Categories
தேசிய செய்திகள்

லாஸ்ட் மினிட்ல உங்க ரயில் டிக்கெட்டை கன்பார்ம் பண்ணனுமா?…. இதோ சூப்பர் ஐடியா….!!!!!

கன்பார்ம் ரயில் டிக்கெட் பெறுவதற்கு ஒரு சூப்பரான ஐடியா இருக்கிறது. அதுகுறித்து நாம் இங்கே தெரிந்துகொள்வோம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளமான irctc.co.in-க்குச் சென்றால் நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முயற்சிக்கும் நேரத்தில் இருக்கைகள் நிரம்பி விடும். அத்தகைய நிலையில் விரைவில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒரு எளிய அமைப்பை இங்கே தெரிந்துகொள்வோம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள் நுழைந்த பின், வலது பக்கத்தில் சில விருப்பங்களைப் பெறுவீர்கள். அவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை எதிரொலி!…. அமேசான் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சம்மன்….!!!!!

அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக ஊழியர் அமைப்புகள் தொழிலாளர் அமைச்சகத்தை அணுகியுள்ளது. அமேசான் ஊழியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், அதற்கு எதிராக நிறுவனத்துக்கு தொழிலாளர் அமைச்சகம் சம்மன் அனுப்பி இருக்கிறது. ஊழியர் சங்கத்தின் புகாரின் படி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசில், நிறுவனம் தன் நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அமேசானிலிருந்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு மெயிலில், வருகிற நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பணிநீக்க செயல்முறையை […]

Categories
தேசிய செய்திகள்

விமான சேவையை விரிவுபடுத்தும் நோக்கம்…. ஏர் இந்தியா வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் அடிப்படையில் ஏர் இந்தியா இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு புதியதாக 6 விமானச் சேவையை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தி இருக்கிறது. மும்பை நகருடன் நியூயார்க், பாரீஸ், பிராங்க்பர்ட் நகரங்களை இணைக்கும் விமான சேவையையும், இடை நில்லா விமானச் சேவையை மீண்டும் தொடங்கும் அடிப்படையில் தில்லி நகர் கோப்பன்ஹேகன், மிலன், வியன்னா போன்ற நகரங்களை இணைக்கும் விமான சேவையையும் அறிமுகப்படுத்துகிறது. புது […]

Categories
தேசிய செய்திகள்

குக்கா் குண்டு வெடிப்பு சம்பவம்: குற்றவாளி WhatsApp-ல் ஆதியோகி சிவன் படம்…. பின்னணி என்ன?… போலீஸ் தீவிர விசாரணை….!!!!

மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் நிகழ்ந்த குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி தன் வாட்ஸ் அப் டிஸ்ப்ளே புகைப்படமாக கோவையில் அமைந்திருக்கும் ஆதியோகி சிவன் சிலையை வைத்து இருந்தது காவல்துறையினருக்கு பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. சென்ற செப்டம்பர் மாதம் தமிழகத்தில 3 நாட்கள் வந்து தங்கியிருந்தபோது, குற்றவாளி முகமது ஷாரிக் (24) எடுத்த அந்தப் புகைப்படத்தை தன் வாட்ஸ்அப் டிஸ்ப்ளேவில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தன் அடையாளத்தை மறைக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து… டிரெண்டாகி வரும் #2CModelOfGujarat ஹேஸ்டேக்…!!!!

27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகின்றது. குஜராத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக முன்வைத்துள்ள #2CModelofGujarat என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருவது பாஜகவினரை அதிர்ச்சடைய செய்துள்ளது. இந்த நேரத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி  என மும்மூனை போட்டி ஏற்பட்டுள்ளது. 27 ஆண்டுகாலமாக அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. சென்ற இரண்டு நாட்களாக குஜராத் மாடலுக்கு எதிராக 2சி மாடல் ஆப் குஜராத் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங் செய்வோருக்கு….. சூப்பர் கார்டை பயன்படுத்தினால் ரூ. 20,000 வரை கிடைக்கும்…. அதிரடி ஆஃபர்கள்…..!!!!!

உலக அளவில் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக இருக்கும் flipkart நிறுவனமானது ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து சூப்பர் எலீட் கிரெடிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கிரெடிட் கார்டை ப்ளிப்கார்ட், மிந்த்ரா, கிளியர்ட்ரிப் போன்ற ஷாப்பிங் தளங்களில் பொருட்களை ஷாப்பிங் செய்யும்போது பயன்படுத்தினால் ஏராளமான சலுகைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி 20,000 ரிவார்டுகள் வரை கிடைக்கும். அதன் பிறகு முதலில் கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்யும் போது ஆக்டிவேட் சலுகையாக flipkart 500 சூப்பர் காயின்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் நாளை அதாவது நவம்பர் 24ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி….. 50 GB டேட்டா இலவசம்?…. மக்களுக்கு போலீஸ் திடீர் எச்சரிக்கை…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க டூப்ளிகேட்டா?…. ராணுவத்தில் 4 மாதங்கள்….. வெளியான பரபரப்பு உண்மைகள்…..!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் ராணுவத்தில் கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இளைஞர் ராணுவப் பணியில் சேர்க்கப்படவே இல்லை என்ற அதிர்ச்சிகர உண்மை தெரியவந்திருப்பதாக அவர் தரப்பில் அளிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவ அடையாள அட்டை, ராணுவ சீருடை உடன் அவர் போலீஸ் நிலையத்தில் அளித்து இருக்கும் புகார் ராணுவத்தில் ஆள் சேர்ப்பில் நடைபெற்ற அதிர்ச்சியளிக்கும் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுவதாவது, உத்தரப்பிரதேசம் […]

Categories
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா கொலை வழக்கு: “துண்டு துண்டாக வெட்டி வீசிடுவேன்”…. சிக்கிய பரபரப்பு புகார் கடிதம்…..!!!!

அப்தாப் அமின் பூனவாலா (28) என்பவா் ஷ்ரத்தா வாக்கா் என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு தில்லி மெஹரோலியிலுள்ள தன் வீட்டில் 3 வாரங்களாக குளிா் சாதன பெட்டியில் வைத்து இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அப்தாப் அந்த உடலின் பாகங்களை நகரின் பல இடங்களிலும் வீசியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. திருமணம் செய்யாமலேயே இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து வந்த சூழ்நிலையில் ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“சொத்துகளைப் பணமாக்கும் திட்டம்”…. நடப்பு நிதியாண்டில் எவ்வளவு கோடி வருவாய்?…. மத்திய அரசு தகவல்…..!!!!

மத்திய அரசு செயல்படுத்தி வரும் உள் கட்டமைப்பு சொத்துகளைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் 2022-2023ம் நிதி ஆண்டில் இதுவரையிலும் ரூபாய்.33,422 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நாட்டில் உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக புதுமையான மாற்று வழிகளில் நிதி திரட்டும் நோக்கில் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டத்தினை மத்திய அரசு சென்ற ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அந்த வகையில் மத்திய அரசின் உள் கட்டமைப்பு சொத்துக்களை 4 வருடங்களில் பணமாக மாற்றி, அதன் மூலம் ரூபாய்.6 லட்சம் கோடி திரட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“இன்று காலை 7 மணி”… அருணாச்சலப் பிரதேசத்தில் நலநடுக்கம்… வெளியான முதற்கட்ட தகவல்…!!!!

அருணாசலப் பிரதேசத்தில்  உள்ள பாசர் நகரத்தில் எரளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நகரத்திலிருந்து  58 கிலோமீட்டர் வட-மேற்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 7 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து வெளியான முதல் கட்ட தகவலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

புலிகளை நோக்கி கற்களை வீசும் அநியாயம்… கொதித்துப் போன நடிகை ரவீனா தாண்டன்‌…!!!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் புலிகள் மீது பார்வையாளர்கள் கற்கள் வீசுவதாக நடிகை ரவீனா புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் வான்விஹார் என்னும் பகுதியில் தேசிய உயிரியல் பூங்கா  அமைந்துள்ளது. இந்த பூங்காவில் தனிப்பகுதியில் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள புலிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் புலிகள் மீது கற்களை வீசுகிற கொடூர சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தி நடிகை ரவீனா தாண்டன் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து கொந்தளித்து போனார். […]

Categories
தேசிய செய்திகள்

“இனி விமானத்தில் தேங்காய் கொண்டு செல்லலாம்”….. சபரிமலை பக்தர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜையானது நடைபெற்று வருவதால் நடை திறக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு வருடம் தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள். இந்த பக்தர்களின் வசதிக்காக தற்போது கோவில் நிர்வாகம் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அவசர சிகிச்சை மையம் மற்றும் தரிசன நேரம் நீட்டிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% GST விதிக்கப்படுமா?…. நிதியமைச்சா்கள் குழு பரிந்துரைக்க வாய்ப்பு….!!!!

GST விதிப்பில் மாற்றங்கள் புகுத்துவது குறித்து மேகாலய முதல்வரும் நிதி அமைச்சருமான கான்ராட் சங்மா தலைமையிலான மாநில நிதியமைச்சா்கள் குழு ஆராய்ந்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% GST விதிப்பதற்கு அந்த குழு பரிந்துரைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இப்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18% GST விதிக்கப்படுகிறது. திறன்சாா்ந்த இணையவழி விளையாட்டுகள், வாய்ப்புகள் சாா்ந்த விளையாட்டுகள் என அனைத்துக்கும் தற்போது அதிகபட்சம் GST வரம்பான 28 சதவீதத்தை விதிக்க அமைச்சா்கள் குழு பரிந்துரைக்க இருக்கிறது. ஆகவே அனைத்துவித […]

Categories
தேசிய செய்திகள்

எல்லை பாதுகாப்பில் ட்ரோன் கண்காணிப்பு…. இந்திய ராணுவத்தினர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

இந்திய நாட்டின் எல்லைப் பகுதியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதாவது சமீப  காலமாகவே பாகிஸ்தான் நாட்டிலிருந்து ட்ரோன்களின்‌ ஊடுருவல் அதிக அளவில் இருக்கிறது. இந்த ட்ரோன்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை கடத்துவதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் ட்ரோன்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என்று ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக ட்ரோன்களை உள்நாட்டில் கொள்முதல் செய்யும் அமைப்பு தொடர்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் ராணுவம் தகவல் கேட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் தகவல்!…. பி.எம் கிசான் திட்டத்தில் ஆதார் இணைக்காத விவசாயிகள்….. ரூ. 6000 பெறுவதில் திடீர் சிக்கல்….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப் பட்ட நிலையில், தமிழகத்தில் 48 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அந்த சமயத்தில் நில உரிமை தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிப்பது கட்டாயமாக படவில்லை என்பதால் நிறைய விவசாயிகள் திட்டத்தில் இணைந்தனர். அதன் பிறகு திட்டத்தில் பயன்பெறுவதற்காக பதிவு செய்திருந்த போலி விவசாயிகள் 37 லட்சம் பேர் திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… போதையில் மகனின் வெறிச்செயல்…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூர கொலை….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

தலைநகர் டெல்லியில் பாலம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு பயங்கர அலரல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிணமாக இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள்!… நாங்கதான் அதில் First இருக்கோம்!…. கெத்து காட்டும் ஏர் இந்தியா…. வெளியான தரவரிசை பட்டியல்….!!!!

பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற 4 மெட்ரோ விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட உள் நாட்டு விமானங்களின் நேர செயல் திறனை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதனடிப்படையில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், விமானங்களை உரிய நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதையடுத்து 2ஆம் இடத்தில் விச்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும், கடைசி இடத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனமும் இருக்கிறது. அத்துடன் இந்த வருடம் உள் நாட்டு விமான […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!…. ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியீடு….. அறிவிப்பு…..!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகிறார்கள். தற்போது மழை மற்றும் குளிர் காரணமாக திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதன் பிறகு நேற்று 69,587 பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், 28,645 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து 4.35 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் சார்பில் 300 தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் ஆன்லைனில் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தில் புதிய ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த் போஸ் நியமனம்…. இன்று பதவியேற்பு….!!!!!

மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கடந்த 17-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்தார். அதன்படி டாக்டர் சிவி ஆனந்த் போஸ் என்பவர் மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். இவருடைய பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், கொல்கத்தா ஹைகோர்ட் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

12 பா.ஜ.க நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடைநீக்கம்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

குஜராத் சட்ட சபைக்கு 2 கட்டங்களாக டிசம்பர் 1, 5 போன்ற தேதிகளில் ஓட்டுப் பதிவு நடைபெற இருக்கிறது. டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல்கட்ட தேர்தலின் போது 89 தொகுதிகளுக்கும், 5ஆம் தேதி 2வது கட்ட தேர்தலின் போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து டிச..8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும். அம்மாநிலத்தில் சென்ற 1995ம் வருடம் முதல் ஆட்சி அதிகாரத்திலுள்ள பா.ஜ.க. இம்முறையும் வெற்றியை தக்க வைத்துகொள்ளும் பணிகளில் இறங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அன்று மசாஜ்… இன்று தடபுடலான உணவு…. சிறையில் மந்திரி சத்யேந்தா் ஜெயினின் சொகுசு வாழ்க்கை…. பரபரப்பு வீடியோ….!!!!!

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவுசெய்த வழக்குப்பதிவு அடிப்படையில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்தா் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின், வைபவ் ஜெயின் போன்றோருக்கு எதிரான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை சென்ற வியாழக்கிழமை நீதிமன்றமானது தள்ளுபடி செய்தது. சில நாட்களுக்கு முன்பு திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துகொள்ளும் வீடியோவானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீரில் இன்னும் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர்”…. ராணுவ மூத்த அதிகாரி வெளியிட்ட தகவல்…..!!!

காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க இந்திய ராணுவ ‘ஆபரேஷன் ஈசி’ என்கின்ற பெயரில் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. இந்த ஆப்ரேஷன் கடந்த 1948 ஆம் ஆண்டு நடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று 75 ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தலைமையில் பூஞ்ச் மாவட்டம் மக்கள் மற்றும் ராணுவத்தினர் இதை உற்சாகமாக கொண்டாடினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. இந்திய பொருளாதாரம் 2047 ஆம் ஆண்டு இவ்வளவு ட்ரில்லியன் டாலராக உயருமா?…. முகேஷ் அம்பானி கூறிய தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயான் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் 10 வது ஆண்டு பட்டளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தொழிலாளர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், இந்திய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்னேபோதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது பொருளாதார வளர்ச்சியில் இந்திய நாடு பல்வேறு மாற்றங்களை காணும், பெரிய வளர்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!…. இந்த 5 பாக்டீரியாவால்‌‌ 7 லட்சம் மக்கள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலகமெங்கும் கடந்த 2019 ஆண்டில் 77 லட்சம் பேர் 33 வகையான பொதுவான பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்தனர். இவற்றில் 50க்கும் மேலான உயிர் இழப்புகளுக்கு 5 பாக்டீரியாக்கள் மட்டுமே காரணம். அந்த பாக்டீரியாக்கள் இ.கோலி, எஸ். நிமோனியா, கே.நிமோனியா, எஸ்.ஆரியஸ் மற்றும் ஏ.பவுமனி ஆகியவைகள் ஆகும். இந்த பாக்டீரியாக்கள் இந்தியாவில் மட்டும் கடந்து 2019 ஆம் ஆண்டில் 6 லட்சத்து 80 பேரின் உயிர்களைப் பறித்துள்ளது. இந்த ஆய்வு தகவல்களை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘தி லேசன்ட்’ […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே!… குழந்தைகளுக்கான பால் ஆதார் புதுப்பிப்பு இலவசம்….. அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

நாடு முழுவதும் ஆதார் கார்டுகளை வழங்கும் நிறுவனமான UIDAI, நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்களது ஆதார் அட்டைகளைப் புதுப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளது. சென்ற 10 வருடங்களில் மீண்டும் ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்காத குடிமக்கள் தங்களது ஆதார் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என UIDAI கூறியுள்ளது. ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்ததேதி ஆகிய விபரங்களைப் புதுப்பிக்க ரூபாய்.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர்த்து உங்கள் ஆதார் கார்டில் கைரேகை, கருவிழி ஆகிய பயோமெட்ரிக் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இதை செய்யலன்னா உங்களுக்கு பென்ஷன் வராது…. உடனே இந்த வேலையை முடிங்க…..!!!!!

ஓய்வூதியதாரர்கள் அவர்களின் லைப் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை எனில் தங்களுடைய ஓய்வூதிய நிதியினைப் பயன்படுத்த இயலாது என கூறப்பட்டு உள்ளது. டிஜிட்டல் லைப் சான்றிதழை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் சமர்ப்பிக்கலாம். அத்துடன் வங்கி (அ) திட்டத்தின் போர்ட்டலுக்குச் சென்றும் ஆன்லைன் மூலம் லைஃப் சான்றிதழைச் சமர்ப்பித்துக்கொள்ளலாம். ஓய்வூதியம் பெறக்கூடிய ஒவ்வொருவரும் வருடந்தோறும் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஆண்டு முடிந்தபின் அந்த சான்றிதழை சமர்பிக்காவிட்டால் ஓய்வூதியம் பெறுவதில் உங்களுக்கு சிக்கல்தான். இதன் காரணமாக உங்களின் டிஜிட்டல் லைப் […]

Categories
தேசிய செய்திகள்

உள்நாட்டு விமான போக்குவரத்து விவரங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நடப்பாண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை உள்நாட்டு விமான போக்குவரத்து விவரங்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குனராக நேற்று வெளியிட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை காலகட்டத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு அக்டோபர் மாத வரை பயணித்த உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 59.16% அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த ஆண்டு 6,20,96,000 பயணிகள் பயணம் செய்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

எஃப்டி கணக்குக்கு அதிக வட்டி…. எந்த வங்கியில் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்ததில் இருந்து பல்வேறு வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது RBI ரெப்போ விகிதங்களை 4 புள்ளிகள் உயர்த்தி இருக்கிறது. இந்த வருடம் மே மாதம் துவங்கி பல வங்கிகள் நிலையான வைப்புத் தொகைக்கான (எஃப்டி) வட்டியை அதிகரித்து வருகிறது. பொது, தனியார் மற்றும் சிறு நிதி வங்கிகளின் வட்டி விகித உயர்வைப் பார்க்கும் போது இனி  நிலையான வைப்புத்தொகைகளுக்கு நல்ல விதத்தில் வட்டிவிகிதம் வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. உடனே இந்த வேலையை செய்து முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

இப்போது மாதந்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் EPFO கணக்கில் சேர்வதால், அவர்களும் தங்களின் ஆன்லைன் நாமினேஷனை தாக்கல் செய்யவேண்டும். ஆகவே நீங்கள் இதுவரை உங்களது நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை எனில், ஆன்லைனில் எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம். முதன் முதலில் உங்களது UAN எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி UAN போர்ட்டலில் லாகின் செய்யவும். இதை முதல் முறையில் நீங்கள் லாகின் செய்கிறீர்கள் எனில் இதற்கு பாஸ்வேர்டை உருவாக்கவும். இச்செயல்முறையை முடித்தப் பிறகு பின்வரும் வழிமுறைமுறைகளை பின்பற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேநீர் குடித்துவிட்டு.. பணம் தராத பா.ஜ.க எம்.எல்.ஏ…!!!

பாஜக எம்.எல்.ஏ தேநீர் குடித்துவிட்டு பணம் தரவில்லை என டீக்கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தற்போதைய எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான பாஜகவை சேர்ந்த கரண்சிங் வர்மா தனது தொகுதிக்கு காரில் சென்று இருக்கின்றார். அப்போது அவரின் காரை மறித்த தேநீர் கடை உரிமையாளர் ஒருவர் கரண்சிங் வர்மா மற்றும் அவருடன் வந்த கட்சியினர் தேநீர் குடித்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி கடைசி தேதி வந்தாலும் நோ ப்ராப்ளம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொகை முறையாக வந்து சேரும். ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சேவையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் வங்கிகள்,தபால் நிலையங்கள் மற்றும் தபால் துறை வங்கி ஆகியவை ஓய்வூதியதாரரின் வீட்டிற்கு நேரடியாக வாழ்நாள் சான்றிதழை வாங்கி சமர்ப்பிக்கும் சேவையை வழங்கி வருகின்றது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விமானத்தில் இப்படி ஒரு சலுகையா?…. அசத்தல் அறிவிப்பு…..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் சுவாமி தரிசனம் செய்ய கோடிக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அதேசமயம் இந்த வருடம் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஜனவரி 20ஆம் தேதி வரை தங்கள் பைகளில் தேங்காய் எடுத்துச் செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 20 வரை விமானத்தில்….. சபரிமலை ஐய்யப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில்  இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகை புரிவார்கள்.  நவம்பர் 17 முதல் முதல் ஐய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கடும் விரதம் இருப்பார்கள். மேலும் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெறும். அதுமட்டுமில்லாமல் ஜனவரி 24ஆம் தேதி மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

சார் என்னை மன்னிச்சிடுங்க….மாணவனின் கொடூர செயல்…. எச்சரித்த போலீசார்….!!!!

கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்த  மாணவனை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். பெங்களூருவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.  அங்கு படிக்கும்  ஒரு மாணவர் மாணவிகளின் கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் மாணவன் மீது பாலியல் துன்புறுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில்  குற்றம் செய்யப்பட்ட மாணவர் மன்னிப்பு கடிதம் எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மேடையில் ஏறி மாணவிகளுடன் நடனம் ஆடி அசத்திய ரோஜா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

கலை நிகழ்ச்சியில் மந்திரி ரோஜா மேடையில் ஏறி நடனமாடிய விடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநில அமைச்சரவையில் ரோஜா கலாச்சாரம், சுற்றுலா மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக இருக்கிறார். இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பாக நேற்று திருப்பதியில் வைத்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ரோஜா கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். இதனையடுத்து மந்திரி ரோஜா கலை நிகழ்ச்சியை பார்த்துக் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா கொலை பண்ணுவாங்க…? கள்ளக்காதலர்களை பிரிக்க சாமியார் செய்த சதி திட்டம்… உச்சகட்ட கொடுரம்…!!!!

2  பேரை கொலை செய்த சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேலா பவுடி  காட்டில் வாலிபர் மற்றும் இளம் பெண் என 2  பேரின் சடலங்கள் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரின்  சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் நுழைந்த மர்ம நபர்… சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்… அதிரடி நடவடிக்கை…!!!!!

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொலை செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் ராம்கர் செக்டர் பகுதி சர்வதேச எல்லை வழியாக மர்ம நபர் ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் சர்வதேச எல்லையை  கடந்த பின் இந்திய எல்லை வேலிகளை தாண்ட முயற்சி செய்துள்ளார். அப்போது எச்சரிக்கையை மீறி நுழைந்த அந்த மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணமா?…. டுவிட்டரில் நிறுத்தப்பட்ட ப்ளூ டிக் …. எலான் மஸ்க் விளக்கம்….!!!!

டுவிட்டரில் ப்ளூ டிக்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க் . இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல ஊடகமான டுவிட்டரை வாங்கினார். அதனை தொடர்ந்து அவர் நிறுவனத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். மேலும் டுவிட்டர் பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை பெற மாதம் 662 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான்  மஸ்க் […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!…. கைலாசத்தில் 25 பேருக்கு வேலையா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பாலியல் சர்ச்சைகள் மற்றும் மோசடி வழக்குகளில் சிக்கி சில ஆண்டுகளுக்கு முன்னர் தலைமறைவான சாமியார் தான் நித்தியானந்தா. அதன் பிறகு இவர் திடீரென இந்துக்களுக்கு என்று கைலாசம் என்னும் இந்து நாடு அமைத்திருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கைலாசம் எங்கே இருக்கின்றது என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாத நிலையில் கைலாசவிலிருந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் ஆன்மீக பிரசங்கங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் கைலாசவில் வேலை வாய்ப்பு என்று சமூக முகநூல் மூலம் அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

அந்நியன் பட பாணியில்…. அதிரடிப்படை காவலர் செய்த வேலையை பாருங்க…. பெரும் அதிர்ச்சி….!!!!

காவல் துறை மற்றும் திருடர்களுக்கு இடையிலான புது பரிமாணத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிரடிப்படை தலைமைக் காவலர் வெளிப்படுத்தி இருக்கிறார். 3 சிறார்கள் உட்பட செல்லிடப்பேசி திருடர்கள், பிக்பாக்கெட் கும்பலை வைத்துக்கொண்டு அதன் தலைவனாக அதிரடிப்படை தலைமைக் காவலர் மேகலா ஈஸ்வர் என்ற ஈஸ்வர் பிரசாத் (35) செயல்பட்டுள்ளார். செல்லிடப்பேசி திருட்டு வழக்கில் கைதாகிய 2 குற்றவாளிகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈஸ்வர் தலைமையில் வேலை செய்து வருவதை ஒப்புக்கொண்டனர். அதன்பின் சிறுவர்களை தவறாக வழி நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக…. குறும்படத் திருவிழா… இந்திய ராணுவம் ஏற்பாடு….!!!!

ஜம்மு காஷ்மீர் லடாக்கில் முதல்முறையாக குறும்படத் திருவிழா நிகழ்ச்சியை இந்திய ராணுவமானது ஏற்பாடு செய்திருக்கிறது. எல்லை பாதுகாப்பு பணியில் மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மக்களின் சினிமா திறமையை வெளிக்கொணரும் அடிப்படையில் இந்த குறும்படத் திருவிழாவை நடத்த இருக்கிறது. இவற்றிற்கு “தில் மாங்கோ மோர்” என பெயரிட்டுள்ளனர்.  இந்திய ராணுவத்தின் கேப்டன் ராகுல்பலி அவர்களின் யோசனையின் படி ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த “தில் மாங்கோ மோர்”  திட்டம்.  5 […]

Categories
தேசிய செய்திகள்

150 வருட பழமையான பாலம் அகற்றம்…. புதிய பாலம் எப்போது?….. ரயில்வே துறை வெளியிட்ட தகவல்….!!!

மும்பையில் புறநகர் பாதையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் மஸ்ஜித் பண்டர் இடையே 150 ஆண்டுகள் பழமையான இரும்பினாலான கர்னக் மேம்பாலம் இருந்தது. 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில் கடந்து 2014 ஆம் ஆண்டு பெருமளவு போக்குவரத்து குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த மேம்பாலத்தை ஆய்வு செய்த மும்பை ஐஐடி நிபுணர்க் குழு கடந்து 2018 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பாதுகாப்பபற்றது என்று சான்றிதழ் அளித்தது. இதனையடுத்து பாலத்தை அகற்ற ரயில்வே திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்…. அவர் யார் தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிறையில் உள்ள அவரது படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களை படிப்பதும், அவரது கால்களை ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதாகவும் இந்த சிசிடி காட்சிகள் செப்டம்பர் 13 […]

Categories
தேசிய செய்திகள்

கைலாசா நாட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலை…. தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தால் போதும்…. நீங்க ரெடியா….????

கைலாச என்ற தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பிலிருந்தே நித்யானந்தா கூறி வருகிறார். கைலாச நாட்டிற்கான பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை வெளியிட்டு வைரலாக்கி வந்தார். ஆனால் இந்த கைலாச நாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் கைலாச நாட்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என நித்தியானந்தா ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிளம்பர் தொடங்கி வெளியுறவு துறை வரை பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

PERSONAL LOAN வாங்க போறீங்களா?… எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தற்போதைய காலக்கட்டத்தில் குறைவான தனி நபர் கடன் வட்டி எனில் 8.9% -10.55% ஆகும்.  தற்போது குறைவான வட்டியில் தனி நபருக்கான கடனை வழங்கக்கூடிய வங்கிகள் குறித்து நாம் இப்பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம். பஞ்சாப் நேஷனல் வங்கி: இந்த வங்கியில் 9.8% வட்டியில் ரூபாய்.5 லட்சத்துக்குரிய தனி நபர் கடனானது வழங்கப்படும். 5 வருட கால தவணை திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.10,574 செலுத்தவேண்டும். யெஸ் வங்கி இவற்றில் 10% வட்டி எனும் அடிப்படையில் தனி […]

Categories
தேசிய செய்திகள்

“அவசர சிகிச்சை மையம், கூடுதல் தரிசனம்”…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மண்டல பூஜை நடந்து வருவதால் நாள்தோறும் அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகிறார்கள். இன்று கோவிலில் களப பூஜை, களபம் சார்த்தல் மற்றும் களபம் அபிஷேகம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சில பக்தர்களுக்கு 18 படிகள் ஏறும் போது மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவசர சிகிச்சை மையம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…..!!!!

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகளானது பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. அந்த திட்டங்கள் குறித்து இங்கே நாம் தெரிந்துகொள்வோம். சுகன்யா சம்ரிதி யோஜனா  பெண் குழந்தைகளின் உயர் கல்வித் தேவைகளை பூர்த்திசெய்யும் அடிப்படையில் மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. சென்ற 2015ம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இத்திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். இதில் குறைந்தப்பட்ச தொகையாக ரூபாய். 250 -ரூ.1.5 […]

Categories
தேசிய செய்திகள்

லொல்..லொல் என குரைத்த கர்ப்பிணி நாய்!…. கடுப்பான மாணவர்களின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி….!!!!!

நன்றி உள்ளம் கொண்ட நாயை ஈவு இரக்கமின்றி அடித்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் கர்ப்பிணி நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த கர்ப்பிணி நாயை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சேர்ந்து அடித்து கொன்று உள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், 4 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கர்ப்பிணி நாயை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து பேஸ்பால் மட்டைகள், மரக்குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை […]

Categories

Tech |