Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு .. உச்சநீதி மனறத்தில் புதிய மனு..!!!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரானார் முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.  இதனையடுத்து பிப்ரவரி 1ந் தேதியன்று 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்நிலையில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து, குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பற்ற உறவு… மறுப்பு தெரிவித்த பாலியல் தொழிலாளிக்கு நேர்ந்த கதி!

பாதுகாப்பற்ற உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் பாலியல் தொழிலாளியை கொன்றதாக இரவு பணி காவலாளி கைதுசெய்யப்பட்டார். கர்நாடகாவில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கொலை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? இரவு காவாளியாக பணிபுரியும் முகுந்த் என்பவர் பாலியல் தொழில் செய்யும் மஞ்சுளா என்ற பெண்ணை பேருந்து நிலையத்தில் பார்த்து பேசி, அப்பெண்ணின் வீட்டிற்கு அவளுடன் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் அப்பெண்ணை பாதுகாப்பற்ற முறையில் உறவு வைக்க முயன்றார். இதற்கு மஞ்சுளா மறுப்பு தெரிவித்ததையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: தொண்டர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா..!!

தேர்தல் பரப்புரையை முடித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தொண்டர் வீட்டில் உணவருந்தினார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதனால் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் வேலைகளில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நேற்று தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

#NationalVotersDay : தேர்தல் ஆணையத்தை பாராட்டி பிரதமர் மோடி ட்வீட்..!!

தேர்தல் நடைமுறையை அதிக சக்திவாய்ந்ததாகவும், அனைவரும் பங்கேற்க கூடிய வகையிலும் உருவாக்கியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக இந்த தினம் தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்பட்டு  வருகிறது. அதன்படி இன்று ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக தேர்தல் ஆணையம் அனுசரிக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்திற்கும் – சுதந்திர தினத்திற்கும்… என்ன வித்தியாசம்..?

ஜனவரி 26ஆம் நாள் குடியரசு தினத்தை கொண்டாடும் நிலையில் , குடியரசு தினத்திற்கும் , என்ன வித்தியாசம் என்பது குறித்து பார்க்கலாம். நாளை நாம்  குடியரசு தினத்தை கொண்டாட ஆயத்தமாகி வருகிறோம், நாடே ஆயத்தமாகி வருகிறது.குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் சுதந்திர தினம் தான் முதலில் வந்தது. ஆகஸ்ட் 15, 1947 இல் வந்தது தான் சுதந்திர தினம் . ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விடுதலை அடைந்தோம், ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம்  அதை தான் நாம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-பிரேசில் இடையே புதிய ஒப்பந்தங்கள் …!!

இந்தியாவின் குடியரசுதினத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இன்று இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி – அதிபர் பொல்சனரோ முன்னிலையில் இந்தியா-பிரேசில் இடையே இணையதள பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, மருத்துவத்துறைகளில் இருநாடுகளும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனால் இரு நாட்டிற்கு அதிக பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

இந்தியாவின் 71 வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார், பின்னர் அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெட் போல்சனர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் டெல்லி நகரம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா குற்றவாளிகளின் மனுக்கள் தள்ளுபடி …!!

நிர்பயா கொலை குற்றவாளிகள் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. நிர்பயா கொலை குற்றவாளிகள் தொடர்ந்து தண்டனையை கால தாமதப்படுத்தும் அனைத்து சட்ட ரீதியிலான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சில விஷயங்களைக் குறிப்பிட்டு தொடர்ந்து மனு தாக்கல் செய்து , இது தொடர்பான மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் , அந்த தண்டனையை காலதாமதம் செய்ய கூடிய விஷயங்களை அவர்கள் செய்து வருகிறார்கள். புதிதாக நேற்றைய […]

Categories
தேசிய செய்திகள்

அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்… எந்த மாற்றுக் கருத்துமில்லை- சிவசேனா!

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அகற்ற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை என  சிவசேனா கூறியுள்ளது.  குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை NPR பதிவேடு ஆகிய மூன்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக குறிப்பாக மத அடிப்படையில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

பப்ஜி கொடூரம்… வெறித்தனமாக விளையாடிய இளைஞன்… மரணத்தில் முடிந்த சோகம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் பப்ஜி கேம் விளையாடிய போது இளைஞர் ஒருவர் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் மரணடைந்ததால் அவரது குடும்பம்  சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்றைய சமூகத்தில் பொழுது போக்க்காக  ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தளங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக தற்போது டிக் டாக்கிலும்,  பப்ஜி விளையாட்டுகளிலும் மூழ்கி கிடக்கின்றனர். இதில் பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு பல நாடுகள் யோசித்து வருகின்றன. இந்தியாவில் குஜராத் அரசு ஏற்கனவே  இதற்கு தடை விதித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் 2020: அதிக செலவு & சரியாக செலவு

கோடீஸ்வரன் முதல் சாமானியன் வரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 2020-2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையை நோக்கி செலுத்த அரசாங்க செலவினங்கள், ஏன் சரியான செயல் என்று பொருளாதார வல்லுநர் மகேந்திர பாபு குருவா தெரிவிக்கிறார் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான முதல் முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைப்பார். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று பேசப்படும் இன்றைய […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் 2020: வரி விலக்கை எதிர்பார்க்கும் வரி வல்லுநர்கள்

இந்த ஆண்டுக்கான பட்ஜெட், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொது மக்கள் செலுத்தும் வருமான வரியில் விலக்கு அல்லது நிவாரணம் வழங்கவேண்டும் என வரி வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதிய கட்டுரையின் சாராம்சம் இதோ மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வருமான வரி செலுத்துவோர் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். வரி விலக்கு, நிவாரணம் என எதிர்பார்ப்புகள், […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ-வால் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்பினரும் போராடிவருகின்றனர். இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டதால் இந்திய குடிமக்களுக்கு பாதிப்பில்லை என்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில், எல்லை பாதுகாப்புப் படையினர் […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணன் செய்த கேவலமான செயல்… தங்கையை சீரழித்த கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

நீலகிரியில் வீட்டில் தனியாக இருந்த +2 மாணவியை பலாத்காரம் செய்த அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் தான் முர்ஷிது. இவருக்கு 22 வயதாகிறது. இவர் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பந்தலூரில் வசித்து வருகின்ற தன்னுடைய பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவனது பெரியப்பாவுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். அப்படி அடிக்கடி பெரியப்பா வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், ஒருநாள் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

குடியரசு தினவிழா : சிறப்பு விருந்தினராக டெல்லி வந்தடைந்த பிரேசில் அதிபர்

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்க டெல்லி வந்தடைந்த பிரேசில் அதிபரை தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்தியா முழுவதும் குடியரசு தினவிழா வரும் 26-ஆம் தேதி வெகு விமர்சியாக கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகின்றது. ஆண்டு தோறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டி சிறப்பிப்பது வழக்கம். அதன்படி இந்தமுறை பிரேசில் அதிபர் அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

அமராவதி போராட்டம்: பத்திரிகையாளர்கள் மீது போலி கேஸ் போட்ட போலீஸ்!

ஆந்திர தலைநகரில் விவசாயிகள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த மூன்று ஊடகவியலாளர்கள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று ஊடக புகைப்படக்காரர்கள் மீது ஜெகன் அரசு பொய் வழக்கு பதிவுசெய்துள்ளது. விவசாயிகளின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் அமராவதி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

சட்டத்தின்படியே நீதிமன்றம் செயல்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம்

நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சட்டத்தின்படியே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருணை மனு நிலுவையில் இருந்த காரணத்தால் தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தூக்கு தண்டனைகள் காலதாமதமாக நிறைவேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, காதலருடன் சேர்ந்து தனது குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்: டெல்லியில் பாதுகாப்பு தீவிரம்!

 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 71ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு அங்கமாக, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துணை ஆணையர் விக்ரம் போர்வால் கூறுகையில், “மத்திய தொழில் […]

Categories
தேசிய செய்திகள்

‘அதிகாரத்தில் இருப்பவர்கள் ஜனநாயகத்தைத் துண்டாடுகிறார்கள்’ – சிதம்பரம்!!

ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை துண்டாடுவதாக சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனநாயக நாடுகளில் மனித உரிமைகள் எப்படி காக்கப்படுகிறது என்பது குறித்த பட்டியலை ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 10 இடங்கள் கீழே சென்று 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜனநாயக முறை குறைந்ததற்கு மனித உரிமைகள் பறிக்கப்படுவதே காரணம் என்று ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ கருத்து தெரிவித்தது. தேர்தல் நடத்தும் முறை, பன்முகத்தன்மை, […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

71வது குடியரசு தினம்… ஜொலிஜொலிக்கும் டெல்லி…..!!

டெல்லி இந்திராகாந்தி விமனநிலையத்தில் அமைந்துள்ள ஏ.டி.சி டவர்  தேசிய கொடியை பிரதிபலிக்கும்  மூவர்ணத்தால் ஜொலிஜொலிக்கிறது. நாட்டின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடபடவுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக டெல்லியில் உள்ள நாட்டின் மிக உயரமானஆப்ட்ராபிக் கண்ரோல் டவர்  நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ண கொடி போல வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கேரள செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சவூதியில் செவிலியராகப் பணிபுரியும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு அவருடன் சென்ற 100 செவிலியர்களில் இவருக்கு மட்டும் வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. வைரஸ் கண்டறியப்பட்ட செவிலியருக்கு சவூதி நாட்டிலுள்ள அசீர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் உடல் நிலை தேறி வருவதாக கேரள மாநில வெளியுறவுத் துறை அமைச்சர் முரளிதரன் தனது […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் மீண்டும் பதற்றம் – ராணுவம் பதிலடி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை அடுத்து இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 23ஆம் தேதி தாக்குதல் நடத்தியுள்ளனர். அன்று இரவு 11 மணி அளவில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி நாச வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை எனக் கூறப்படுகிறது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டதிலிருந்தே […]

Categories
தேசிய செய்திகள்

புலிக்கு பயந்து வில்-அம்புடன் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

ஜார்கண்ட் மாநிலம் ஜம்செத்பூர் அருகே உள்ள மலை கிராமங்களில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் புலிக்கு பயந்து வில்-அம்பு, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்றுவருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம், ஜம்செத்பூரில் உள்ள காட்ஷிலா மற்றும் மிரிகிடாங் கிராமங்கள் சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு அடர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றன. இக்கிராமத்திலிருந்து கல்வி நிலையங்களுக்குச் செல்ல வேண்டுமானால் வனப்பகுதி வழியே ஆபத்தான முறையில் பயணிக்கவேண்டியுள்ளது.இந்தப் பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக வனத்துறையினர் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – இம்ரான் கானுக்கு வலியுறுத்தல் …!!

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் பெஷாவர் பகுதியில் வசித்து வருபவர் ராதேஷ் சிங் தோனி. கல்சா என்ற அமைதி நீதி அமைப்பின் தலைவராக இவர் இருந்துவருகிறார். இவரின் உயிருக்கு பாகிஸ்தானில் உள்ள சில அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானின் லாகூரை விட்டு தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். இதுகுறித்து அச்சம் தெரிவித்து பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள்

அமைதி காக்கும் நிர்பயா குற்றவாளிகள் …!!

டெல்லி: குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் உண்டா என நிர்பயா வழக்கு குற்றவாளிகளிடம் கேட்டபோது, அவர்கள் அமைதி காத்ததாக மூத்த சிறைத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளான வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (31), முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25) ஆகியோர் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படவுள்ளார்கள். இவர்கள் அனைவரும் தனி அறை சிறை எண் மூன்றில் வைக்கப்பட்டுள்ளனர். தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

தாக்கரே அயோத்தி பயணம், காங்கிரசுக்கு சிவசேனா அழைப்பு…!!

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணத்தில் கலந்துக்கொள்ளுமாறு கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு சிவசேனாவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக உள்பட எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சமயத்தில், பிரதான எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் மகா (மகாராஷ்டிரா விகாஸ் அகாதி) கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சிக்கு வந்தது. இதனை ‘மூன்று சக்கர ஆட்சி’ என்று பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்து மகாசபையை எதிர்த்தவர் நேதாஜி – மம்தா புகழாரம்

இந்து மகாசபையின் பிரித்தாளும் அரசியலை முற்றிலும் எதிர்த்தவர் நேதாஜி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார். சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் நகரில் நடைபெற்ற சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நேதாஜி தனது போராட்டங்கள் மூலம் அனைவரின் நம்பிக்கைகளையும் ஒருவர் மதிக்க வேண்டும் என்பதையே […]

Categories
தேசிய செய்திகள்

அரசு, பெருநிறுவன பத்திர வெளிநாட்டு முதலீடு உச்சவரம்பு உயர்வு ….!!

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (வியாழக்கிழமை) அரசு மற்றும் பெருநிறுவன (கார்ப்பரேட்) பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான (எஃப்.பி.ஐ) முதலீட்டு வரம்பை உயர்த்தியது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று  (வியாழக்கிழமை) அரசு மற்றும் பெருநிறுவன (கார்ப்பரேட்) பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான (எஃப்.பி.ஐ) முதலீட்டு வரம்பை உயர்த்தியது. இதனால் நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முந்தைய விதிகளின்படி, ஒரு வெளிநாட்டு முதலீட்டாளரின் குறுகிய கால முதலீடுகள் 20 விழுக்காட்டை தாண்டக்கூடாது. இந்த விதி பெருநிறுவன (கார்ப்பரேட்) பத்திரங்களுக்கும் பொருந்தும். இந்நிலையில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

பக்கத்து கடையிலிருந்து காசு எடுக்கலாம் – ஃபோன்பே ஏடிஎம்

ஃபோன்பே செயலி மூலம் அருகிலுள்ள கடைகளிலிருந்து பணத்தை பெற உதவும் ஃபோன்பே ஏடிஎம் என்ற புதி வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முன்னனி பண பரிமாற்ற செயலிகளில் ஒன்றான ஃபோன்பே, புதிதாக ஏடிஎம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த ஃபோன்பே ஏடிஎம், சாதாரண ஏடிஎம்கள் போல இருக்காது. சொல்லப்போனால் இதில் இயந்திரங்களே இருக்காது. மாறாக பயனாளர்கள், தங்கள் மொபைலிலுள்ள ஃபோன்பே செயலியிலுள்ள ‘Stores’க்கு செல்லவேண்டும். அதிலுள்ள ‘PhonePe ATM’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஸ்மீர்… சிறப்பு அந்தஸ்து ரத்து…. வழக்குகள்… உத்தரவு ஒத்திவைப்பு…!!!

ஜம்மு காஸ்மீர்க்கு  சிறப்பு அந்தஸ்து ரத்து,  செய்யப்பட்டதற்கு  எதிரான வழக்குகளை  தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இது குறித்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.கே.கவுல், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோரது அமர்வில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்தது. இன்றைய விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜம்மு காஷ்மீரின் அரசியல் சாசனத்தை திருத்தும் அதிகாரம், இந்திய அரசியல் சாசனத்திற்கு இல்லை என்றும், சிறப்பு மதிப்பை இரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் […]

Categories
தேசிய செய்திகள்

பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி… அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல் பரிசு – விமர்சித்த அமித்ஷா.!

பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி நடத்தினால் அரவிந்த் கெஜ்ரிவால்தான் முதல் பரிசு பெறுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்துள்ளார். வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி  டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகின்றது. அதேசமயம் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என காங்கிரஸ், […]

Categories
தேசிய செய்திகள்

நீருக்கடியில் அணுசக்தி தடுப்பு, கே4 ஏவுகணையில் சாதித்த இந்தியா!

அண்மையில் இந்தியா நீருக்கடியில் அணுசக்தி தடுப்பு ஏவுகணை தொழில்நுட்பத்தில் சாதித்துள்ளது. கே.4 ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து கட்டுரையாளர் சி.உதய் பாஸ்கர் விவரிக்கிறார். அதுகுறித்து பார்க்கலாம். ஆந்திராவின் கடற்கரைப் பகுதியில், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கி அழிக்கும் கே-4 (எஸ்.எல்.பி.எம்) ஏவுகணை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.19ஆம் தேதி) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையானது மூவாயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள எதிரி இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

குவியல் குவியலாக ஆயுதம்….. ”வெடிபொருட்களுடன் 644 பயங்கரவாதிகள் சரண்”…. அசாமில் அதிரடி ….!!

அசாமில் எட்டு பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 644 பேர் தங்களின் ஆயுதங்களை துறந்து தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். அசாமில் பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 644 பேர் மனம் திருந்தி தங்களின் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். இந்த நிகழ்வு கவுகாத்தி மருத்துவமனையில் உள்ள அரங்கத்தில் நடந்தது. இதில் மாநில முதலமைச்சர் சர்வானந்த சோனாவால், உயர் காவல் அலுவலர்கள் மற்றும் மூத்த அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். இவர்கள் முன்னிலையில் அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளான போடோலாந்து தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு புதுத்திட்டம் ….!!

ஜம்மு: புதிதாக யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீருக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக புதிய தொழில்கொள்கை உருவாக்கப்படும் என மத்திய தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் உறுதியளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் தொழில்முனைவோர், வர்த்தகர்களை மத்திய தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் நேற்று சந்தித்தார். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு புதிதாக யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு தொழில்துறை முதலீடுகளை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

”வெடிகுண்டு பார்சல்” எல்லை பாதுகாப்பு முகாமில் அதிர்ச்சி…. படைவீரர் கைது …..!!

தனது உதவி படைத்தலைவரை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வெடிகுண்டு அடங்கிய பார்சல் ஒன்றை முகாமில் வைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள குடியிருப்பில் அவர் கைது செய்யப்பட்டார். சமர்பல் என்னும் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் கைது செய்யப்பட்டார். வெடி பொருள்களை கையாள்வதில் நிபுணரான சமர்பல், ஜம்மு – காஷ்மீரில் உள்ள தனது முகாமில் வெடிகுண்டு அடங்கிய பார்சல் ஒன்றை வைத்துச் சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

விவசாயம் மூலம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த முடியும் – வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா …!!

வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா இந்தியாவின் பொருளாதாரத்தை விவசாயத் துறையின் மூலம் உயர்த்த என்ன தேவை என்பதை விளக்கினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சர் சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஒரு சீரான பட்ஜெட் உரையை நிகழ்த்துவார் என கருதப்படுகிறது. பட்ஜெட் தொடர்பான அனைத்து விவாதங்களுக்கிடையில், விவசாய பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா பேசிய போது நொறுக்கப்பட்ட பொருளாதாரத்தை விவசாயத்தால் எவ்வாறு புதுப்பிக்க […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இப்படி ஒரு தொண்டனா… குழந்தையின் பெயர் ‘காங்கிரஸ்’… வைரலாகும் சான்றிதழ்..!!

ராஜஸ்தானில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணி செய்து வரும் வினோத் ஜெயின், தன்னுடைய மகனுக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் சூட்டியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் தான் வினோத் ஜெயின். இவர் அங்குள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் வேலைபார்த்து வருகின்றார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.  இவர்  தனது குழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ஆதரவாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்- பாஜக அமைச்சர்

தேச துரோகிகளையும், பாகிஸ்தான் ஆதரவாளர்களையும் நம் நாட்டில் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் தெரிவித்துள்ளார். சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள், நாடு முழுவதும் இன்று கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் பெங்களூருவிலுள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டத்தின் முன் அனைவரும் சமம். திருடன் எப்போதும் திருடன்தான். தேசத்துக்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்: ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு …..!!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசு தினம் வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் குடியரசுத் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதையடுத்து அப்பகுதி அருகே பல தடுப்புகள் அமைத்து காவலர்கள் சோதனை நடத்துகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் துணை இயக்குனர் (டிஜிபி) தில்பாக் சிங் கூறும்போது, “அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

ஒரே கிக்… ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கேரள சிறுவனின் கோல்!

சமூக வலைதளங்களில் வைரலான கேரள அரசுப் பள்ளி சிறுவர்களின் மிரட்டலான ஃப்ரீகிக் கோல் வீடியோ கால்பந்து ஜாம்பவான்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டாலும், கேளரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கால்பந்து போட்டிகள் விளையாடப்படுவதைதான் பார்க்க முடியும். ஏனெனில் அந்த அளவிற்கு கேரளா, மேற்குவங்கத்தில் கிரிக்கெட்டை விட கால்பந்து போட்டிக்கே ரசிகர்கள் முன்னிரிமை அளிப்பார்கள். அதிலும், கேரளாவில் கால்பந்து போட்டிக்கு எப்போதும் தனி மவுஸ் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த […]

Categories
தேசிய செய்திகள்

‘தேவதையை கண்டேன்’ பட பாணியில் மனித உரிமை ஆணையத்தில் புகார்!

 காதலிக்காக மதம் மாறி ஒன்பது மாதங்கள் பயிற்சி எடுத்து முடித்த பின்னரும், காதலியின் குடும்பத்தினர் காதலை ஏற்க மறுத்ததால் மனித உரிமை ஆணையத்தில் காதலன் புகார் அளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் விகராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பாபிலி பாஸ்கர். இவரும் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவரும் காதலித்துவந்துள்ளனர். இருவரும் தங்கள் பட்டப்படிப்பு முடித்தவுடன் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர். ஆனால், மதத்தைக் காரணம்காட்டி பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு அனுமதியளிக்கவில்லை. காதலுக்காக மதம் மாறிய பாஸ்கர், தனது […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தானில் தீர்மானம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைப் போன்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாநிலத் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒவ்வொருவரும் தங்களின் எதிர்ப்பை காட்ட உரிமை உள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

வரலாற்று சின்னமா..? ராமர் பாலம்….. மத்திய அரசு நிலைப்பாடு என்ன…? உச்சநீதிமன்றம் கேள்வி…!!

இந்தியா இலங்கைக்கு இடையே அமைந்துள்ள ராமர் பாலத்தை பழங்கால வரலாற்றுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பாக நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மணல் திட்டுகளான  பாலம் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்ல ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த பகுதியில் சேது சமுத்திரக் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது இந்து மதத்தின் அடையாளம் என்பதால் பண்டைய கால வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

1 1/2 மணி நேரம் தாமதம்….. பயணிகளுக்கு ரூ60,000 இழப்பீடு…… IRCTC நிறுவனம் அறிவிப்பு…!!

அகமதாபாத் to மும்பை இடையிலான தேஜஸ் விரைவு ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால் பயணிகளுக்கு  IRCTC இழப்பீடு வழங்கி இருக்கிறது. புதன்கிழமை நண்பகல் மும்பை வந்த தேஜஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. மும்பை அகமதாபாத் இடியே புறநகர் பகுதிகளுக்கிடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அதில் பயணித்தவர்களுக்கு சுமார் 63 ஆயிரம் ரூபாய் அளவுக்கு ஐஆர்சிடிசி ஐயா சிபிசி இழப்பீடு வழங்க இருக்கிறது அகமதாபாத் […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாற்றில் முதல்முறை” 8 அமைப்பு…. 644 தீவிரவாதிகள்…. 177 ஆயுதங்களுடன்… போலீசில் சரண்….!!

அசாம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட 8 தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் 177 ஆயுதங்களுடன் காவல்நிலையத்தில்  சரணடைந்துள்ளனர். அசாம் மாநிலம் குவாஹாத்தி பகுதியில் முதலமைச்சர் சர்பானந்த சோனோவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் NDS, PRL, LM,மாவோயிஸ்ட் உள்ளிட்ட 8 அமைப்புகளைச் சேர்ந்த 644 பேர் சரண் அடைந்தனர். AK 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 177 ஆயுதங்களையும், வாக்கி டாக்கிகளையும் காவல்துறையினரிடம்  ஒப்படைத்தனர். அசாமில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் சரணடைந்திருப்பது இதுவே முதல் முறை […]

Categories
தேசிய செய்திகள்

தீ விபத்து….. உயிரை பணயம் வைத்து….. 10 பேரை காப்பாற்றிய….. 12 வயது சிறுமிக்கு வீர தீர விருது…!!

மும்பையில்  ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேரை காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையில் கிறிஸ்டில்  55 அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. இந்த விபத்தை கண்டு 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பில் சென்று பத்து பேரை காப்பாற்றினார். அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக்கொண்ட பாடங்களை நினைவில் வைத்து தீயில் சிக்கியவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

இடிந்து விழுந்த மசூதியைக் கட்ட ஒன்றிணைந்த இந்து மக்கள்!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தில் புதிய மசூதி ஒன்றைக் கட்ட இந்து – இஸ்லாமிய மதத்தினர் ஒன்றிணைந்தனர். இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக, கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராம்புரா கிராமத்தில் உள்ள ஒரு பழைய மசூதி இடிந்து விழுந்தது. இதனை அறிந்த இந்து சுவாமிஜி மசூதி இடிந்த இடத்தைப் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து மகாநந்த சுவாமி என அழைக்கப்பட்ட அவர், அந்த இடத்தில் பூமி பூஜை செய்து புதிய கட்டுமானத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இராமர் சேது பாலம்: 3 மாதங்களுக்குப் பின் பரிசீலிக்கிறோம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ..!

இராம சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்  பாஜக மூத்த தலைவரும்  சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என  உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. இராமர் பாலம்  அல்லது ஆதாமின் பாலம் (Adam’s Bridge) என்று அழைக்கப்படும். இது  தமிழ்நாட்டில்  உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் உருவான ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ நீளம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மத்திய பட்ஜெட்… ஒரு வரலாற்று பார்வை….. !!

இந்தியாவின் தேவைகள் என்ன ? என்பதை வகைப்படுத்தி அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கும் பட்ஜெட் முதலில் எப்போது ? தொடங்கியது யார் ? முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதை சுருக்கமாக பார்க்கலாம் என்ற பெயர் ”பூசெட்டி”  பிரெஞ்சு சொல்லிலிருந்து உருவானது. பூசெட்டி என்ற பிரெஞ்ச் சொல்லுக்கு லெதர் பேக் என்று பொருள். இந்தியாவில் ஈஸ்ட் இந்தியாகம்பனி தான் முதன் முதலில் பட்ஜெட் என்ற விஷயத்தை துவங்கியது. 1860 ஆம் ஆண்டு ஜான் வில்சன் என்ற ஆங்கிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

‘பிரதமர் அலுவலகத்திற்கு அஞ்சாமல் முடிவெடுத்த ராஜ்நாத்’ – காங்கிரஸ் வாழ்த்து!

டீசல் நீர் மூழ்கிக் கப்பல்களைத் தயார் செய்வதற்காக அதானி – எச்.எஸ்.எல். குழுமங்கள் இணைந்து சமர்ப்பித்த ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்த நிலையில், அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. ‘திட்டம் 75I’ (Project 75I) என்பது ஆறு டீசல் நீர் மூழ்கிக் கப்பல்களை 45,000 கோடி ரூபாய் மதிப்பில் தயார் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இதனை அதானி – எச்.எஸ்.எல். குழுமங்கள் இணைந்து தயாரிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், சில […]

Categories

Tech |