒடிசா சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரில் உரையாற்றிய காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, தனது தொகுதி சம்பந்தமான குடிநீர் பிரச்னை குறித்து பேசினார். பின்னர், தனது உரையை முடித்துக்கொண்ட அவர், யாரும் எதிர்பாராதவிதமாக சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து, தன்னை பேச அனுமதித்ததற்கு நன்றி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”சபாநாயகருக்கு KISS கொடுத்த MLA” அதுவும் ஃப்ளையிங் கிஸ்….!!

ஒடிசா சட்டப்பேரவையில் தன்னை முதலில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ஒடிசா சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரில் உரையாற்றிய காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, தனது தொகுதி சம்பந்தமான குடிநீர் பிரச்னை குறித்து பேசினார். பின்னர், தனது உரையை முடித்துக்கொண்ட அவர், யாரும் எதிர்பாராதவிதமாக சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து, தன்னை பேச அனுமதித்ததற்கு நன்றி […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்… மோடியை சந்திக்கிறார் சரத்பவார்

பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சந்திக்க இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் சிவசேனா இறங்கியது. ஆனால் சிவசேனாவுக்கு இரண்டு கட்சிகளும் தங்களது ஆதரவை கொடுப்பதில் யோசனை காட்டிவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

‘அர்த்தமுள்ள பெயரைக் கொண்ட நயவஞ்சக நாடு பாகிஸ்தான்’ – ராஜ்நாத் சாடல்..!!

பாகிஸ்தான் என்னும் அர்த்தம் உள்ள பெயருக்கு முரணாக, அந்நாடு நய வஞ்சகமாக செயல்பட்டு வருகிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாடியுள்ளார். அரசு முறைப் பயணமாக இரண்டு நாள் சிங்கப்பூர் சென்றுள்ள ராஜ்நாத் சிங் நேற்று இந்திய வம்சாவளிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ” நீண்ட காலமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்படாமல் இருந்தது துரதிர்ஷ்டவசமானது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை நீக்கியதன் மூலம், அது தற்போது […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இலங்கை அதிபர் இம்மாத இறுதியில் இந்தியா வருகை..!

இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 70 வயதான கோத்தபய ராஜபக்ச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, சஜித் பிரேமதாசவை சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் தேசியக் குடியுரிமை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் குளிர் காலக் கூட்டத்தொடரை எவ்வாறு கையாள்வது, எந்த மாதிரியான திட்டங்கள் தேவை என்பதெல்லாம் குறித்து ஆலோசிக்க இன்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுபான்மையினரிடையே தீவிரவாதம் வளர்ந்து வருகிறது… மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டு..!!

ஹைதராபாத்தில் சிறுபான்மை தீவிரவாதம் வேகமாக பரவிவருவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்குவங்கம் கூச் பேகர் நகரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்துக்களிடையே தீவிரவாதம் இருப்பதுபோல், சிறுபான்மையினரிடையேயும் தீவிரவாதம் வளர்ந்துவருகிறது. ஹைதராபாத்தில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. அது, பாஜகவிடம் பணம் வாங்கிவிட்டு செயல்படுகிறது” என்றார். பெயர் குறிப்பிடாமல் அவர் விமர்சித்த கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம் என்றும் அக்கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

தரப்போறிங்களா இல்லையா… அலைக்கழித்த அலுவலர் மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி..!!

ஹைதராபாத்தில் உரிய சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்த அலுவலர் மீது விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கரீம்நகர் அருகேயுள்ள சிகுருமமிடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஸ்புக் கேட்டு விவசாயி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். நீண்ட நாள்கள் ஆகியும் பாஸ்புக்கை வழங்காமல் அங்குள்ள ஊழியர்கள் விவசாயியை அலைக்கழித்துள்ளனர். இன்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு விவசாயி சென்றபோது அங்கிருந்த அலுவலருக்கும் விவசாயிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த விவசாயி, தான் எடுத்துவந்திருந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

டிசம்பர் 1ஆம் தேதி முதல் உயரும் மொபைல் சேவைக் கட்டணங்கள்… ஜியோவுக்கு மாற வாய்ப்பு..!!

கடந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு சேவைக் கட்டணங்களை உயர்த்த வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகிய நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளன. தொழிலில் ஏற்பட்டுவரும் கடும் சரிவால் சேவைக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகியவை தெரிவித்துள்ளன. இந்தக் கட்டண உயர்வு டிசம்பா் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்திலான டிஜிட்டல் அனுபவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தக் கட்டண உயர்வு இருக்கும் எனவும் அந்நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ பாவம்… 4 நாய்க்குட்டிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற ஓலா ஓட்டுநர்… விலங்குகள் காப்பகப் புகாரில் கைது..!!

புவனேஷ்வரில் சாலையிலிருந்த 4 நாய்க்குட்டிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஓலா ஓட்டுநரை ஒடிசா மாநில காவல் துறை கைது செய்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹு சரண் கிரி. இவர் ஓலா கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷைலஸ்ரீ விஹார் பகுதியில் சாலையில் அதிவேகமாக காரில் சென்றுள்ளார். அப்போது, சாலையிலிருந்த நான்கு நாய்க் குட்டிகள் மீது இரக்கமின்றி காரை ஏற்றியுள்ளார். இதைப் பார்த்த காவலர் அவரைத் […]

Categories
தேசிய செய்திகள்

ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை… தலாக் கூறிய கணவன்… பாய்ந்தது முத்தலாக் தடைச் சட்டம்..!

ஆண் குழந்தை பிறக்காததால், பெண்ணிடம் தலாக் கூறிய கணவன் மீது அப்பெண் அளித்த புகாரின் பேரில், முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமான இஸ்லாமிய ஆண்கள் தங்களது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற, மூன்று முறை தலாக் கூறி, பிரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நீண்ட காலமாக வழக்கத்திலிருந்த இந்த முறையை ஒழிப்பதற்காக, கடந்த ஜூலை மாதம் முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டு, முத்தலாக் கூறுவது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், […]

Categories
தேசிய செய்திகள்

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு… 7 பேர் படுகாயம்..!!

சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவினால் இந்தியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிந்துள்ளனர். மேலும் ஏழு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். யூனியன் பிரதேசம் லடாக்கில் இருந்து வடகிழக்கு திசையில் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காரகோரம் பனி மலைத்தொடரில் அமைந்துள்ள 18 ஆயிரம் அடி உயரமுள்ள சியாச்சின் பனி மலைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் முகாம் அமைந்துள்ளது. அப்பகுதியில் நேற்று மதியம் 3.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு காரணமாக நான்கு பாதுகாப்புப் படை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மாற்று மின்சக்தி உற்பத்திக்கு ரூ.700 கோடி முதலீடு

இந்தியாவில் மாற்று மின்சக்தி உற்பத்திக்காக அடுத்தாண்டில் 700 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலமை இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மாற்று மின்சக்தி உற்பத்திக்காக சுமார் 717 கோடி ரூபாய் அளவிலான முதலீடு திட்டங்கள் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும் எனச் சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த வங்கியின் தலைமை இயக்குனர் பாங்க் ஈ இயன் கூறியதாவது, ‘இந்தியாவில் அடுத்த மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் கமல்ஹாசனுக்கு ஒடிசா முதலமைச்சர் அறிவுரை.!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்து முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கமல்ஹாசன் இரண்டு நாட்கள் அரசியல் பயணமான ஒடிசா சென்றுள்ளார். அங்கு மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை அவரது வீட்டில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசினார்கள். மேலும் அரசியல் நுணுக்கள் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

462 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அழிப்பு!

ஒடிசா மாநிலத்தில் 462.55 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை அம்மாநில காவல் துறையினர் தீயிட்டு கொளுத்தி அழித்தனர். ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டுவருவதாக அம்மாநில காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு 462.55 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை தீயிட்டு கொளுத்தி அழித்தனர். அழிக்கப்பட்ட கஞ்சா செடிகளின் மதிப்பு ரூ.9 லட்சத்துக்கும் அதிகமானதாக இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வடகிழக்கில் அமைதியை கேள்விக்குள்ளாக்கும் குடியுரிமை திருத்த மசோதா.!

குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (நவ.18) தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமைத் திருத்த மசோதாவை கொண்டுவருவதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு (என்.டி.ஏ.) உறுதியாக உள்ளது. இதனை கொண்டுவருவதால் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். இந்த திட்டத்துக்கு அந்த பிராந்தியத்தில் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். வடகிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாமில் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம்!

கவுஹாத்தியில் பல்வேறு மாணவ அமைப்புகள் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு(சிஏபி) எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் கலவரம் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே குடிமக்கள் திருத்த மசோதாவை நிறைவேற்றிவிட ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நினைக்கிறது. வடகிழக்கு பகுதியில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த மசோதாவால் மீண்டும் பிரச்னை வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம், மேகலாயா, […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

52 வாரங்கள் கண்டிடாத கடும் வீழ்ச்சியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்…!!

அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இயக்குநர் பதவியில் இருந்து விலகியதன் விளைவாக, பங்குச்சந்தையில் அந்நிறுவன பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட கடும் சரிவால் அனில் அம்பானி, சாயா விரணி (Chhaya Virani), ரைனா கரணி (Ryna Karani), மஞ்சரி கக்கர் (Manjari Kacker), சுரேஷ் ரங்காச்சர் (Suresh Rangachar) உள்ளிட்ட இயக்குநர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்ததன் எதிரொலியாக இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை வளர்த்தெடுங்கள்! – மோடிக்கு மன்மோகன் அறிவுரை

நாட்டின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதாகவும் அதை சீர்செய்ய மக்களிடம் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடி அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரம் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அவர், நாட்டில் உருவாகியுள்ள பொருளாதாரத் தேக்க நிலை காரணமாக நுகர்வில் சுணக்கம் ஏற்பட்டு தனியார் முதலீடுகள் முடங்கியுள்ளன. இதை சரி செய்ய உடனடி நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

ஜம்மு: ஐம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஐம்மு – காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான ராஜோரி செக்டாரில் உள்ள சுந்தர்பானி பகுதிகளில் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. மாலை 4.15 மணியிலிருந்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்கிறது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊர் சுற்றி உல்லாசம்…. ”செலவுக்கு குழந்தை விற்பனை” கள்ள காதலின் கொடூரம் …!!

காதலனுடன் ஊர்சுற்ற பெற்ற குழந்தையை விற்பனை செய்த கல்நெஞ்சம் கொண்ட தாயை காவலர்கள் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வரும் ஷாமன் என்ற பெண்ணுக்கு 9 மாத கைக்குழந்தை ஒன்று இருந்தது. இந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் விபின் என்பவருடன் திருமணத்தை தாண்டிய முறைதவறிய உறவு இருந்துள்ளது. இந்த உறவு காரணமாக இருவரும் தனிமையில் சந்தித்து ஊர்சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பெண் தனது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிவசேனாவுக்கு சோனியா எதிர்ப்பா? – பதிலளிக்கிறார் சரத் பவார்…!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. சந்திப்புக்குப்பின் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதிலளித்தார். சிவசேனாவுடனான கூட்டணிக்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்தாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர், […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை காவலர்கள் தடியடி நடத்தி, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களிடம் காவலர்கள் பேரணியை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி முன்னேறி சென்றனர். இதையடுத்து அவர்களை காவலர்கள் தடியடி நடத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து டெல்லி […]

Categories

Tech |